Headlines

ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம்

ஒலிம்பிக் (2016) போட்­டிக்­கான பல்­வேறு மைதா­னங்கள் இன்னும் தயா­ரா­காமல் உள்­ளன. உலக விளை­யாட்டு திரு­விழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்­டுக்கு ஒரு­மு­றை நடக்கின்றது. கடை­சி­யாக 2012இல் இங்­கி­லாந்தில் இப்­போட்டி நடந்­தது. அடுத்து 2016இல் 31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரே­சிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்­க­வுள்­ளது. இதற்­காக மொத்தம் 14 புதிய மைதா­னங்களை கட்­டு­வது, புதுப்­பிப்­பது என, ரூ.120 ஆயி­ரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செல­வி­டு­கி­றது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 13 மாதங்கள் மட்டுமே மீத­முள்ள நிலையில்…

Read More

வெள்ளை மாளிகையை அலங்கரித்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ! (படங்கள் இணைப்பு)

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை நேற்றய தினம் நோன்பாளிகளால் நிரம்பி வழிந்தது முஸ்லிம்களை கவுறவபடுத்தும் விதத்தில் நோண்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றிர்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்கவில் உள்ள முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் முக்கிய முஸ்லிம் தொழில் அதிபர்களும் அரசு அதிகாரிகளும் அழைக்க பட்டிருந்தனர் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ஒபாமா கூறும்போது தங்கள் ஆண்மீக உணர்வுகளை முஸ்லிம்கள் புதுப்பித்து கொள்ளும் இந்த நல்ல நேரத்தில் நாம்…

Read More

2020 ஒலிம்பிக்ஸில் புதிய விளையாட்டுகள்?

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கூடுதல் விளையாட்டுகளாக, புதிதாக சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ள விளையாட்டுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட தேர்வுகள் நடைபெற்ற பிறகு எந்தெந்த விளையாட்டு அந்த ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் என்பது மேலும் தெளிவாகும். அவ்வகையில் தற்போது எட்டு விளையாட்டுகள் முதல்கட்டப் பரிசீலனையில் தேர்வாகியுள்ளன. முதல்கட்ட பரிசீலனையில் பேஸ்பால்/சாஃப்ட்பால், பௌலிங், கராத்தே, ரோலர் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட் க்ளைம்பிங், ஸ்குவாஷ், சர்ஃபிங், வூஷூ ஆகிவை தேர்வாகியுள்ளன. ஸ்னூக்கருக்கு இடமில்லை அதேவேளை ஸ்னுக்கர்…

Read More

சவூதி – ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து

வரலாற்றில் முதல்முறையாக சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே அணுசக்தி துறையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்ற வாரம் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த சர்வதேச பொருளாதார வாரியத்தின் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அணுசக்தி துறையில் பல்வேறு பிரிவுகளில் இணைந்து செயல்பட உள்ளது. குறிப்பாக, அணு உலைகளை உருவாக்குவது, அணுசக்தி எரிபொருளை மறுசுழற்சி செய்வது உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்பட உள்ளது. மேலும், கதிரியக்க ஆபத்துகள் நிறைந்த அணுக்கழிவுகளின் பிரச்சனைகளை சந்திப்பதிலும் இருநாடுகளும்…

Read More

1000 இற்கும் அதிகமான ரஷ்யர்கள் ISIS இல்

ISIS உடன் இணைந்து சுமார் 1000 இற்கும் அதிகமான ரஷ்ய நாட்டவர்கள் சண்டையிட்டு வருவதாகவும் இவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்குத் திரும்பும் பட்சத்தில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் அபாயம் இருப்பதாகவும் ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சில் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் வெளிவரும் கொம்மெர்சாண்ட் (business daily) என்ற நாளிதழுக்கு அந்நாட்டு பாதுகாப்புக் கவுன்சில் தலைமை அதிகாரியான நிக்கொலை பட்ருஷேவ் அளித்த நேர்காணல் நேற்று  திங்கட்கிழமை வெளியாகி இருந்தது. அதில் தற்போது ISIS இற்காகச் சண்டையிட்டு வரும்…

