News
யார் இந்த மைத்திரி?
பெலவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன 1951ஆம் ஆண்டு, செப்டெம்பர் 3ஆம் திகதி பொலன்ன றுவையில் விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்தி ரிபால சிரிசேன விவசாயத்துறையில் நாட்டம் இருந்தமையால் 1973ஆம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார். அதன் பின் னர் கிராம சேவை உத்தியோகத் தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியி ருந்தார். மாணவர் பருவத்தி லேயே சிறிலங்கா…
ஆதரவு திரட்டுவதில் அரசு தீவிரம் வழங்குவதில் மு.கா. இழுத்தடிப்பு
அரச கூட்டுக்குள் இருந்து கட்சித் தாவல்கள் தொடர் வதால், அதைத் தடுத்துநிறுத் துவதற்கு அரசு பல்வேறு வியூ கங்களை வகுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாக பங்காளிக் கட்சிகளின் ஆதரவை உறுதிப் படுத்திக்கொள்ளும் முயற்சியில் அது தீவிரமாக இறங்கியுள்ளது. இதன்பிரகாரம், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மஹிந்த தலைமை யிலான அரச தரப்பு உறுப்பினர் கள் இருதரப்பு பேச்சுகளை நடத் தியுள்ளனர். அலரிமாளிகையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற…
பேஸ்புக்கை வீழ்த்திய வாட்ஸ் அப்!
இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்கள்.எதற்கெடுத்தாலும் பேஸ்புக் என்ற நிலை தான் உள்ளது, பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமல் யாருமே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்களால்(Instant Messaging Application) அதாவது வாட்ஸ் அப், வீ சாட் போன்றவைகளால் பேஸ்புக் பயன்பாடு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது இதனால் லாபம் கணிசமாக குறைந்ததுடன், அதன் பங்குகள் $77 வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது….
மஹிந்தவை வாழ்த்துவதா? மோடிக்கு கருணாநிதி கண்டனம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற வேண்டுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளமைக்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கண்டம் வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ எப்படிப்பட்ட இனப் படுகொலைக் குற்றவாளி என்பதை ஐ.நா. சபை வரை விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது. அவரே திரும்பப் பதவிக்கு வர வேண்டுமென்பது, அரசு அலுவலகங்களில் குற்றவாளியின் படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவும், அவர் புரிந்த போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஆதரிப்பது போலவே இந்தியப் பிரதமர் நரேந்திர…
க.பொ. த. சாதரண தர பரிட்சை மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை
க.பொ.த. சாதரண தரப் பரிட்சை மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களுக்கு நாளை மறுதினம் நள்ளிரவுடன் தடை விதிக்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் ஜயந்த புஸ்பகுமார தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி க.பொ.த. சாதரண தரப் பரிட்சை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி பா.உ பதவியினை எடுப்பதா? வேண்டாமா ? அமைச்சர் றிஷாத் பதியுதீன்
பாரிஸ் பா.உ.அஸ்வர் பதவி விலகியமையினை தொடர்ந்து ஊடகங்கள் அப்பதவிக்கு அமீர் அலி பா.உ நியமிக்கப்படலாம் என்ற செய்திகளை பரவலாக வெளியிட்டன. இருப்பினும், அ.இ.ம.கா. வின் தவிசாளர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி உறுதியாக “கல்குடா மக்களின் முடிவே எனது முடிவாகும்” – என்று கூறிவிட்டார். இதற்கு மத்தியில் நேற்று 30.11.2014ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சருமான றிஸாத் கல்குடாவுக்கு வருகை தந்தார். நேற்று மாலை மீராவோடையில் அமைத்துள்ள அமீர்…
மைத்திரியை பலப்படுத்துங்கள்; விரிவுரையாளர்கள் சங்கம் கோரிக்கை
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட களனி பல்கலைக்கழக தொல்பொருள் பிரிவின் பேராசிரியர் பிஷாந்த குணவர்தன, சமய தலங்கள் மற்றும் தொல்பொருள் அரும்பொருட்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம்சுமத்தினார். சமய…
பொது எதிரணியில் 35 அமைப்புக்கள்; உடன்படிக்கை இன்று கைச்சாத்து
பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளது. அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களென 35 அமைப்புகள் இன்றைய தினம் இதில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ள 35 அமைப்புகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (சந்திரிகா பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக கட்சி, புதிய சிஹல உறுமய, மௌபிம ஜனதா பெரமுன, தேசிய ஐக்கிய முன்னணி, உட்பட 20 கட்சிகள் அடங்குகின்றன. இந்த…
பணக்காரர்கள் பட்டியலில் IKEA நிறுவனரின் குடும்பம் முதலிடம்
சுவிட்சர்லாந்தில் உள்ள மக்களில் மிகுந்த பணக்காரர்கள் பட்டியலில் IKEA நிறுவனரின் குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது. சுவிஸின் தொழில்துறை நாளிதழான பிலான்ஸ், சுவிஸில் உள்ள 300 பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரபல மரச்சாமான்கள் விற்கும் நிறுவனம் வைத்துள்ள கம்பிராட்டின் (Ingvar Kamprad) குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது. இவர் தனது சொந்த நாடான சுவீடனில் வசித்து வந்தாலும், இவர்களது மகன் பீட்டர், ஜோனஸ் மற்றும் மத்தியஸ் ஆகியோர் சுவிஸ் கடவுச்சீட்டு வைத்துள்ளனர். இவர்களுக்கு சுவிஸில் 42…
பொது வேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மகள் பத்திரிக்கா சிறிசேன நேற்று பொலநருவையில் மகளிர் அமைப்புடன் தனது தந்தைக்காக முதலாவது அரசியல் பிரச்சாரம்
அஷ்ரப் ஏ சமத் எனது வாழ்க்கையில் எனத அம்மாவோ நானோ எனது தந்தையின் அமைச்சுகளுக்கோ கால் வைத்ததே கிடையாது. ஏனைய அமைச்சர்களது பிள்ளைகளைப்போன்று நாங்கள் தந்தையின் பவரைப் பாவித்தது கிடையாது. எனது அம்மாவுக்கு தனது தந்தையின் அமைச்சு மற்றும் வேறு வரப்பிரசாரங்களோ தெரியாது. ஆனால் எனது தந்தை ஒரு கரைபடியாத கைகள். அவர் ஒருபோதும் எங்களை அரச சொத்துக்களை சுரண்டியோ அல்லது சொத்துக்களை சேர்த்தவர் அல்ல. எனது வாழ்நாளின் இன்று தான் எனது தந்தை எடுத்துக்கொண்ட சவாலுக்கு…
நவீன் திஸாநாயக்க இராஜினாமா
அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சரான நவீன் திஸாநாயக்க அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துகொள்வதாகவும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அவர், எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் எதிரணியுடன் நாளை உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இவர் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
3200 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய, அதிநவீன விமான நிலையம்: துபாயில்
உலகின் மிகவும் பரபரப்பான இரண்டாவது விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகின்றது.இந்த பெருமை மட்டும் போதாது என்று தீர்மானித்த துபாய் அரசு, இந்த விமான நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ’துபாய் வேர்ல்ட் சென்ட்ரல்’ பகுதியில் மற்றோரு சர்வதேச விமான நிலையத்தை புதிதாக கட்ட ஏற்பாடு செய்து வருகின்றது. 32 பில்லியன் (3200 கோடி) அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்படும் இந்த விமான நிலையத்தை சுமார் நான்கரை…
