News
புலிகள் அழித்த 100,000 வீடுகளை கட்டிக்கொடுத்தோம்
நாடளாவிய ரீதியில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு கொண்டுவருகின்றன. புலிகள் அழித்த வீடுகளில் 100,000 வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுத்துள்ளோம். tm
புலிகளை ஒழித்து புதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தினேன்
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் புலிகளை ஒழித்து நாடளாவிய ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினேன். tm
பல்கலை மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி
பல்கலைக்கழக மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி வசதிகளை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
பொருளாதாரம் 8 சதவீதத்தால் வளர்ச்சி
சுற்றுலா மற்றும் முதலீடுகளின் அபிவிருத்திகளினால் பொருளாதாரம் 8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளது. tm
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை 2017 இல் நிறைவு
வடக்கு, ருவன்புர அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல நெடுஞ்சாலைகளின் பணிகள் 2017ஆம் ஆண்டு நிறைவு பெறும். tm
இனத்தை மையப்படுத்திய யுத்தம் இல்லை
எமது இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, ஓர் இனத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.
புதிய வாழ்வாதாரத் திட்டம்
யுத்தத்தின் பின்னர் இளைஞர், யுவதிகளுக்கும் பிள்ளைகளுக்கும் புதிய வாழ்வாதாரங்களும் வாய்ப்புக்களும் முன்வைக்கப்படும். tm
முன்னாள் தலைவர்களின் விவசாய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம்
முன்னாள் தலைவர்களின் விவசாய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
பாதுகாப்பு செலவீனங்கள் குறைப்பு
கடந்த காலங்களில் 5.5 சதவீதமாக இருந்த பாதுகாப்பு செலவீனங்கள் தற்போது 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த காலங்களில் பாதுகாப்பு செலவீனங்கள் சதவீதம் இந்த முறை குறைக்கப்பட்டதுடன் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு இம்முறை முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகை
2015 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை இன்று சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளளர். 69 ஆவது வரவு செலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோத்தா கொலை வழக்கு; பெப்ரவரி 6 வரை ஒத்தி வைப்பு
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொலை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் குற்றஞ்சாட்டவரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலன்விசாரணை பிரிவினர், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதியான ஷிரோமி பெரேராவிடம் தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர், மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் …
மஹிந்தவின் ஆட்டம் இனி இருக்காது; அடக்கி வாசிப்பது நல்லது – சரத் பொன்சேக்கா மிரட்டல்
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்டம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடக்கிவாசிக்குமாறு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று( 23-10-2014) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் குறிப்பிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க மக்கள் தயாராக இல்லை. எதிர்வரும் தேர்தலில் அதற்கான சரியான தண்டனையை வாக்காளர்கள் வழங்கக் காத்திருக்கின்றார்கள். அந்த வகையில் அரசாங்கத்தின் ஆட்டம் முடியும் தறுவாயை நெருங்கி விட்டுள்ளது. ஜனாதிபதி கதிரை கைமாறப் போகின்றது….
