Headlines

பணத்திற்காக சோரம் போன ஹூனைஸ்! முசலித் தவிசாளர் எஹ்யா குற்றச்சாட்டு

வடமாகாண முஸ்லிம்களின் கௌரவமான குடியேற்றத்தையும் அந்த மக்களுக்கு தலைமை  தாங்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஹூனைஸ் எம்பி காட்டிக் கொடுத்து விட்டதாக முசலி பிரதேச சபைத் தவிசாளர் எஹ்யாபாய் குற்றம் சுமத்தியுள்ளார். வன்னி மாவட்ட அ.இ.ம.கா நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் இன்று ஐ.தே.க வில் இணைந்து கொண்டமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே தவிசாளர் எஹ்யா பாய் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வடக்கு முஸ்லிம்களுக்கும் அந்த மக்களின் தலைவரான அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும்,…

Read More

கிழக்கில் சுயேற்சையாக இயங்குக! அமைச்சர் ரிசாத் அதிரடி பணிப்பு

ஏ.எச்.எம் பூமுதீன் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும்  தனது கட்சி உறுப்பினர்கள் மூவரையும் சுயேற்சையாக செயற்படுமாறு அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அதிரடியாக பணித்துள்ளார். இன்று முதல் செயற்படும் வகையில் இந்த பணிப்புரையை அமைச்சர் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ் அமீர் அலி , எம்.எஸ். சுபைர் மற்றும் ஷிப்லி பாறுக் ஆகிய மூவரும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பணிப்புரையை ஏற்று இன்று முதல் சுயேற்சையாக…

Read More

மருத்து நிதி உதவி கோருகிறார் கற்பிட்டியைச் சேர்ந்த தாபித்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு நான் தாபித், கற்பிட்டி முகமதியா புரத்தில் வாசித்து வருகிறேன், கடற்தொழில் செய்து எனது குடும்பத்தை பராமரிக்கும் ஏழை, இடம்பெயர்ந்த மீனவன். நான் அண்மைக்காலமாக காலமாக  இருதய நோயினால்பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் வைத்தியம் பெற்றுவருகிறேன்.  என்னைப் பரிசோதிக்கும் வைத்தியர்கள், இருதய சத்திர சிகிச்சை அவசரமாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் இல்லாவிடில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர். இதற்காக ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. எனது எழ்மை நிலையால் எனக்கு இந்த பணத்தை ஏற்பாடு செய்ய முடியாதுள்ளது. எனவே தான் உங்களை…

Read More

ஐ.தே.க வில் இணைந்தார் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள் ராஜதுரை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார். சற்றுமுன் இடம்டபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமாக இன்று முதல் மார்கழி 10ஆம் திகதி வரையான காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.சமூக செயற்பாட்டு மையம் பெண்கள்,சிறுவர்களின் பாதுகாப்பு நலன் சார்ந்த செயற்பாடுகளை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் கிராம மட்டங்களில் பெண்கள்,சிறுவர்களுடைய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு யாழ்.மாவட்டத்தில் 35 கிராம மட்ட செயற்பாட்டுக் குழுக்களினையும் அமைத்து செயற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் பெண்கள் வன்முறை ஒழிப்பு தினமான கார்த்திகை 25முதல் மார்கழி 10ஆம் திகதி வரையில் உலகளாவிய ரீதியில்…

Read More

உலகின் மிகப் பெரிய செல்பி

பங்களாதேஸ், தலைநகர் டாக்காவில் 1,151 பேர் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய செல்பி படம் ஒன்றை எடுத்துள்ளனர். ஒரே செல்பி படத்தில் இத்தனை மக்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பதால் இது உலக சாதனையாக குறிப்பிடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நொக்கியா தொலைபேசி உற்பத்திகளை மேற்கொள்ளும் மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்னெடுத்தது. ‘மைக்ரோசொப்ட் லுமியா பங்களாதேஸ்’ பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பதிவு செய்து கொண்டவர்கள் இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த படம் சர்வதேச ரீதியில் பிரபலமடைந்துள்ளது. இதற்கு…

