Headlines

மிஹின் லங்கா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது!




பயணிகளுடன் பங்களாதேஷ் தலைநகர் டாக்கா நோக்கி பயணத்தை ஆரம்பித்த மிஹின் லங்கா விமானம் சிறிது நேரத்தில் கட்டுநாயக்க விமான தளத்தில் தரையிறக்கப்பட்டது.

நேற்று முற்பகல் 9.30 மணியளவில் குறித்த விமானம் டாக்கா நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மீண்டும் 10.20 மணியளவில் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த விமானம் நேற்று பிற்பகல் மீண்டும் டாக்கா நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *