News
கபீர் ஹசீமின் பதிலடி..!
புலிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்ப்பினை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்ப்பு பற்றிய புரிதல் இன்றி அரசாங்கம் கருத்து வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். கட்சிக் கூட்டங்கள் மற்றும் சில தேவைகளுக்காக ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றதாகவும்…
”ஜனாதிபதியின் தம்பி என்பதால், நான் எல்லாவற்றையும் செய்யலாம் என கூறுவது தவறாகும்” கோட்டா
அபிவிருத்திப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தமைக்கு ஜனாதிபதியின் சகோதரர் என்பது காரணமாகவில்லை எனவும் அந்த பணிகளை தனது பணியாக நினைத்து செயற்படுத்தியமையே இதற்குக் காரணம் எனவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். Nf டுடனான விஷேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். கேள்வி உங்களது கண்காணிப்பின் கீழ் பெறும் தொகையானோர் சேவையாற்றுகின்றனர். பல நிறுவனங்களும் உள்ளன. அவர்களுக்கு எவ்வகையான ஆலோசனையை வழங்குவீர்கள்? பதில் மக்களின் வாழ்விற்கு தகுதியான இடங்களாக உருவாக்குவதற்காகவே…
நூல் வெளியீட்டில் கண் கலங்கியது! சரித்திரத்தில் இடம்பிடித்த ரிஷாத் ….
ஏ.எச்.எம். பூமுதீன் மன்னாரில் இடம்பெற்ற் ஏ.ஆர்.ஏ ரஹீம் என்னும் மாணவர் ஒருவரின் கவிதை நூல் வெளியீட்டின்போது — மாணவனுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து பார்வையாளர்களை கண் கலங்க வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். கவிதை நூல் ஒன்றை தயார் செய்த மன்னார் ஏ.ஆர்.ஏ ரஹீம் மாணவன் ஒருவர், அமைச்சர் ரிஷாதை ஒரு வருடங்களுக்கு முன்னர் சந்தித்து – நூல் வெளியீட்டுக்கு பிரதம அதிதியாக அழ்ளைதுள்ளார். . அப்போது, தனக்கு வீடு இல்லாதது பற்றியும் அமைச்சரிடம்…
வெல்கம் ஹோம் அம்மா! மாறியது ஜெ. பேஸ்புக் பக்கம்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில், அவருக்கு பிணை கிடைத்த செய்தி வெளியானதுமே கவர் போட்டோவை மாற்றி விட்டனர். நிம்மதி தவழும் முகத்துடன் கூடிய ஜெயலலிதா படத்தை தற்போது போட்டுள்ளனர். அதேபோல வெல்கம் ஹோம் அம்மா என்றும் ஒரு போட்டோ ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர். ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு வரை ஜெயலலிதா தொடர்பான நிகழ்ச்சிகள், அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், தொடக்க விழாக்கள், அதிமுக விழாக்கள், பிரசாரம் என படம் படமாக போட்டு…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை எவராலும் உடைக்க முடியாது
முசலியூர் .கே.சி.எம்.அஸ்ஹர் மன்னார் முஸ்லிம் அரசியலை நோக்கும் போது மன்னாரின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக மர்ஹும் றஹீம் அவர்கள் சேவை புரிந்துள்ளார்.இவருக்கு அடுத்து சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பிரதியமைச்சர் எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் அவர்களும் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் மர்ஹும் என்.எம்.ஐயூப் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து மூன்று முறை றிசாட் பதியுதீன் அவர்களும் , இரு முறை நூர்தீன் மசூர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசை விட்டு வெளியேறிய அமைச்சர்…
முஸ்லிம்களை குறிவைக்கும் விபச்சார ஊடகங்கள்!
வாஞ்ஜுர் எந்த இழிசெயலுக்கும் தயங்காமல் ஏதாவது செய்திகளைப் புனைந்து வெளியிட்டுத் தம் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வேசியாகி கீழிறங்கி ஊடகங்கள். ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு ஒன்றைக் கடத்த உதவுவதே ஊடகம் ஆகும். மின்சாரத்தை ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குக் கொண்டு வரும் உலோகக்கம்பி அல்லது நீர், அல்லது மின்சாரம் பாயும் எதுவானாலும் மின் கடத்தும் ஊடகமாகும். ஒலி அலைகளைச் சுமந்து வருவதற்குக் காற்று ஊடகம் ஆகும். சிங்கப்பூரிலிருந்து தங்கத்தைக் கடத்தி வரும் ‘குருவி’யும் ஊடகம்தான். யாஹூ…
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ரணில்- மகிந்த குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பா சென்றதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர், அவர் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்து இரண்டு வாரத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கனவான தனித் தமிழ் ஈழத்தை அமைக்கும் நோக்கில் தற்போதும் புலம்பெயர் நாடுகளில் நிதி சேகரிப்பு நடைபெறுகின்றது. எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் நான் இருக்கும் வரை ஈழம்…
3வீத முஸ்லிம்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர் ; ஆனால் 16 வீதமானவர்கள் சிறைச்சாலைக்கு செல்கின்றனர்-அமைச்சர் றிசாத் (படங்கள் இணைப்பு )
அஸ்ரப் ஏ சமத் இந்த நாட்டில் முஸ்லீம்கள் 10வீதம் உள்ளோம். எமது மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழகம் செல்லும் வீதம் 2-3 வீதமாகவே உள்ளது. ஆனால் எமது சமுதாயத்தவர்கள் சிறைச்சாலைகளில் 16வீதமாக உள்ளோம். அதுமட்டுமல்ல இந்த நாட்டில் அரச துறைகள், உயர்பதவிகளிலும் 2-3 வீதமாகவே உள்ளோம். ஆகவே தான் இங்கு உயாதரம் கல்வி பயில் புலமைப்பரிசில் பெற வந்துள்ள மாணவர்கள் தமது உயர்கல்வியை திறம்பட கற்று பல்கழைக்கழகம் செல்ல முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்….
டுபாயில் உலகின் உயரமான பார்வையாளர் தளம் திறப்பு
சர்வதேச அளவில் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உயரமான இடத்தில் பார்வையாளர் கூடம் திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பார்வையாளர் தளம், தரைமட்டத்திலிருந்து 555 மீட்டர் உயரத்தில் 148வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பார்வையாளர்களுக்கான் தளம் 124வது மாடியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தின் மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க…
அனைத்து இனங்களும் சமமாக வாழும் நிலையை மஹிந்த அரசாங்கம் அழித்து விட்டது – ரணில்
நாட்டில் சகல இனங்களும் சரி சமமாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பேருவளை – சபுகொடை விகாரையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்நாட்டில் அனைத்து வாழும் அனைத்து இனங்கள் மற்றும் அவர்களின் கலாசாரம் பெருமைக்குரிய விடயங்களாகும். மேலும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் சரி சமமாக வாழும் நிலை மீண்டும் கட்டியெழுப்பப்பட…
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவு என்பது, முற்றிலும் பொய் – மக்காவிலிருந்து ஹக்கீம்
ரவூப் ஹக்கீம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்தமுடிவுகளும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க கட்சி முடிவெடுத்துள்ளதாக தற்போது பரவிவரும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும். கட்சி ஆதரவாளர்களினதும், உயர்பீடத்தினதும் கருத்துக்களை அறிந்தபின்னரே கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். வதந்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்-புதிய நிர்வாகிகள் தெரிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் கத்தாரில் இயங்கி வரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய மௌலவி மற்றும் ஹாபிழ்களை உள்ளடக்கிய கத்தார் இத்திஹாதுல் பலாஹிய்யீன் ஒன்றியத்தின் பொதுக் கூட்டம் நேற்று (17) வெள்ளிக்கிழமை கத்தார் பின் லஹ்தான் மண்டபத்தில் இடம்பெற்றது. ஓன்றியத்தின் செயலாளர் மௌலவி முகைதீன் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ‘நிருவாக மீள் கட்டமைப்பு எனும் தலைப்பில் ஆரோக்கியமான வாத விவாதங்கள் இடம்பெற்று பின்னர் பின்வரும் விதமாக நிர்வாகம் மீள கட்டமைக்கப்பட்டது. ஓன்றியத்…
