Headlines

புத்தளத்து மக்களுக்கு எமது உயிர் இருக்கும் வரை நன்றியுடன் இருப்போம் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா நாம் இடம் பெயர்ந்து வந்த போது எமக்கு உதவிய புத்தளத்து மக்களை எமது உயிர் இருக்கும் வரை நானும்,எமது மக்களும் நன்றியுணர்வுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடந்த 5 வருடகாலமாக இந்த புத்தளம் மக்களுக்கு தேவையான பணிகளை செய்யவிடாது சில சுயநல அரசியல் போக்கு கொண்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினார்கள் என்றும் கூறினார். புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளி கஜூவத்தை பாடசாலையில் இடம்…

Read More

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நால்வரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம்: கறுப்பு நிற கார் மீட்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமெண்டல் பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கறுப்பு நிற ஹைப்ரிட் கார் ஒன்று புளுமெண்டல் பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. புளுமெண்டல் பகுதியில் உள்ள கட்டிடமொன்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது. எனினும் காரின் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இலக்கத்தகடற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் கார் மற்றும் வெள்ளை வேன் ஆகியவற்றில் வந்த…

Read More

ஒரே நாளில் 50 சதொச விற்பனை நிலையங்களை ஜனாதிபதி, பிரதமரின் பங்ககேற்புடன் திறக்க ஏற்பாடு. கூட்டுறவுத்துறைக்கு புதிய கொள்கை வகுக்கும் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

ஊடகப்பிரிவு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்து வைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கூட்டுறவுத்துறைக்கான கொள்கையைத் தயாரிக்கும் வகையிலான இறுதிக்கட்ட மாநாடு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மாகாண கூட்டுறவு அமைச்சர்கள்,…

Read More

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய  களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கோட்டாபயவுக்கு காலஅவகாசம்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்படி தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிக்க 90 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கோட்டாபய கோரியதாகவும், அதற்கு ஆணைக்குழு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஷரிஆ சட்டம் இறைவனின் சட்டமல்ல – பொதுபல சேனா

இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளும் இஸ்லாமிய சட்டங்களும் நாட்டில் செயற்படுவது முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். நாட்டில் முஸ்லிம் தீவிரவாதமொன்றினை உருவாக்கும் ஷரி – ஆ சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் பொதுபல சேனா பௌத்த அமைப்பு சிங்கள சமூகத்தை சீரழிக்கும் முஸ்லிம் மதவாதத்துக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் எனவும் சுட்டிக்காட்டியது. பொதுபல சேனா பௌத்த அமைப்பினால் நேற்று கொழும்பு கிருலப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பணிப்பாளர் டிலந்த…

Read More

ஜனாதிபதி; வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரவுசெலவுத்திட்டமாக இதனைப் பார்க்கிறோம் – அமைச்சர் றிஷாத்

இந்த வரவுசெலவுத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின்போது மைத்திரி நிர்வாகம் என்பதை அறிமுகப்படுத்தி முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரவுசெலவுத்திட்டமாக இதனைப் பார்க்கிறோம். குறிப்பாக கைத்தொழில்துறையை மேம்படுத்துவதற்காக அதேபோல இந்த நாட்டில் வாழுகின்ற வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கக் கூடிய பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது. ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்காக பல ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இதனூடாக எதிர்காலத்திலே மைத்திரி ஆட்சியை இந்த நாட்டில் நிலைநாட்டுவதற்கு தமிழ்,…

Read More

‘முஸ்லிம்களை குழுக்களாகப் பிரித்துள்ளது உள்ளுராட்சித் தேர்தல்’ சேகு இஸ்ஸதீன் வேதனை!

-ஊடகப்பிரிவு- “உள்ளுராட்சி சபைத் தேர்தலானது முஸ்லிம்களை குழுக்களாகப் பிரித்து வைத்திருக்கின்றது” – என வடக்கு, கிழக்கு மாகாண சபை முன்னாள் எதிர்க்;கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எச். ஏம்.அமீர் தலைமையில் ஓட்டமாவடியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “கிழக்கு மாகாணத்திலுள்ள…

Read More

கம்பனி வரலாற்றில் புதிய கம்பனிகளின் பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைப்பு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

ஊடகப்பிரிவு இலங்கையின் கம்பனி வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் புதிய கம்பனிகளுக்கான பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 73% ஆல் குறைக்கப்பட்டிருக்கின்றதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கம்பனிப்பதிவு புதிய கட்டணங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் உரையாற்றிய போது கூறியதாவது, இந்தக் கட்டணக்குறைப்பு இலங்கையின் புதிய தொழிற்துறை வளர்ச்சிக்கான முயற்சியாகும். 2016 ஆம் ஆண்டு நமது நாட்டில் 8289 புதிய கம்பனிகள் ஆரம்பிக்கப்பட்டன….

Read More

முகமது அலியின் குருதியில் நச்சுத் தன்மை – இஸ்லாமிய முறைப்பாடி ஜனாஸா நல்லடக்கம்

-BBC- அமெரிக்காவின் கென்டகி மாநிலத்திலுள்ள, மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் சொந்த ஊரான லூயிஸ்வில்லில் அவரது இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள முகமது அலியின் இறுதி சடங்கு இந்த உலகின் ஒரு குடிமகனான வாழ்ந்த முகமது அலி, வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தனது இறுதி சடங்கில் சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருந்து பலதரபட்ட மக்களும் கலந்து கொள்ள விரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். குறிப்பிடப்படாத இயற்கை காரணங்களால் குருதியில் நச்சுத்…

Read More

துபாய் செல்வந்தரால் 85 இலட்ச செலவில் கெக்கிராவையில் ஜம்ஆப் பள்ளிவாசல் திறப்பு. (படங்கள்)

தெல்தோட்டை ஜம்;மிய்யதுல் ஹைரிய்யாவினால் டுபாய் நாட்டு செல்வந்தரினால் கெக்கிராவை பலல்லுவ  பிரதேசத்தில் சுமார் 85 இலசட்ம் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்ப்ட்ட ஜம்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா (20) சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக டுபாய் நாட்டைச் சேர்ந்த அஹமட் கலப் இஸ்மாயீல் பிரதி அமைச்சர் சந்திமல் பாராளுமன்ற உறுப்பினர் இஸாக் ரஹ்மான்  தெல்தோட்டை ஜம்;மிய்யதுல் ஹைரிய்யாவின் பொருளாளர் முஸ்ஸீர் சாதிக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதை இங்கு படங்களில் காணலாம்.

Read More