Read More

மகிந்தவுக்கு ஆளும் கட்சி அமைச்சர் பதிலடி

பைல்களுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது என ஆளும் கட்சியின் சிறு ஏற்றுமதிப் பயிர் அபிவிருத்தி அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து வெளியேறியவர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் உள்ளவர்களினதும் பைல்கள் உள்ளதாகவும் இப்போது அந்த பைல்களை வெளிப்படுத்தினால் அரசாங்கம். தவறிழைத்ததாக மாறிவிடும். பைல்கள் தொடர்பில் கதைப்பதில் வேலையில்லை. உள்ளே உள்ளவர்களது பைல்கள் உள்ளன. வெளியே உள்ளவர்களது பைல்களும் உள்ளன. ஆனால் பைல்களுக்கு பயந்து அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. அப்படி இல்லாவிட்டால் பைல்களை உருவாக்கி தமக்கு அருகில்…

Read More

மஹிந்த நேபாளம் பயணம், ஹக்கீம் மலேசியா புறப்பட்டார்

மஹிந்த ராஜபக்ச 18வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று 25-11-2014 காலை நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றார். சார்க் மாநாடு காத்மண்டுவில் இன்று முதல் 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை நடைபெறும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இதனையடுத்து அவரும் பாரியாரும் லும்பினிக்கு விஜயம் செய்யவுள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி ஆகியோர் இன்று நள்ளிரவு மலேசியா பயணமாகியுள்ளதாக…

Read More

சரியும் சீட்டுக்கட்டு வீடு

மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன்னதாகவே அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய அரச பொறுப்புகளிலிருந்து வெளியேறியிருந்தது. இன்னும் அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் பலரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பாக இருந்துகொண்டிருக்கிற பெருந்தலைகளும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகருக்கு ஆதரவளிக்கக் கூடுமான சூழ்நிலைகள் எழுந்துள்ளன. ஜாதிக ஹெல உறுமய, பத்தொன்பது அம்சக் கோரிக்கைகள் கொண்ட அரசியலமைப்புத் திருத்தத்தை முன்மொழிந்திருந்தது. இந்தக் கோரிக்கைகள் மறுதலிக்கப்படுமானால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்றும், ராஜபக்சவைத் தோற்கடிப்போம்…

Read More

ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?

நகர்வுகள், திருப்பங்கள், திடீர் செய்திகள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே போரொன்று வெடித்திருப்பதையே நிரூபணம் செய்கின்றன. அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகராக (வேட்பாளர்) வெளிப் பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு பலத்த சவாலாகியுள்ளது. இதுவரை ராஜபக்ச அரசிலிருந்து அமைச்சர்கள் மூவர், பிரதியமைச்சர் ஒருவர், பாராளுமன்ற உறுப் பினர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். இன்னும் 20 பேர் அளவில் விலகிச் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகர்கள்…

Read More

மைத்திரியினால் கொடுக்கப்பட்ட 800 நியமனங்கள் ரத்து!

புதிதாக பதவியேற்றுள்ள சுகாதார அமைச்சர் நேற்று மீண்டும் 1800 பேருக்கு புதிதாக நியமனங்கள் வழங்கியுள்ளார். நேற்று நியமன கடிதம் மைத்திரி மூலம் பெற்றவர்கள் கடமைக்கு சென்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

ரணிலை பிரதமராக்குவதில் சிக்கல், சந்திரிகா நெருக்கடியில் – பல்டிக்கு தயாரானோர் பீதி

நான் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக்குவேன் என்று பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையால் ஆளும் கட்சியிலிருந்து பொது எதிரணியுடன் இணைய விருப்பம் தெரிவித்த  உறுப்பினர்கள் சிலர் சந்திரிகாவிற்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரியவருகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமென பொதுஎதிரணி  பிரச்சாரம் செய்து வருகிறது. மைத்திரிபால ஜனாதிபதியானால் அதிகாரங்கள் பகிரப்பட்டு பிரதமர் ஆட்சி நடக்கலாம். ஆனால் பிரதமர் ரணிலாக இருந்தால் நாம் வெளியேற மாட்டோம். மைத்திரி கூறிய வார்த்தையை மீளப்பெற்று பிரதமர் யார்…

Read More