News
தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!
-முர்ஷிட் கல்குடா- கண்டி பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் சில நாட்களாக பாராமுகமாக இருந்தது கவலைக்குரிய விடயம். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்களின் பின்னர் விசாரணை இடம்பெற்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…
மகளிர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- பதவிய பிரதேச சபைக்குட்பட்ட அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (1 7), அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்தின் கிளையில், இஷாக் ரஹுமான் எம்.பியின் தலைமையில் நடைபெற்றது. இதேவேளை, அனுராதபுரம் பதவிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு கிரிக்கட் மற்றும் கரப்பந்து விளையாட்டு உபகரணங்களும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்…
கோறளைப்பற்று மத்தி பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவி! பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!
-ஊடகப்பிரிவு- கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, பிறைந்துரைச்சேனை அல்/அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (18) இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.தையூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார். அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம…
மாவடிப்பள்ளியில் மக்கள் காங்கிரஸின் மகளிர் பணிமனை திறப்பு!
–ஊடகப்பிரிவு– அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், மாவடிப்பள்ளியிலுள்ள மகளிருக்கான பணிமனை திறப்பு விழாவும், வாழ்வாதார உதவிகள் சம்பந்தமான ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் நேற்று (17) மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஜலீலின் ஏற்பாட்டில், ஆதம் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாவடிப்பள்ளி மக்கள் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவர், டாக்டர்.முனாசிக், உறுப்பினர்கள் உட்பட மகளீரும் கலந்து சிறப்பித்தனர். …
மகளிருக்கான சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமின் முயற்சியில் மகளிருக்கான சுயதொழில் வாய்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (16) புத்தளம் பிரதேச சபை வரவேற்புக் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
‘ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
-ஊடகப்பிரிவு- உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது. தற்போது இத்துறைக்கு டிஜிட்டல்மயமாக்கல் உதவி தேவைப்படுகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டு சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் தொழில்மயமாக்கல்” தொடர்பான செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்….
விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
-ஊடகப்பிரிவு- அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தனது சொந்த நிதியிலிருந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். அனுராதபுரம் ரம்பேவ பிரதேச சபைக்கு உட்பட்ட 10 விளையாட்டு கழகங்களுக்கு, கரப்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் இஷாக் ரஹ்மான் எம்.பியினால் வழங்கி வைக்கப்பட்டது. இளைஞர்களது விளையாட்டுத் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன, மத, கட்சி பேதமின்றி ரம்பேவ பிரதேசத்தில் வசிக்கின்ற பௌத்த, முஸ்லிம் இளைஞர்களுக்கே இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கி…
செங்கல் உற்பத்தியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!
-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை பகுதியில், செங்கல் உற்பத்தியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், செங்கல் உற்பத்தியில் ஈடுபடும்…
நலன்புரி சங்கங்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு!
-ஊடகபிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதியொதுக்கீட்டில், அனுராதபுர மாவட்டத்தில் உள்ள நலன்புரிசங்களுக்கு குடி நீர் தாங்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கலாவெவயில் உள்ள அலுவலகத்தில் இஷாக் ரஹ்மான் எம்.பியின் தலைமையில் நடைபெற்றது இன, மத, கட்சி வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஓர் எண்ணப்பாட்டுடன் ஒன்றிணைந்து நம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், தனது சேவையானது கட்சி வேறுபாடின்றி தான் செய்வதாகவும், தன்னால்…
ஞானசார தேரர் வாய்ப்பேச்சுகளை அடக்கிக்கொள்ள வேண்டும்! பாராளுமன்றில் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!
-ஊடகப்பிரிவு- பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அவரது வாய்ப்பேச்சுக்களை அடக்கி வைக்கவேண்டும். தற்போது முஸ்லிம்களை வீட்டுக்குள் அடைத்து விட்டு பேரினவாதிகள் சுதந்திரமான முறையில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீது தாக்குதல் நடத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று (09) வியாழக்கிழமை மதுவரித் திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்…
கண்டி கலவரம்: முஸ்லிம்களின் சொத்துக்களையும், பள்ளிவாசல்களையும் குறிவைத்து நடத்தப்படுகின்றதா?
-சுஐப் எம்.காசிம்- தம்புள்ள, அளுத்கம, பேருவளை, தெஹிவளை இன்னும் பல முஸ்லிம் பிரதேசங்களில் 2016 வரை மேற்கொள்ளப்பட்ட இன, மத குரோத வெறியாட்டங்களை நிறுத்த முடியாமல் போனதற்காகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை பிரிந்து, அவருக்கெதிராக தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டிய அவசியம் எமக்கேற்பட்டது. அதன் அவசியத்தை முஸ்லிம்களிடம் உறுதிப்படுத்தி, ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு முன்னுதாரணமாக நாம், எமது பட்டம் பதவிகளைத் துறந்து மகிந்தவின் ஆட்சியில் இருந்து வெளியேறினோம். நமது தூரதிருஷ்டியான முடிவினதும், உழைப்பினதும் காரணமாக…
பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் நின்ற அமைச்சர் ரிஷாட்!
இனவாதிகளின் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்வதால் அச்சத்தில் உறைந்துபோயுள்ள முஸ்லிம் மக்கள்.. பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் நின்ற அமைச்சர் ரிஷாட்! -சுஐப் எம்.காசிம்- கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையிலும், இனவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமையினால், கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எம்.பிக்களான முஜிபுர் ரஹ்மான், இஷாக் ரஹ்மான் ஆகியோர் விஜயம் செய்து களநிலவரங்களை அறிந்துகொண்டதோடு, தேவையான…
