Headlines

மாலைதீவு – இலங்கை உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு




இலங்கை விமானப் படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க, மாலைதீவு பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அஹமட் சியாம் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *