Headlines

A/L பரீட்சையில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க தீர்மானம்

க. பொ. த. உயர்தரத்தில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக வேண்டியே ஆசிரிய உதவியாளர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். இதற்கான ஆகக்கூடிய வயதெல்லை 35 ஆகும். பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரைக்கமைய கல்வியமைச்சர் பந்துல குணவர்தன இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்திருந்தார். வேலையில்லாப்…

Read More

இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு ராஜ்ஜிய தூதரகத்தின் புதிய வீசா நிலையம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு ராஜ்ஜிய தூதரகத்தின்   புதிய வீசா நிலையம் கொழும்பு-03, ரீட் அவனியு, இல. 112 இல் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல்.பிரீஸினால் உத்தியோக பூர்வமாக நேற்று (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே. அல்-முல்லா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர்களான றவுப் ஹக்கீம், அதாவுட செனிவிரத்ன, டிலான் பெரோ, ஐக்கிய அரபு இராட்சியத்தின் (யு.ஏ.இ) வெளிநாட்டு அமைச்சின் செயலாளர்…

Read More

கல்முனையில் ஹஜ் பெருநாள் தொழுகை

எஸ்.அஷ்ரப்கான் கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் ஹூதா பள்ளிவாயல் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜூப் பெருநாள்;  நபி வழி திடல் தொழுகை நேற்று திங்கட் கிழமை (06) காலை 6.45 மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்றது. கல்முனையில் வழமைபோன்று பெருந்திரளான ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்ட இத்தொழுகையை மௌலவி முஹம்மட் பிர்னாஸ் நடாத்திவைத்தார்.

Read More

ஓட்டமாவடியில் ஹஜ் பெருநாள் தொழுகை

இறைவனின் அருளால் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ஓட்டமாவடி எம்.கே.ஏ பெற்றோல் நிலையத்திற்கு முன்பாக சகோதரர் நாஜிம் அவர்களின் வளாகத்தில் இடம்பெற்றது. சகோதரர் :ST.Salahudeen அவர்களால் “ஏகத்துவ எழுச்சிக்கான செம்மல் நபி இப்றாஹீம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது இதில் நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு நபி வழியை நிலை நாட்டினார்கள் – அல்ஹம்துலில்லாஹ்.

Read More

சாய்ந்தமருது பிரதேசத்தில் பலஇடங்களில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகைகள்

ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஹஜ்ஜூப் பெருநாள் வெகுவிமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. சாய்ந்தமருதில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களிலும், கடற்கரை முன்றலிலும் இடம்பெற்றன. சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பிரதான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கத்தினையும் மௌலவி முபாறக் நிகழ்த்தினர். இதில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதேசமயம் சாய்ந்தமருது கடற்கரை முன்றலில் ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் இலங்கை தௌஹீத் ஜமாஅத்…

Read More

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஹஜ் பெருநாள் தொழுகை

(அஸ்ரப் ஏ சமத்) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஹஜ்பெருநாள் தொழுகை மருதானை ஆனந்தாக் கல்லூரி அருகில் உள்ள வைட்பார்க் மைதாணத்தில் இன்று(6) காலை 07.00 மணிக்கு நடைபெற்றது. இப் பெருநாள் தொழுகையை டி.எஸ்.ஜ.என்  ரஸ்லான் மௌலவி அவர்களினால் நடாத்தப்பட்டது. மாளிகாவத்தை, மருதானை பிரதேசத்தின் வாழ் முஸ்லீம் ஆண்கள், பெண்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டனர்.

Read More

பலஸ்தீனத்தை அங்கீகரித்த சுவீடன்; இஸ்ரேல் – அமெரிக்கா கடும் கண்டனம்

பலஸ்தீன தேசத்திற்கு சுவீடன் அங்கீகாரம் அளித்துள்ளது. ஐரேப்பிய ஒன்றியத்தின் நீண்டகால உறுப்பு நாடொன்று பலஸ்தீனத்தை அங்கீகரித்திருப்பது இதுவே முதல்முறையாகும். “இரு நாட்டு தீர்வே இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினைக்கு ஒரே முடிவாகும்” என்று சுவீடன் பிரதமர் ஸ்டபன் லப்வன் குறிப்பிட்டுள்ளார். இது சர்வதேச சட்டத்திற்கமைய தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் பலஸ்தீனத்தை அங்கீகரித்த 130க்கும் அதிகமான நாடுகளுடன் சுவீடனும் இணைந்து கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முன்னர் இருந்தே பலஸ்தீனத்தை அங்கீகரித்த ஹங்கேரி, போலாந்து மற்றும் ஸ்லோவாக்கியாவை…

Read More

முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாட வேண்டும் – ஒபாமா

உலகின் பல பகுதிகளில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஹஜ் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது,  உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும், முஸ்லிம் சகோதரர்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் உதவுவதோடு, பசியை போக்கி, ஏழ்மையை அகற்றும் திருநாளாக அமையும் இந்த பண்டிகையை முஸ்லிம் சகோதரர்கள் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாட வேண்டும். அமெரிக்க மக்களின் சார்பில், அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை…

Read More

பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனிடம் பிரார்த்திப்போம்

ஏ .சி.எஹியாகான் இலங்கையிலும் வாழும் முஸ்லிம்கள் மட்டுமன்றி உலக முஸ்லிம்கள் அனைவரும்  நிம்மதியாகவும், பொறுமையுடனும் வாழ இப்புனித நன்நாளில் நாம் அனைவரும் எல்லாம் வல்லஅல்லாஹ்வை பிரார்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், மற்றும் கணக்காய்வுக்கான தேசியப் பணிப்பாளர் ஏ.சி.எஹியாகான் விடுத்துள்ள ஹஜ்ஜூப்  பெருநாள் செய்தியில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஹஜ்ஜூப்  பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :- சுமார் முப்பது வருடம் தலைவிரித்தாடிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் சூழ்நிலை…

Read More

இப்றாஹீம் நபியின் தியாக உணர்வுகள் எமது உள்ளங்களிலும் மிளிரச்செய்வோம் -அமைச்சர் றிஷாத்தின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஊடகப்பிரிவு உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு,  சுயகௌரவம் இருப்பு என்பனவற்றை உறுதிப்படுத்த , எம்மால் முடிந்த சிறு தியாகம் ஒன்றுக்கான ஆளுமையும் மனோ நிலையும் எம்மில் ஏற்பட இத்தியாகத் திருநாளாம் புனித ஹஜ்பெருநாள் தினத்தில் உறுதி  பூண்டு பிரார்த்தனையிலும் ஈடுபடுவோம். அ.இ.ம.க தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கபட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு இறைதூதர் இப்றாஹீம் நபி அவர்களினதும் அவர்களது குடும்பத்தினதும் தியாகச்செயற்பாடுகளை நினைவு கூறும் இந்நாளில் எமது…

Read More

ஜனாதிபதித் தேர்தலுடன் ஆட்சிமாற்றம்- முஜிபுர் ரஹ்மான் பரபரப்பு பேட்டி

எந்தத் தேர்தல் வந்தாலும் அதற்கு முகங்கொடுக்க ஐ.தே.க. தயார்படுத்தல்களை கீழ்மட்டத்திலிருந்து செய்துவருவதோடு இதற்கான பல வேலைத்திட்டங்களையும் ஒழுங்கு செய்துவருகின்றது. தற்போது மக்க ளுக்கு அரசின் மீது வெறுப்பும், ஐ.தே.க. மீது நம்பிக்கையும் வந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலு டன் ஆட்சியை ஐ.தே.க. மாற்றியமைக் கும் என்று மேல் மாகாணசபை உறுப்பி னர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இனவாத செயற்பாடுகள் மற்றும் தற் போதைய அரசியல் நிலவரங்கள் தொடர் பாக “சுடர் ஒளி’க்கு அவர் வழங்கிய பேட்டி கீழே…

Read More