News
சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் – இன்று
உலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா சார்பில் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பந்துல நாட்டை விட்டு வெளியேற ஆயத்தம்?
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த போட்டியிடும் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் குழுவின் முக்கியஸ்தரான அமைச்சர் பந்தல குணவர்த்தன திடீரென வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அரசின் முக்கிய அமைச்சர்கள் குழப்பத்தில் இருப்பதுடன் இவரின் விஜயத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமைச்சரின் வெளிநாட்டு விஜயம் எதற்கானது என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை. (ஒ)
மைத்திரிபால சிறிசேன ராஜபக்ச படையணியை விரட்டுவார்; ரணில் விக்கிரமசிங்க
ராஜபக்ச படையணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கிப் போராட்டம் செய்கின்றோம், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கெளதம புத்தர் சமாதானமாக ஒன்று கூடுங்கள், சமாதானமாகப் பேசுங்கள், சமாதானமாகக் கலைந்து செல்லுங்கள் எனப் போதனை செய்தார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசினர் தனியாக ஒன்றுகூடி; தனியாகப் பேசி; தனியாக முடிவெடுக்கின்றனர். உலகில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உள்ள நாடுகளில் 2 தடவைக்கு…
அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி!– மைத்திரிபால
அலரி மாளிகையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்குப் பொறுப்பாக செயற்பட்டு வரும் அதிகாரிகள் ஒவ்வொருவராக விலகிச் செல்கின்றனர். அரசாங்கத்திலிருந்து நான் விலகியதனைத் தொடர்ந்து பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் கட்சி என்னுடைய இழப்பினை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த காலங்களைப் போன்று வலுவான ஓர் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமயை காண முடியவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதிகாரத்திற்கான பாதை மூடப்படுகின்ற, நேரம்வந்துவிட்டது – ரணில் விக்ரமசிங்க
மக்களுக்கு பெற்று கொள்ள முடியாது போன சகல வெற்றிகளையும், கிடைக்க பெற செய்வதே தமது நோக்கம் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரஜைகள் சக்தி அமைப்பு ஒழுங்கு செய்த ஒன்றிணைந்த மக்கள் சந்திப்பு கொழும்பில் இடம் பெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் தினங்களில் தமது கொள்கை பிரகடனத்தை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…
தேசிய சங்க சபை முன்வைத்த 15 கோரிக்கைகளை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்
இலங்கையின் பௌத்த மக்களிடையில் செல்வாக்கு பெற்றுள்ள தேசிய சங்க சபை, பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தல் உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் அந்த சங்கம் நேற்று மைத்திரிபாலவுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்போது சங்க சபையின் பொதுசெயலாளர் வண. பஹியங்கல ஆனந்தசாகர தேரர் முன்வைத்த 15 அம்சக் கோரிக்கையை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்.. இதனையடுத்து கருத்துரைத்த தேரர், தாம் மைத்திரிபாலவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நான் வெற்றிபெற்றால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லமாட்டேன் – மைத்திரி
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று 2/12/2014 கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். தான் பதவிக்கு வந்த பின்பு நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருவது குறித்து குறிப்பிட்ட அவர், நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால்…
கொழும்பில் ஐக்கிய அரபு இராட்சியத்தின் 43வது தேசிய தின விழா நிகழ்வுகள்
ஏ.எஸ்.எம்.ஜாவித் ஐக்கிய அரபு இராட்சியத்தின் 43வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள ஐக்கிய இராட்சிய தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய தின நிகழ்வினை கொழும்பு கில்ட்டன் ஹோட்டலில் தூதரகத்தின் தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே.எச். அல்முல்லா தலைமையில் இன்று (02) மாலை இடம் பெற்றது. இதன்போது தேசிய தினத்தை கொண்டாடு முகமாக தூதுவர் மற்றும் பிரதம அதிதியின் உரைகளைத் தொடர்ந்து பிரதம அதிதி அமைச்சர் டிலான் பெரேரா, தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே.எச். அல்முல்லா மற்றும் முன்னாள்…
முசலிப் பிரதேசத்து மக்கள் ஹூனைஸ் எம்.பி க்கு விரைவில் பாடம் புகட்டுவர்! முசலி அ.இ.ம.கா உறுப்பினர்கள் கூட்டறிக்கை
ஏ.எச்.எம்.பூமுதீன் எதிரிகளை மன்னித்தாலும் துரோகிகளை ஒரு போதும் மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ள முசலி பிரதேச சபை தலைவர் எஹ்யா , பிரதித் தலைவர் பைறுஸ் மற்றும் உறுப்பினர்களான அப்துல் ரஹ்மான் ,சுபியான் ,காமில் ,சுல்பிகார் போன்ற சபையின் 06 அ.இ.ம.கா உறுப்பினர்களும் ஹூனைஸ் எம்பி , முசலி மக்களுக்கும் வன்னி முஸ்லிம்களுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் செய்த துரோகத்தனத்திற்கு முசலி மக்கள் விரைவில் சிறந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது தொடர்பில் முசலி பிரதேச…
மஹிந்த அரசிலிருந்து மேலும் 50 வீதமானோர் வெளியேறுவர்
எதிர்வரும் சில தினங்களில் அரசிலி ருந்த மேலும் 50 வீதமானோர் வெளி யேறவுள்ளதாக நேற்று முன்தினம் அரசிலிருந்து வெளியேறி ஐக்கியத் தேசியக் கட்சிக்குள் இணைந்து கொண்ட அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் அமைச்ச ரான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அத்தோடு, “”அரசிடம் என் சம்பந்தப் பட்ட “பைல்கள்’ (ஆவணங்கள்) இருக் குமானால் 24 மணித்தியாலங்களி லேயே அதனை வெளியிட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசிலிருந்து வெளியேறிய நுவ ரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரான…
கொடூரமான ஆட்சிக்கு முடிவுகட்டுமாறு நாட்டு மக்களுக்கு சந்திரிகா அழைப்பு
மனிதர்களைக் கொலை செய்யும் கொடூரமான அரசின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள் ளோம். எமது இந்தப் போராட் டத்துக்கு அனைவரும் ஆதர வளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா குமாரதுங்க நேற்று அழைப்பு விடுத்தார். அத்துடன், பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறி சேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் என நான் உறுதியளிக்கிறேன் என்றும் தெரிவித்தார். கொழும்பு – 07 விகாரமஹாதேவி பூங்காவில் நேற்று…
மைத்திரிக்கு ஆதரவு வழங்கும் ஜாதிக ஹெல உறுமய
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பங்காளியாக இருந்து வெளியேறியுள்ள நிலையில் கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி, அரசியல் யாப்பு மாற்றம் போன்றவற்றை ஜாதிக ஹெல…
