Headlines

மைத்திரிக்கு ஆதரவு வழங்கும் ஜாதிக ஹெல உறுமய

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பங்காளியாக இருந்து வெளியேறியுள்ள நிலையில் கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி, அரசியல் யாப்பு மாற்றம் போன்றவற்றை ஜாதிக ஹெல…

Read More

மாலைதீவு – இலங்கை உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

இலங்கை விமானப் படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க, மாலைதீவு பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அஹமட் சியாம் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

ஐ.ம.சு.முன்னணியை மகிந்த அமரவீர பலப்படுத்துவார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை சக்திமிக்க கட்சியாக மாற்றுவதற்கு செயலாளர் மகிந்த அமரவீர அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் மகிந்த அமரவீர, நேற்று (16) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது முன்னாள் செயலாளர் விஷ்வ வர்ணபால…

Read More

ரியோ டி ஜெனீரோவில் பதற்றம்

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று (10) டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது  சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி…

Read More

கடலில் நீராடச் சென்ற மாணவனைக் காணவில்லை

– ரீ.கே.றஹ்மத்துல்லா – அம்பாறை, அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (17) நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று, 13ஆம் பிரிவைச் சேர்ந்த அக்கரைப்பற்று அல்-பாத்திமியா வித்தியாலத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் ஹில்மி முஜீப் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இம்முறை க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எழுதவிருந்த மேற்படி மாணவன், தற்போது பாடசாலை பிரதேச விளையாட்டுப் போட்டி நடைபெற்றுவருவதனால் அப்பயிற்சியை…

Read More

காசியப்ப மன்னரின் கிரீடத்தை எடுக்கச் சென்றவர்கள் கைது

காசியப்ப மன்னரின் கிரீடம் சிகிரிய பகுதியில் புதையல் ஒன்றில் காணப்படுவதாகக் கூறப்பட்ட தகவலுக்கு அமைய, அந்த புதையலை எடுக்கச் சென்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக தம்புள்ள துணைப் பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களின் மோட்டார் வாகனம், முச்சக்கர வண்டி, தொலைநோக்கி உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கல்கமுவ மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். துணைப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த…

Read More

தேர்தல் முன்னெடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாகடர்.ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் கிண்ணியா, குட்டியாகுள பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று (01) இடம்பெற்ற இந்த சந்திப்பில், வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமான  விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் எதிர்வரும் தேர்தலை எவ்வாறு முகம்கொடுப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது இப்பிரதேச வாழ் மக்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.  

Read More

எனது ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000!- சந்திரிக்கா

தான் முதல் பெற்ற ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000- என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை அங்கீகாரத்தின் அதிகரிப்பு ஓய்வூதிய பணமான ரூபாய் 98,500 ற்கு முதல் தான் மாதாந்த ஓய்வூதிய தொகையாக 25,000 ரூபாயையே பெற்று வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சம்பளப் பணமாக ரூபாய் 25.000த்தை தான் முதன்முதலில் 1994ம் ஆண்டு பெற்றுக்கொண்டதாகவும், அத்தொகையில் எவ்வித அதிகரிப்பும் 2005 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர்களின்…

Read More

நகரப்புற சிறைச்சாலைகளை கிராமங்களுக்கு மாற்ற நடவடிக்கை

நகர பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளை, கிராமப்புறங்களுக்கு மாற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிராமங்களுக்கு மாற்றப்படும் சிறைச்சாலைகள், திறந்தவெளி சிறைச்சாலைகளாக செயற்படும் என அமைச்சின் செயலாளர் வி. சிவஞானஜோதி குறிப்பிட்டார். திறந்தவெளி சிறைச்சாலையில், குற்றவாளிகளை மீண்டும் குற்றமிழைக்காதவர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவ்வாறான சிறைச்சாலைகளில் சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்புகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் காரணமாக சிறைச்சாலை அறைகளுக்குள்ளேயே கைதிகள் இருக்கவேண்டிய தேவை ஏற்படாது எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின்…

Read More

ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் தனியார் நிறுவனத்துடன் இணைய அமைச்சரவை அங்கீகாரம்!

ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைத்துஎதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விசேடதிட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்துதெரிவிக்கும் போதே சரத் அமுனுகம இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சம்மந்தன் அதிரடி!

நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எம்.சரவனபவன், மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை…

Read More

போட்டோ – வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்களே.., உஷார் !

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் இந்த ‘ஸெல்பி’ யுகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக படம் எடுத்து, பார்த்து ரசிப்பதுடன், இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டமும் பெருகி வருகின்றது. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் படம் பிடிக்க வேண்டும் என்றில்லை. ‘மேடம் இந்த சுடிதார்லே நீங்க சிம்ரன் மாதிரி இருக்கீங்க, ஒரே ஒரு போட்டோ…

Read More