News
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு கடும்போக்கு சிங்கள அமைப்புகள் ஆதரவு
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை கொழும்பு, பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுபல சேனா, சிங்கள ராவய, ஹெல உறுமய, ராவணா பலய, பிக்சு பெரமுண , தர்ம விஜய பதனம, ஹெல ராவய உள்ளிட்ட சுமார் 53 அமைப்புகள் கலந்து கொண்டிருந்தன. சிங்களவர்களின் எதிர்காலம் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் மட்டுமே பாதுகாக்கப்படும். சிங்கள பௌத்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஒரே தேசியத் தலைவர் அவர்தான். மேலும்…
மறைந்து போன மலையக மக்கள்!
கலாபம் தோட்ட வீடமைப்பில் உள்ள குறைபாடுகளே பதுளை மாவட்ட கொஸ்லந்தை நிலச்சரிவின் போது அதிகமான லயன்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த லயன்களில், மோசமான சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்ததை பல மலையக ஆய்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கிறார்கள். இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, அபாயப் பகுதியாக முன்னரேயே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் மக்கள் வசித்ததற்கு, அவர்களுக்கு வேறு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாமையே…
மக்களுக்கு வலிக்காமல் வரி அறவீடு செய்ய அரசாங்கத்திற்கு தெரியும்: மேர்வின் சில்வா
வரவு செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டின் அனைத்து மக்களின் சிரமங்களையும் கருத்திற் கொண்டே வரவு செலவுத்திட்டத்தை தயாரித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு பாரியளவில் நலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மலர்களை நோகடிக்காது தேன் எடுப்பதனைப் போன்று மக்களுக்கு வலிக்காமல் வரி அறவீடு செய்ய அரசாங்கத்திற்கு தெரியும். நாட்டின் சகல பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்படும் தொகையை விடவும் அதிகளவு…
பெரும் அவலம்: மலையகம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்!
புருஜோத்தமன் தங்கமயில் அபாய அறிவிப்புக்கள் விடுக்கப்படுவதால் மாத்திரம் உயிரிழப்புக்களைத் தவிர்த்துவிட முடியும் என்றால், இந்த உலகம் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கும். யுத்த சூனிய வலயம் என்று அறிவித்துவிட்டு அதற்குள்ளேயே குண்டு மழை பொழிவதுதான் நவீன உலகின் போர் தர்மம். எப்போதுமே, அபாய அறிவிப்புக்கள் மாத்திரம் பதியப்படும். அதற்கான அடிப்படைகளைக் பேணுவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் என்றைக்கும் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அதுதான், பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் நேற்று புதன்கிழமை (ஒக்டோபர் 29) காலை இயற்கையின் பெயரினால் மண்சரிவு…
அப்பாவி மக்கள் புதையுண்டு போக, தப்பிக்க முயலும் அரசாங்கம்….!
