News
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு: ஈ.பி.டி.பி
யுத்தத்திற்கு முடிவு கண்டதைப்போல், தமிழ் பேசும் மக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண வழியை ஏற்படுத்தியதுபோல், தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தீர்வைக்காண வேண்டும். தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே ஈ.பி.டி.பி ஆதரவு. எமது மக்களின் சார்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையுடன், நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே ஆதரவு வழங்குவதென ஈ.பி.டி.பி. முடிவு…
220 தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)
எ.எச்.எம்.பூமுதீன் மன்னார் மாவட்டத்தில் சாரதி பயிற்சியை நிறைவு செய்த 220 தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (31) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், முத்து முகம்மட், அப்துல் பாரி என பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு வருடமும் அமைச்சரால் இலவசமாக சாரதி பயிற்சி வழங்கி இளைஞர்…
அ.இ.ம.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்
ஊடகப் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அவசர அதியுயர் பீட கூட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு உயர்பீட உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் பட்சத்தில் வேட்பாளராக களம் இறங்குவோரில் யாரை ஆதரிப்பது அவ்வாறு ஆதரவு வழங்க முடிவெடுக்கப்படும் நபரிடம் முஸ்லிம் சமுகம் நலன் சார்ந்த எவ்வாறான விடயங்களை முன்வைப்பது,…
புலமைசொத்து சபையின் ஆலோசனை சபை உறுப்பினராக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் நியமனம்
ஏ.எச்.எம்.பூமுதீன் கைத்தொழில் வணிக அமைச்சின் கீழ் செயற்படும் புலமைசொத்து சபையின் ஆலோசனை சபை உறுப்பினராக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதத்தை அமைச்சர் ரிசாத் பதியுதீன் வழங்கியபோது…
“”தம்பியை கூட்டிக்கொண்டு ஓடு” எனக்கூறிய அம்மாவும் அப்பாவும் செத்திட்டாங்களே…!
FI“சின்னபுள்ள….நீ தம்பிய கூட்டிக்கிட்டு ஓடு…நானும், அப்பாவும் பைல்கள எடுத்துக்கிட்டுவாரோம்” எனக்கூறி எங்கள அனுப்பிவிட்டு, அவங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு போ னாங்க. கொஞ்சத்தூரம் போயிட்டு, நான் திரும்பி பார்த்தேன். அப்போ, அம்மா, அப்பா ரெண்டு பேரையும் மண் மூடிருச்சி…” இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவி த்தாள் 14 வயதுடைய கஜினி எனும் சிறுமி. ” சின்னபுள்ள….நீ தம்பிய கூட்டிக்கிட்டு ஓடு…நானும், அப்பாவும் பைல்கள எடுத்துக்கிட்டுவாரோம்” எனக்கூறி எங்கள அனுப்பிவிட்டு, அவங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு போ னாங்க. கொஞ்சதூரம் போயிட்டு,…
டிசம்பர் 16 முதல் தொடர்ந்து ஒரு வாரம் உலகம் முழுதும் இருள் – நாசா உறுதி
(NASA) இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளால் மூழ்கியிருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார். நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில், இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி…
முன்னேற்றம் காணாத இலங்கை -ஐ.நா மனித உரிமைகள் குழு
இலங்கையில் பல விடயங்களில் இன்னனும் முன்னேற்றம் ஏற்படவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐந்தாவது மீளாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டபோதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இலங்கையால் கடந்த 7ஆம் 8 ஆம் திகதிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மீளாய்வு அறிக்கையின் மீதே இன்று ஐக்கிய நாடுகள் குழுவின் கண்காணிப்பு வெளியிடப்பட்டது. இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு சரத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு நீதித்துறையின் நியமனங்கள் யாவும் ஜனாதிபதியின் வசம் சென்றுள்ளன….
இலங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; 5 இந்தியர்களுக்கு மரண தண்டனை!
5 மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமண்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைக் கண்டித்து இராமேஸ்வரம், தங்கச்சிமடம், அக்காமடம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று பெரும் போராட்டம் வெடித்தது. வாகன, ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் தமிழக அரசு…
”மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில், முஸ்லிம்களாகிய முன்னிற்க வேண்டும்”
அஷ்-ஷைக் முக்ஸித் அஹ்மத் பதுளை, கொஸ்லந்தை, மீரியாபெத்தை பிரதேசத்தில்; நிகழ்ந்த மண்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்குண்டு இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் பலர் பாடசாலைகளில் தஞ்சம்புகுந்துள்ளனர். சகல தரப்பினரும் ஆபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிபுரியவும் காணாமல்போனோரை கண்டுபிடிக்கவும் கடும்பிரயத்தனம் எடுத்துவருகின்றனர் என்பதையும் அறியக்கிடைக்கிறது. இந்நிலையில் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதில் அனைவரும் சாதி, சமய வேறுபாடின்றி ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பாக அப்பிரதேசத்திலுள்ள ஜம்இய்யத்துல் உலமா கிளைகள் ஏனையோரை இணைத்துக் கொண்டு தம்மால் முடியுமான உதவிகளை…
கொஸ்லந்தை – மிரியபெத்த பகுதியின் தற்போதைய நிலவரம்…!
கொஸ்லந்தை மீரிய பெத்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 192 பேர் காணாமற் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரி வித்தது. சீரற்ற காலநிலைக்கு மத்தியி லும் நேற்று முன்தினம் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த போதும் நேற்றைய தினம் 30-10-2014 சடலங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என களத்திலிருந்த பாதுகாப்பு தரப்பினர் கூறினர். எனினும் பெண்கள் அணியக்கூடிய பலவகையான ஆபரணங்கள் மீட்கப் பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை தொடருவதனால் மீட்புப் பணிகளை…
” அம்மா, அப்பா, அக்கா, தங்கை எல்லோருமே மண்ணோடு போயிவிட்டார்கள்”உயிர் தப்பியவர்!
ஒரு கடிதமே என் உயிரைக் காப்பாற்றியது” என கொஸ்லந்த மீரியபெத்த பால் சேகரிப்பு நிலையத்தின் ஊழியரொருவர் தனது திகில் அனுபவத்தை Tn குத் தெரிவித்தார். “நான் வழமையாக சேகரித்த பாலை, லொறியில் ஏற்றிவிட்டு பால் சேகரிப்பு நிலையத்திற்குள் வந்து விடுவேன். அன்றைய தினம் சாரதியிடம் கையளிக்க வேண்டிய கடிதமொன்றை எடுத்துவர மறந்தது அப்போதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது. சாரதியை கொஞ்சம் பொறுக் குமாறு கூறிவிட்டு நிலையத்திற்குள்ளி ருந்து கடிதத்துடன் வெளியே வந்ததுதான் தாமதம் எங்கும் புகை மூட்டமாக…
கொஸ்லந்தை இரத்த கண்ணீரில் மிதக்கிறது
பதுளை கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் மீட்பு பணிகள் இன்றைய தினமும் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் எந்தவொரு சடலமும் கண்டெடுக்கப்படவில்லை. மேலும் சீரற்ற காலநிலை காரணமாக மீட்பு பணிகள் மந்த கதியிலேயே இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து எதுவும் தெரியாததினால் பிரதேசம் முழுவதும் சோகமயமாகியுள்ளதுடன் காணாமல் போனவர்களின் உறவினர்களும் தவிப்பிலேயே உள்ளனர். அந்தவகையில் தற்போதைய…
