Headlines

வாகனங்கள் கொள்வனவு செய்ததை நிரூபித்தால் இராஜினாமா.?

வாகனம் கொள்வனவு செய்ததை அரசு நிரூபித்தால் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.

Read More

மெகசின் சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு!

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெளிக்கடை சிறைச்சாலைகளுக்கான பிரதான வாயில் முற்றாக மூடப்பட்டுள்ளதோடு எந்தவொரு வாகனமும் அதனூடாக பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். சில நாசகார கும்பல்கள் சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்து குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதே பாதுகாப்பு…

Read More

மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு!

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், திருமலை மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அசங்க ஆகியோரை இன்று காலை (23)  சந்தித்துக் கலந்துரையாடினார்.  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த அவர், வருமானம் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட உணவுத் தேவைக்காக உலர் உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை…

Read More

தேர்தல் காரியாலயத் திறப்பு விழா! பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் நாஸரின் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா அண்மையில் (09) வட்டாரக் குழுத் தலைவர் மன்சூர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இதேவேளை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தேர்தலில்  மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும்…

Read More

நான் குற்றமற்றவன்: துமிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை வழக்கில் தான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகியிருந்த துமிந்த சில்வா எம்.பி, வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘எனக்கு எதிராக சேறு பூசுவதால் நான் அஞ்சப்போவதில்லை….

Read More

‘அமைச்சர் ரிஷாட்டினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டங்களை முறியடிக்க சதி’ அக்கரைப்பற்றில் டாக்டர் ஹஸ்மியா!

–ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்களை முறியடிக்க பல்வேறு வழிகளில் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்று மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் பிரதேசங்களில்  கடந்த வியாழக்கிழமை (28) மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்தவகையில், குடியிருப்பு பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக்…

Read More

மைத்திரிபால – ஜனாதிபதி அவசர சந்திப்பு?

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் மைத்திரிபால தலைமையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் நிகழ்வொன்று ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அந்நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஈடுபட்டு வருவதாக மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Read More

காலி வன்முறைகளைக் கட்டுப்படுத்த களத்தில் நின்று செயற்பட்ட ரிஷாட்

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று மாலை (17/ 11/2017) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனதையடுத்து மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு  விரைந்தார். அமைச்சர் கொழும்பிலிருந்து காலிக்குச் சென்ற நள்ளிரவு வேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கொழும்பு – காலி வீதியூடாக அந்தப் பிரதேசத்துக்குச் பொலிஸார் அனுமதியளிக்க மறுத்தனர். எனினும், தடைகளையும் பொருட்படுத்தாது, தனது பாதுகாப்பையும் கருத்திற்கெடுக்காது அதிகாலை 1.15 மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்தார். வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டிருந்த…

Read More

எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள் தானே! சம்பிக்கவிடம் புலம்பிய மஹிந்த

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு கிழமைகளில் இந்த தொலைபேசி அழைப்பு வந்தது. இதன்போது தொலைபேசியின் அடுத்த பக்கத்தில் பேசியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆவார். எனினும் கோபமில்லாத தொணியில் பேசிய மஹிந்த ராஜபக்ச, “ஒயாலா ஒக்கோம எக்கத்துவெலா மாவ பரத்துவா நெத்த”? ( நீங்கள் எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள்தானே? என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். எனினும் அதற்கு பதிலளித்த ரணவக்க, ஏற்கனவே உங்களுடன் பேசி முடியாத நிலையிலேயே பொதுவேட்பாளரை தமது கட்சி ஆதரித்ததாக…

Read More

முதலீட்டாளர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ள இலங்கை : மங்கள சமரவீர

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் சொர்க்கபுரியாக இருந்து வந்த இலங்கை தற்போது முதலீட்டாளர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜீ.7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜப்பான் சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர அங்கு இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை காரணமாக மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

பதவிகளையும்,பட்டங்களையும் கொடுப்பது அல்லாஹ் என்பதை மறந்து செயற்பட முடியாது – றிஷாத் பதியுதீன்

ஒரு சமூகத்தின் விடுதலைக்காக வருகின்ற சவால்களை எதிர் கொண்டு அந்த சமூகத்தை பாதுகாக்கவே எமக்கு அரசியல் என்கின்ற கவசமே ஒழிய இந்த அரசியலை வைத்து எவரும் தனிப்பட்ட லாபங்களை அடைவதற்கு முயற்சித்தால் அது மக்களினால் தோற்கடிக்கப்படும் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வவுனியாவில் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் வவுனியா…

Read More

வெகுவிரைவில் முச்சக்கரவண்டிகளுக்கு இருக்கை பெல்ட்

முச்சக்கர வண்டிகளில் இருக்கை பெல்ட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முறையை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையே கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மதிப்பீட்டின் அடிப்படையில், குறித்த சட்டத்தினால் முச்சக்கரவண்டி விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More