News
அமைச்சர் றிஷாதின் முடிவுக்கு தலைவணங்குவோம்! வவுனியா மாவட்ட தமிழ் மக்கள் அதிரடி அறிவிப்பு (படங்கள் இணைப்பு )
ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவருக்கு ஆதரவளிக்க அமைச்சர் ரிசாத் பதயுதீன் முடிவு செய்கிறாரோ அந்த முடிவுக்கு நாம் தலைவணங்குவோம் என வவுனியா தமிழ் மக்கள் இன்று அறிவித்துள்ளனர். வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (29) காலை இடம்பெற்ற தேர்தல் தொடர்பில் மக்களின் கருத்தை அறியும் கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பை தமி;ழ் மக்கள் விடுத்தனர். வவுனியா மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பல்வேறு துறைசார்ந்தோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது அவர்கள் அனைவரும் கலந்துரையாடலின் முடிவில் எழுந்து…
மௌலவி ஆசிரியர் நியமனம் – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பது பற்றி ஆலோசனை
2010ம் ஆண்டுக்குப்பின் வழங்கப்படாதிருக்கும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை மீண்டும் வழங்கக்கோருவது பற்றி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைப்பது பற்றிய ஆலோசனை கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய உலமா கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக இது பற்றிய கருத்தரங்கை கல்முனையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். 1992 முதல் வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்காக உலமா கட்சி பாரிய அளவில் போராடியதன் பயனாக கடந்த…
மஹிந்த ராஜபக்ஸவையும், அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பேன் – மைத்திரிபால சிறிசேன உறுதி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களோ அல்லது சர்வதேச சக்திகளோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச்செயல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியையோ அல்லது படைவீரர்களையோ நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். சரியான நல்லிணக்கத் திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், அனைத்து இனங்களுக்கு இடையிலும் நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைத்திரிபால…
மைத்திரியின் முன்மாதிரி
-tM- எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் பொலித்தீன், கட்டவுட், போஸ்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் கூட்டங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெறும் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் பரீட்சை நிலையங்கள் நடைபெறும் இடங்களை அண்மித்த பகுதிகளில் எந்தவொரு பிரசார நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்…
கல்குடாத் தொகுதி முஸ்லீம்களின் தீர்மானமே எனது அரசியலில் இறுதித் திர்மானமாக இருக்கும்: அமீர் அலி
வாழைச்சேனை நிருபர் கல்குடாத் தொகுதியில் உள்ள முஸ்லீம்களின் தீர்மானமே எனது அரசியலில் இறுதித் திர்மானமாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ள நிலையில் அது முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,…
கோப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன….?
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் இலங்கை அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள், கட்சித் தாவல்கள், விமர்சனங்கள் மற்றும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சிகள் போன்றவை நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களை எச்சரிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிய ‘அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் பற்றிய கோப்புகள் தன்னிடமிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக தான் அவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை’ எனும் கூற்றானது இந்நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு அதிர்வலைகளையும் கேள்விகளையும் எழச்செய்துள்ளது. இவ்வாறு கோப்புகளைக் காட்டி எச்சரிக்கை…
மஹிந்த ராஜபக்சவுக்கு 40 வீதமான தமிழ் மக்கள் வாக்களிப்பர்: சுவாமி
இலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் என பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில் இவ்வாறு கூறியுள்ள அவர், கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் இலங்கை தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கனவை நனவாக்க தான் உதவி புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேரையும்…
சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய பின் விசா!
43 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவா உள்பட 9 நகர விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இ-விசா வழங்கும் திட்டம் வியாழக்கிழமை துவங்கி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, பிரேசில், கம்போடியா, குக் தீவுகள், பிஜி, பின்லாந்து, ஜெர்மனி, இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், ஜோர்டான், கென்யா, க்ரிபாட்டி, லாவோஸ், லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், மொரீஷியஸ், மெக்சிகோ, மைக்ரோனேசியா, மியான்மர், நியூசிலாந்து, நார்வே, ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கொரியா, ரஷ்யா, சமாவ், சிங்கப்பூர், சாலமன் தீவுகள், தாய்லாந்து, டோங்கா, ஐக்கிய அரபு…
தொழிநுட்ப உபகரணங்கள் ,தளபாடங்கள் உட்பட விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சமூக சேவை நிறுவனங்கள் , விளையாட்டு கழகங்கள் , சன சமூக நிலையங்கள்,பாலர் பாடசாலைகள் உட்பட 12 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்பளிப்பு செய்யப்பட்ட 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தொழிநுட்ப உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் ,தளபாடங்கள் உட்பட…
பங்களாதேஷ்-இலங்கை இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்த ஏற்பாடு!
பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு என்பவற்றில பங்களாதேஷம்; இலங்கையும் பிணைப்புகளை ஏற்படுத்தியுள்ளன எனினும், அவை முழுமையான ஆற்றல் வளத்தை பெறுவதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும.; எனது அமைச்சின் கீழ் உள்ள வர்த்தகத் திணைக்களம் ஏற்கனவே வர்த்தக உடன்படிக்கையின் ஆய்வு அறிக்கையினை பூர்த்தி செய்துள்ளது என்பதனை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பங்களாதேஷ்pன் வர்த்தக ரீதியான சாதகமான தலையீடுகள் இருதரப்பு முயற்சிகளினை பெரிதும்; அதிகரிக்கும். உண்மையில், இரு தரப்பினரது தனியார் துறையினர் வர்த்தகத்தினை வழிநடத்தும் ஒரு இயக்கியாக காணப்படுகின்றனர்….
மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் பொது பல சேனாவின் முகத்திரை கிழிந்தது: மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ளதன் மூலம் பொது பல சேனாவின் முகத்திரை கிழிந்துள்ளதாகவும், அதன் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாகவும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே தம்முடைய ஆதரவு என்று பொது பல சேனா நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தது. அதனையடுத்து, மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொது பலசேனா…
அரசியல் கட்சிகளையும் இல்லாமல் செய்யும் நோக்கிலேயே மஹிந்த செயற்படுகின்றார்: மைத்திரி
கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநயாகத்தை முற்றுமுழுதாக அழித்து விடவே ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிடுகின்றார். ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதியாவது நிச்சயம். சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தேன். எனக்கு மட்டுமல்ல இந்த அனுபவம் என்னுடன் வெளியேறிய அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்டவர்கள் மற்றும்அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கும் இதே நிலைமையே காணப்படுகின்றது. நாட்டில்…
