Headlines

ஜி-7 நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் மைத்திரி!

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் , இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மார்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹொலன்டே, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடே, இத்தாலியப் பிரதமர் மற்ரோ ரென்சி, ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த நிகழ்வு, “ஆசியாவின் உறுதிப்பாடும் செழிப்பும்” என்ற தலைப்பில் இன்று காலை இடம்பெறவுள்ளது….

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானினால் கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலுக்கு  ஒலிபெருக்கித் தொகுதி கையளிப்பு

அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலிற்கான ஒலிபெருக்கித் தொகுதியினை அண்மையில் கையளித்தார்.

Read More

தேர்தலில் முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது – அமீர் அலி!

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள், பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தச் சதி குறித்து,  நாம் தெளிவாக இருந்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலவரத்தின் படி, பொருட்களுக்கான விலைவாசி மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் காரணமாக,…

Read More

ஜனாதிபதியின் ஆலோசகராக பைசர் முஸ்தபா நியமனம்

முன்னாள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

சிறுபோக நெற்செய்கை அறுவடை அமோகம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்திற்கு உட்பட்ட 19 சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் பிரதேசத்தில் 550 ஏக்கர் சிறுபோக நெல் பயிரிடப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்துவருவதாக ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் ம.சற்குணநேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுகையில், இத்திமடுக்குளம பெரியகுளம், ஒதியமலைக்குளம், கோடாரி கல்லுக்குளம் ஆகிய குளங்களின் கீழ், 50 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுவதாக தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் பெரிய நீர் பாசனக் குளமாக காணப்படும் முத்து ஜயன்கட்டு குளத்தின்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – கட்சியின் தலைவர் ரிஷாட் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (14) மாலை வெள்ளவத்தை, கிரீன் பெலஸ் மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம், அரசியல் அதிகாரபீடம் ஆகியன, இன்று மாலை கொழும்பில் கூடி, ஏகமனதாக தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், “கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் பல இடங்களுக்குச்…

Read More

“இரு வாரங்களுக்குள் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும்” அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர், அண்ணல் நகர், மஹ்ரூப் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள  காணி உறுதிப்பத்திரங்கள் அற்றவர்களுக்கான உறுதிப் பத்திரங்கள் இரு கிழமைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். காணி மறுசீரமைப்பு பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக உடனான சந்திப்பின் போது, காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு உடன் நடவடிக்கைகளை துரிதமாக ஏற்பாடு செய்யுமாறு காணி மறுசீரமைப்பு…

Read More

மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை

மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சமூகத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதில் பயனில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் எண்ணங்களை சரியான வழிக்கு கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சமூக விழுமியங்களை மேம்படுத்தி, நற் பண்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதே முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகம்,போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனையை…

Read More

வட்டக்கண்டல் வட்டாரத்தின் ஆலய வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட, வட்டக்கண்டல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் குழந்தை யேசு ஆலய உள்ளக வீதியை கொங்கிறீட் வீதியாக புனர்நிர்மாணிக்கும் வேலைத்திட்டம், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு தலைமையில் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கலந்து சிறப்பித்ததுடன், மாந்தை மேற்கு பிரதேச சபை வட்டக்கண்டல் வட்டார உறுப்பினர்களான நைசர், செளந்தரராசா, ஆள்காட்டிவெளி வட்டார உறுப்பினர் பா.பிரபாநந்தன் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்….

Read More

துபாயில் புதிய சட்டம்: தொலைந்த பொருட்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10% சன்மானம்:

தொலைந்த பொருட்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் 10 சதவிகிதம் சன்மானமாக வழங்கும் புதிய சட்டம் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொலைந்த பொருட்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் 10 சதவிகிதம் சன்மானமாக அளிக்க வேண்டும் என்று துபாய் மன்னரும், துணை ஜனாதிபதி மற்றும் பிரதமராக உள்ள ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். சன்மான வரம்பு 50 ஆயிரம் திர்ஹாம்கள் ஆகும். கண்டுபிடித்த பொருளை அந்த…

Read More

ஜெயலலிதாவின் சிறுநீரகம் செயலிழப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதால் உடனடி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இட்லி போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள்…

Read More

நான் எவ்வாறு இஸ்லாத்தை ஏற்றேன்: பிரபல பாடகி ரிச்சி

ஜுனைட் எம்.பஹ்த் அமெரிக்காவை சார்ந்த நிக்கோலா ரிச்சி என்ற பிரபல பாடகி, இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தார். இஸ்லாம் அன்பின் மார்க்கமாக, அமைதியின் மார்க்கமாக, உண்மையின் மார்க்கமாக இருப்பதை அவர் தனது ஆய்வின் போது உணர்கிறார். இந்த மார்க்கத்தை பற்றிய உண்மைகளை மறைத்து அந்த மார்க்கத்தில் மீடியாக்கள் தவறாக சித்திரிப்பதை நினைத்து கவலை கொள்கிறார். தாம் இஸ்லாத்தை ஆராய்ந்ததாகவும் அது உண்மை என்பதை அறிந்து கொண்டதாகவும் அதனால் அந்த மார்க்கத்தில் தன்னை இணைத்து கொள்ள போவதாகவும் தனது குடும்பத்திடம்…

Read More