பதுளை, கொஸ்லந்த மீரியாபெத்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக குறித்த தோட்ட நிர்வாகத்துக்கு கடந்த 2011ஆம் ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் அப்பிரதேசதத்தில் இருந்து மக்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்துமாறு கூறியிருந்ததாக பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறினார். பதுளை, கொஸ்லந்த மீரியாபெத்த பிரதேசத்தில் புதன்கிழமை(29) பாரிய மண்சரிவு ஏற்றப்பட்டுள்ளது. இந்த மணிசரிவில் சிக்கி பலியானவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. குறித்த…
வீடு திரும்பிய மாணவர்கள, தமது பெற்றோரை தேடும் அவலம்
பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய சுமார் 40 மாணவர்கள் வீடுகள் அனைத்தும் தரை மட்டமாகியதால் செய்வதறியாது தவிக்கின்றனர். அதே நேரம் தனது தாய் தந்தையரை காணாமல் தவிப்பதாகவும் ஹல்துமுல்லையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை அப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் காலை தோட்ட வேலைக்கு சென்றவர்களும், பாடசாலை மாணவர்களும் மட்டுமே மண்சரிவில் இருந்து தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
”மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தவர்கள், உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை இல்லை” – அமைச்சர்
பாடசாலை சென்ற மாணவர்கள் மற்றும் தோட்ட தொழிலுக்காக சென்ற தரப்பினரை தவிர மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தில் இருந்த ஏனைய அனைவரும் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை இல்லை என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மண்சரிவு ஏற்பட்ட மண்மேட்டு பகுதிக்கு பின்னால், நிலச்சரிவு ஏற்படுவதன் காரணமாக மீட்பு பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மண்சரிவில் காணாமல் போனவர்களை…
நாட்டின் பாதுகாப்பு எனது பொறுப்பு, எவரது தாளங்களுக்கும் ஆடமாட்டேன் – கோத்தா
பிரிட்டனிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் வழங்கிய உத்தரவாதத்தினையடுத்து விரைவில் இலங்கை வரவுள்ளார். இதேவேளை அவரிற்க்கு வெளிவிவகார அமைச்சில் முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என்றும தெரியவருகிறது. நோனிஸ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார், அதன் போது கோத்தா எந்தவித அச்சமுமின்றி நோனிசை இலங்கை வருமாறு தெரிவித்துள்ளார். நோனிசுடைய பாதுகாப்பிற்க்கு தான் பொறுப்பு என்றும், எவரையும் தாளங்களுக்கு ஆடுவதற்க்கு தான் அனுமதிக்க…
அமைச்சர் றிஷாத் அனுதாபம்
எ.எச்.எம்.பூமுதீன் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள மரணமடைந்த, காயமுற்ற மற்றும் பாதிப்புக்குள்ளகியுள்ள மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அ. இ. ம.கா தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை பெற்றுக் கொடுக்க முன்வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது: சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தமாக இதனைப் பார்கவேண்டியுள்ளது. சுமார் 300 பேர்வரை மண்ணுக்குள் அகப்பட்டுள்ளதாக இதுவரை வெளியான…
பதுளை மண்சரிவு ; மீறியபெந்த தோட்டத்தைக் காணவில்லை (நான்காம் இணைப்பு)
ஹப்புத்தளை, ஹல்துமுல்ல மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார். எட்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் தற்போது மீட்கப்பட்டிருப்பதாகவும் 300 பேர் வரையில் காணாமற்போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 150 க்கு மேற்பட்ட வீடுகள் நிர்மூலமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீறியபெந்த தோட்டம் முழுமையாக மண்சரிவில் சிக்கியுள்ளதால் அங்கு இருந்த மக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அவர் கூறுகின்றார். …
மோடியை கொல்ல திட்டமிட்டிருக்கும் ISIS
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது கொலை செய்யப்போவதாக ஐ.எஸ். கள் கடிதம் மூலம் அச்சுறுத்தியுள்ளனர். திருவனந்தபுரம் தம்பனூரிலுள்ள பா. ஜ. க. அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டின் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயின்ஸ் என்பவரை கொல்லும் முன்பு அவர் முகமூடி அணிந்த is வாதி முன்பு மண்டியிட்டு இருப்பது போன்ற படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த படத்தில் டேவிட் ஹெயின்சுக்கு பதில் பிரதமர் மோடியின் படம் ஒட்டப்பட்டிருந்தது….
வவுனியா பஸ் டிப்போவுக்கு அமைச்சர் றிஷாத் 10 பஸ்கள் வழங்கிவைப்பு (படங்கள் இணைப்பு)
ஊடகபிரிவு வவுனியா மாவட்ட பஸ் டிப்போவுக்கு 10 பஸ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் புதிய பஸ்களை வழங்கி வைத்தார். அதேவேளை, அகில இலங்கை மக்கள் இ.போ.ச தொழிலாளர் சங்க கட்டிடத்தைத் திறந்து வைத்ததுடன் பஸ் டிப்போவின் தேவைகள் குறித்தும் ஆராய்ந்த அமைச்சர், 10 வருடங்களுக்கு மேல் சேவை புரிந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வையும் வழங்கி…
