News
துமிந்த திஸாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு!
ஆளும் கட்சியின் அமைச்சுப் பதவிகளை துறந்து எதிர்க்கட்சியுடன் அண்மையில் துமிந்த திஸாநாயக்க இணைந்து கொண்டிருந்தார். துமிந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 20 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தவர்கள், திடீரென தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துமிந்த திஸாநாயக்கவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்…
மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்
மாநகர முதல்வர் ஏ.ஜே.எம் முஸம்மிலுக்கு இந்தக்கடிதம் நேற்று அனுப்பபட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற தயங்கினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது. குறித்த கோரிக்கை சட்டக்கடிதத்தில், கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்சவின் 1800 சட்டவிரோத சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமையானது 2006 ஜனவரி முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிரான செயல் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சுகாதார வாரமும் இரத்ததான முகாமும் 2014
“இரத்தம் வழங்கி உயிரைப் பாதுகாத்தல்” (Give Blood Save Life) என்பது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கோஷமாக மட்டுமன்றி, அதனை ஒட்டியதாக இரத்ததானம் எனும் உயிர்காக்கும் செயற்றிட்டம் உலகெங்கும் அரசாங்கங்களாலும் நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகின்றது. ஜூன் 14ஆம் திகதி சர்வதேச இரத்தான தினம் பிரகடனப்படுத்தப்பட்டு இந்நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஊக்குவிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை அனர்த்தங்கள், போர்ச்சூழல், விபத்துக்கள், குருதி தொடர்பான நோய்கள் முதலானவை இரத்த தானத்தை அதிகம் வேண்டி நிற்கும் சந்தர்ப்பங்களாகும். இச்சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கானோரை சாவின்…
பலஸ்தீனை உடனடியாக தனி நாடாக அங்கிகரிக்க வேண்டும் – பிரான்ஸ் பாராளுமன்றம்
பலஸ்தீனீல் இஸ்ரேல் தொடர்ந்து அத்துமீறி வருவதால் அதை முடிவுக்கு கொண்டு வருவதர்க்காக பலஸ்தீனை தனி நாடக பிரன்ஸ் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பிரன்சின் ஒஸான்சா(Osansa) உள்ளிட்ட பாரள மன்ற உறுப்பினர்கள் நேற்று கோரிக்க்கை வைத்தனர் பலஸ்தீனை தனி நாடக அங்கிகரிப்பது குறித்து உடனடியாக பாரளமன்றத்தில் வாக்கு எடுப்பு நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என்று அவர்கள் பிரான்ஸ் அரசை வேண்டி கொண்டிருப்பதோடு நடப்பு நாடாளமன்ற கூட்ட தொடரில் விவாதிக்க பட வேண்டிய விசயங்களின் பட்டியலில் பலஸ்தீனை அங்கீகரிப்பது…
கொழும்பில் முகாமிட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்
முஸ்லிம் காங்கிரஸ் அடுத்துவரும் தினங்களில் முக்கிய தீர்மானங்களை அறிவிக்கவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கொழும்பில் முகாமிட்டுள்ளனர். கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க, மு.கா. முக்கியஸ்தர்கள் கொழும்புக்கு வந்திருப்பதாக கட்சியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். (JM)
ஜனாதிபதி தேர்தலில் 2 முஸ்லிம்களும் போட்டி, கட்டுப்பணமும் செலுத்தினர்
அஷ்ரப் ஏ சமத் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன, ஒக்கொம ரஜவரு கட்சியின் சார்பில் எம்.பீ.தெமினிமுல்லே, சமாஜவாதி சமனதா கட்சியின் சார்பில் பானி விஜேசிங்க ,எக்சத் சமாஜவாதி கட்சியின் சார்பில் விஜேசிங்க சிறிதுங்கவும் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ராஜபக்ஷ…
”ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணித்தியாலங்களில் பொன்சேகாவின் வரப்பிரசாதங்களை மீளளிக்கப்படும்”
தாம் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் சில மணித்தியாலங்களில் முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் அகற்றப்பட்ட அனைத்து தரங்களையும், வரப்பிரசாதங்களை மீளளிக்கவுள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கு ஜனநாயக கட்சி எடுத்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது வேட்பாளர், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு முகம்கொடுக்க நேர்ந்த சம்பவங்கள் தொடர்பாக அரசாங்க அமைச்சர் என்ற…
ஊழலில் இலங்கை முன்னேற்றம் – டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல்
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண்ணின் பிரகாரம் 177 நாடுகளில் இலங்கை 85 ஆம் இடத்திலுள்ளது. கடந்த வருடம் இந்த பட்டியலில் இலங்கை 91 ஆம் இடத்திலிருந்தது. இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் 38 புள்ளிகளைப் பெற்று 85 ஆவது இடத்திலுள்ளன. 92 புள்ளிகளைப் பெற்று ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளதுடன், ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் வட கொரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் முதலிடத்தில்…
முல்லை. நீரா யூத் அமைப்பு- அமைச்சர் றிஷாத் சந்திப்பு
முஹம்மட் ரிபாக் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட நீரா யூத் கிளப் அமைப்பினருக்கும்;, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீராவிப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக விஷேட கலந்துரையாடலொன்றுக்கு அமைச்சர் வருகை தந்தபோதே குறித்த இளைஞர் அமைப்பினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் குடிசைக் கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச இணைப்பாளர் ஏ.ஜி.சிப்ரியின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின்…
மருதமுனையைச் சேர்ந்த சஞ்ஜித் சட்டக்கல்லூரிக்கு தெரிவு
ஏ.எச்.எம். பூமுதீன் 2015 சட்டக்கல்லூரி அனுமதிக்கான போட்டிப் பரீட்சையில் மருதமுனையைச் சேர்ந்த சஞ்ஜித் அகமட் சித்தியைடைந்துள்ளார். மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் மூத்த ஆசான்களில் ஒருவருமான எம்.எச் காதர் இப்ராஹிமின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்து. கல்முனை மாநாகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம் ரகீபின் மைத்துனரும் ஆவார்
5 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை
இந்த வருடத்திற்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் 5 ஆம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, சிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக 5ம் திகதி மூடப்படும் எனவும் 2015 ஆம் ஆண்டு முதல் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி 5 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் தவணை ஏப்ரல் 8 ஆம் திகதிவரை இடம்பெறும். முஸ்லிம் பாடசாலைகள்…
தேசிய அரசில் இணையுமாறு மஹிந்தவுக்கு பகிரங்க அழைப்பு
அமையப்போகும் தேசிய அரசில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு நேற்று முன்னாள் அமைச்சரும், ஜாதிக யஹல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்தார். “தேசிய நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்படவுள்ள இப்புதிய அரசில் இணைந்துகொள்வதற்காக பல பிரதானக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஆகவே, ஜனாதிபதி மஹிந்தவும் அவருடைய ஆதரவாளர்களும் இதில் ஒரு பங்காளியாக இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்” என சம்பிக்க மேலும் தெரிவித்தார். அத்தோடு, யுத்தக் குற்றச்சாட்டுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும்…
