News
மஹிந்தவின் கடையி மூடிவிடுவோம்; அனுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடையை மூட வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்தவின் கடையில் காலாவதியான பொருள்களே விற்பனையாகின்றன. அவற்றின் விலைகளும் அதிகமானது. அதை விட அதில் காணப்படும் இனிப்புக்களுக்குள் விஷமுண்டு. அதனால் ராஜபக்சவின் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதன் பின்னர், மைத்திரிபால வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றிக்கொள்ள தொடர்ந்தும் போராடுவோம். மஹிந்தவின் கடையை மூடுவது சுலபமானதல்ல. சர்வாதிகார ஆட்சி முறைமையை முடிக்குக் கொண்டு வர வேண்டும்….
எனது அரசில் குறைகள் உண்டு; மஹிந்த
ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசிற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர். (o) நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன். இந்த அரசு குறைபாடுகள் இல்லாமல் இல்லை. போதைப் பொருள் காணப்படுகின்றது அவற்றை நாம் பிடிக்கின்றோம். இவற்றை பத்திரிகைகளில் பிரசூரித்து…
சீன அபிவிருத்தி தொடர்பான மோசடி அம்பலப்படுத்தப்படும் -நவீன்
சீன அபிவிருத்தி தொடர்பான மோசடிகள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசு சீனாவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இதில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடாத ஒர் ஜனாதிபதியையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும், அதற்கு மைத்திரிபால சிறிசேன பொருத்தமானவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (O)
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் 7ஆம் திகதி வரை ஏற்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை எதிர்வரும் 7ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பதிவு செய்த அரசியல் கட்சியொன்றிடமிருந்து 50 ஆயிரம் ரூபாவும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரிடமிருந்து 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
தனக்கு கிடைத்த சர்வதேச விருதை, முஸ்லிம் சகோதரிக்கு வழங்கிய மைத்திரியின் தாராள மனசு..!
(Rizvi Jawharsha) மைத்ரீ ஒரு பதிவு..! சில மாதங்களுக்கு முன்னர்…! சுகாதார அமைச்சரின் அலுவலகத்திலிருந்து அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு ஒரு அழைப்பு. ஒரு விஷேட வைபவம் குறித்த இடதிட்கு குறித்த நேரத்த்திட்கு வருமாறு அந்த அழைப்பு சுகாதார அமைச்சர் மைத்ரீ இடம் இருந்து. அனைவரும் வந்து சேர்ந்தனர். என்ன நிகழ்வு? ஏன் அழைக்கப்பட்டோம் ?அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அமைச்சரின் தொலைப்பேசியில் இருந்து அமைச்சின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் திருமதி Ahamed க்கு ஒரு அழைப்பு “வைபவத்திக்கு…
ஐ.தே.க.யில் இணைந்த நவீனுக்கு வந்துகுவியும் பேஸ்புக் வாழ்த்துக்கள்..!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் தனது பேஸ்புக் கணக்கில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று 01/12/2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மீண்டும் எனது அரசியல் தாய் வீட்டுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நுவரெலியா மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை…
க.பொ.த.சாதரத்தில் 9ஏ எடுத்த 265 முஸ்லிம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (photos)
அஸ்ரப் ஏ சமத் இலங்கை ஒலிபரப்புக் முஸ்லீம் சேவையின் ஆலோசகர் அகமத் முனவர் மற்றும் அவரது முஸ்லீம் கல்வி முற்போக்குச் சங்கத்தினால் 7ஆவது ஆண்டாக நாட்டின் நாலா பாகத்திலிருந்தும் 2013ஆம் ஆண்டில் க.பொ.த.சாதரத்தில் 9ஏ எடுத்த 265 முஸ்லீம் மாணவர்களுக்கு ருபா 9ஆயிரம் ருபா பணமும் சான்றிதழ், பாடசாலை உபகரணப் பொதிகள், பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ( 30/11/2014) கொழும்பு சாஹிராக் கல்லூரியில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பேராசிரியர் றிஸ்வி சரீப், அமைச்சர் றிஷாத் பதியுதீன்…
