News
மைத்திரியின் பாதுகாப்பு நீக்கம்
முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்று அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
தம்மை எதிர்த்த சரத்தின் நிலையே மைத்திரிக்கும் : மகிந்த
தம்மை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்துள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தின் பொது வேட்பாளராக போட்டியிடுவது…
மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்து விட்டாராம் அஸ்வர் MP கண்டுபிடிப்பு
நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். எனினும் அவரது மகள் சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றார். மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது. மைத்திரிபாலவின் நடவடிக்கை பாரியளவிலான துரோகமாகும். சர்வதேச சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதனை ஜனாதிபதி அம்பலப்படுத்தினார். கடந்த சில தினங்களில் பல மில்லியன் அமெரிக்க…
மு.கா உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு
முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் ,உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு கட்சியின் தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முகா உறுப்பினர் பிரமுகர் எம்மிடம் தெரிவித்தார். பம்பலப்பட்டி சிலோன் ஹோட்டலில் நாளை ஞாயிறு (23)அவசர கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலும் இங்கு தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ.சு.க.யின் செயலாளராக அநுர பிரியதர்ஷன நியமனம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக அநுர பிரியதர்ஷன யாபா நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசரமாக கூடிய மு.கா. (படங்கள் இணைப்பு)
சு.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கட்சி மாறி பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும் அதிர்ச்சியடைந்த முகா இன்று அவசரமாக கூடியது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் அமைச்சு அலுவலகத்திலேயே இந்த அவசர ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது. இந்த ஒன்று கூடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை கட்சி மாறிய மைத்திரியின் ஊடுகவியலாளர் மாநாடும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதனை அடுத்து தமது ஒன்று கூடலை சற்று தாமதப்படுத்திய முகா தரப்பினர் – மைத்திரியின்…
அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் அடக்கம்; மைத்திரிபால சிறிசேன
நாட்டின் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் குவிந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் சட்டம் சீர்குழைந்துள்ளது. யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் செல்கின்றது. குறிப்பாகஅரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும் 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது. 1974 – 1994 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி…
EXCLUSIVE சந்திரிகாவுடன் இணையும் மேலும் பத்து பேர்
நமது நிருபர் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்க தலைமையில் மேலும் 10 ஆளும் கட்சி அமைச்சர்கள் MPமற்றும் அடங்கலாக 10 பேர் சந்திரிகாவுடன் இணையவுள்ளதாக அறியவருகிறது. சந்திரிகாவுடன் ஏற்றகனவே அமைச்சர்களான மைத்ரி , ராஜித உட்பட 6 பேர் இன்று இணைந்துள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாகவே மேர்த்படி 10 பெரும் இணையவுள்ளனர். அமைச்சர்களான நிமல், சுசில், ஜனக பண்டார தென்னகோன், பிரதி அமைச்சர் ரெஜினோல் குரே, மற்றும் பிரதமர் ரத்னசிரியின் மகனான விதுர விக்ரம சிங்க mp…..
மஹிந்த அதிர்ச்சி – MR ஐ எதிர்த்து MS
எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார். நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்… ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது… சட்டம் சீர்குழைந்துள்ளது… யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது… அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்… 2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்… ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார்…
ரணிலை பிரதமராக நியமிப்பேன்- மைத்திரி அதிரடி
நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவேன் என மைத்திரிபால சிறிசேன தற்போது கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். ஆளும்கட்சியின் செயலாளர் ஒருவரை அழைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தலில் வரலாற்று முதன்முறையாக இவ்வாறு அனுமதி வழங்கியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் பின்னர் அவர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது….
100 நாட்களுக்குள் ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் – மைத்திரி பொதுவேட்பாளர்
நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவேன் என மைத்திரிபால சிறிசேன தற்போது கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். ஆளும்கட்சியின் செயலாளர் ஒருவரை அழைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தலில் வரலாற்று முதன்முறையாக இவ்வாறு அனுமதி வழங்கியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் பின்னர் அவர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது….
BREAKING NEWS மைத்ரி சிறிசேன பொது வேட்பாளர் என்பது உறுதி
நமது நிருபர் மைத்ரி சிறிசேன பொது வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது . இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு, டவுன் ஹாலில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்திருங்கள். www.acmc.lk