Read More

மரண தண்டனை ஆடையுடன் வந்த முர்ஸி

மரண தண்டனை கைதிக்கான சிவப்பு நிற கைதி உடையுடன் எகிப்து முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சி முதல்முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் முர்சி முகம்கொடுத் திருக்கும் ஐந்து வழக்குகளில் ஒன்றான கட்டார் நாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுக்காகவே ஞாயிறன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்ற சிறைக்கூண்டுக்கு அழைத்து வரப்பட்டபோது அங்கு ஆஜர்படுத்தப்பட்டிருந்த ஏனைய பிரதிவாதிகள் முர்சிக்கு ஆதரவாக கோசம் எழுப்பினர். ஏற்கனவே முர்சி மீதான…

Read More

அகதிகளை அரவணைத்து அவர்களுடன் நோன்பு திறந்த துருக்கி அதிபர்!

துருக்கியில் சிரியாவை சார்ந்த முஸ்லிம்கள் அதிக அளவில் அகதிகளாக உள்ளனர் அவர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் செய்து வரும் துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் நேற்யை தினம் கிழக்கு துருக்கியில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்து அகதிகள் முகாமில் உள்ள மக்களுடன் அமர்ந்து நோன்பு திறந்ததோடு அந்த மக்களுடன் அன்பாக கலந்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி கூறிய துருக்கி அதிபர் அகதியாக உள்ள முஸ்லிம்களின் குழந்தைகளின்…

Read More

உலக அழிவு ஆரம்பம்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய உயிரினமாக காணப்பட்ட டைனோசர் இனம் அழிவடைய ஆரம்பித்த காலத்தில் இருந்தே, உலகின் அழிவு காலம் ஆரம்பமானது. இதன் பல்வேறுகட்டங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதன்படி தற்போது அதன் ஆறாம் கட்ட காலத்திற்குள் உலகம் பிரவேசித்துள்ளது. இந்த காலப்பகுதியில் உலக உயிரினங்களின் அழிவு வேகம் 100 மடங்குகளால் அதிகரித்து காணப்படும்…

Read More

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல்

காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு நான்கு குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலைப் படை தாக்குதலில் உயிர் சேதம் குறித்து எந்தவித தகவல்களும் இல்லை.

Read More

சீனாவில் முஸ்லிம்கள் ரமழான் நோன்பிருக்க தடை!

சீனாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமழான் நோன்பு பிடிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மற்றும் இணைய தளங்களில் அறிக்கை ஒன்றை சின்ஜியாங் மாகாண நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நோன்பு மற்றும் பிற மத நடவடிக்கைகளில் பங்கேற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சின்ஜியாங் மாகாணத்தின் உள்ளூர் நிர்வாகம் அரசு ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே இஸ்லாமிய மக்களை ரமழான் நோன்பிலிருந்து விலகி…

Read More

ரமழான் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது! ஒபாமா பெருமிதம்!

அமெரிக்க ஜனாதிபதி உலகவாழ் முஸ்லிம்களுக்கு புனித ரமழான் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரமழான் பிறை தென்பட்டதிலிருந்து மக்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்களுக்கு நானும் எனது மனைவி மிச்செலும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என ஒபாமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த முறை இப்தார் நிகழ்வுக்காக முஸ்லிம்கள் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த அழைப்பின் மூலம் அமெரிக்க சமூகங்களின் பன்முகத் தன்மை மற்றும் தேசப்பற்றும் வெளிப்படுத்தப்பட்டது. மேலும் தமது வழிபாட்டு சுதந்திரத்தை அனைவரும் மதித்து பகிர்ந்துகொண்டமையும் என்னுள் மீளவும் நினைவூட்டப்படுகிறது….

Read More