அனைத்து முஸ்லிம் தலைவர்களும் மைத்ரியுடன் இணைய வேண்டும் – ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகைர்
அஷ்ரப் ஏ சமத் இந்த நாட்டின் ஜனாதிபதியின் அரசில் இருக்கின்ற சகல முஸ்லீம் தலைவர்களும் விலகி பொதுஆபேட்சகர் மைத்திரிபாலசிறிசேனவுடன் இணைந்து கொள்ளல் வேண்டும். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகைர். வேண்டுகோள் இன்று 35 கட்சிகள் ;இணைந்து கொழும்பு விகாரமாகதேவி உள்ளக அரங்கில் கைச்சாத்திட்ட நிகழ்வில் ஜனாப் சுகையிர் கலந்து கொண்டிருந்தார். இந் நிகழ்வில் முன்னாள் முஸ்லீம் காங்கிரசின் எம்.பியும் ;ஈராண் நாட்டின் தூதுவராகவும் ருபாவாஹினி தலைவராகவும் கடமையாற்றியவர். எம்.எம். சுகையிர் விசேட போட்டியொன்றிலே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்-…
எதிரணிகள் வகுத்துள்ள வியூகங்கள்..??
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் இலங்கை அரசியல் இன்று என்ன நடக்கும்?நாளை என்ன எனக்கும்? என சுவாரசியத்திற்கும் பரபரப்பிற்கும் மத்தியில் தனது பயணப் பாதையை அமைத்திருப்பது யாவரும் அறிந்ததே! அரசாங்கத்தை வீழ்த்த அரசாங்க அம்பே பயன்படுத்தப் படும் அதுவும் அமைச்சராக இருந்த மைத்திரிபாலவே வருவார் என யாரும் கிஞ்சித்தேனும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை.வெற்றிக் கனி முதலை விட தனக்கருகில் பல மடங்கு அண்மித்து வந்து தலை விரித்து ஆடுவதால்,தானே அதனை சுவைக்க வேண்டும் என்ற ஆசையில் ஐ.தே.க…
Collection of Donations for the people Effected by Landslide – Koslanda
Drizzling Foundation joins hands for the second time, to collect, non perishable food items (biscuits, tin foods), bottled drinking water, clothes, under garments (new), towels, blankets, disposable nappies, foot wears, milk powders, stationery for the people who are affected by the landslides in Koslanda. Collection Points KOLLUPITIYA & BAMBALAPITIYA #116, Galle Road, Colombo-03 Call Arafath on…
முதலமைச்சர் வித்தகர் விருது பெற்றார் (photos)
கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் 2014 ஆம்; ஆண்டுக்கான கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முதலமைச்சர் வித்தகர் விருதைப் பெற்றுள்ளார். கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் நடாத்தும் இலக்கிய விழாவின் இவ்வருடத்திற்கான நிகழ்வு அண்மையில் அம்பாறை டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தின் போதே இலக்கியம் மற்றும் சமூக சேவைக்காக கலாபூஷணம் பி.ரி. அஸீஸ், முதலமைச்சரினால் வழங்கப்படும் வித்தகர் விருதும் பொற்கிழியும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தகவல் மற்றும் படங்கள் – வெலிகம ரிம்ஸா…
மரணிக்கும் வரை உங்களுடனேயே நாம் ! உங்கள் முடிவுடன் நாம் கைகோர்ப்போம் !! – வவுனியா மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றுபட்டு அறிவிப்பு (படங்கள் இணைப்பு )
ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்கின்றாரோ அந்த தீர்மானத்திற்கு நாம் கட்டுப்பட்டு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என வவுனியா மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் மேற்படி உறுதி மொழியை வழங்கியுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் எவரை ஆதரிப்பது தொடர்பில் வவுனியா மாவட்ட முஸ்லிம் மக்களின் கருத்தறியும் கூட்டம் வவுனியா சூடுவெந்தபுளவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அ.இ.ம.கா…
