Headlines

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் றிஷாத் (வீடியோ)

அண்மையில், யாழ்ப்பாணத்துக்கான அமைச்சர் றிஷாத்தின் விஜயத்தின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

Read More

ஆனமடுவ – மதவாக்குளம் முஸ்லிம்களின் சிறந்த முன்மாதிரி

அண்மையில் இலங்கையிலுள்ள ஆனமடுவ, மதவாக்குளம் என்ற ஊருக்கு குத்பா மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தோம் அல் ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் உதவியால் இலங்கையின் பல பாகங்களுக்கும் அவனது மேலான மார்க்கத்தை எத்திவைப்பதற்காக செல்லக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் தந்து கொண்டே இருக்கிறான், எல்லாப் புகழ்களும் அந்த ரஹ்மானுக்கே உரித்தாகட்டும். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை தேடிப்பார்ப்பதில் அலாதியானதொரு இன்பம் நமக்கு, அந்த வகையில் குத்பா நிகழ்த்திய மதவாக்குளம் ஜுமுஆ பள்ளிவாசலுக்கு சுமார்…

Read More

அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு அமைச்சர் றிஷாத் இறுதி மரியாதை

அகால மரணமான வட மாகாணசபை பிரதித் தவிசாளர் அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு அமைச்சர் ரிஷாட் இறுதி மரியாதை செலுத்தினார்.

Read More

அண்ணன் ஜெகநாதனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

-அமைச்சரின் ஊடகப்பிரிவு  – தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பாலமாகத் திகழ்ந்த வடமாகாண சபை பிரதித் தவிசாளர் அண்ணன் அன்டனி ஜெகநாதனின் அகால மரணம், தனக்கு அதிர்ச்சியையும், ஆறாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் கூறியதாவது, அண்ணன் அன்டனி ஜெகநாதன் 1972 ஆம் ஆண்டளவில் ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்டார். அதன் பின்னர் அதிபராகவும், கோட்டக் கல்விப்…

Read More

ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி 155ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் சனிக்கிழமை (01) காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தபால் ரயிலில் சிக்குண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

ஜனாதிபதி யாழ் விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்காக “விவசாய நிலத்திற்கு மின்சாரம்” என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலி, பொன்செல்வமஹால் அரங்கில் இந்த நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. இலங்கை விவசாயிகளுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக இலங்கை விவசாய துறையில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியும் என…

Read More

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு மரண தண்டனை

தம்பதியரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை நேற்று (29) நீதிபதி என்.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த தம்பதியரின் குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் 50 வயதான நீர்வேலி பகுதியைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தெல்லிப்பளையில் குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பொலிஸார் ஐவரை கைது செய்ய உத்தரவு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி, கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளங் காணப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு, குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று புதன்கிழமை (21) உத்தரவிட்டார். மேலும், 5 சந்தேகநபர்களின் வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்து, அதனை உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

Read More

சங்ககார முல்லைத்தீவுக்கு விஜயம்

வருடாந்தம் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி2016ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில்ஆரம்பமாகியது. நேற்று மாலை (20) இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான குமார் சங்ககார விஷேட அதிதியாக கலந்துகொண்டு குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நாளைய தினம் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது இப்போட்டியில் 23 அணிகளுக்கான போட்டிகள் ஆரம்பமாகும். இதில்…

Read More

மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் வித்தியா வழக்கு!

புங்குடுதீவில் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோநாதன் வித்தியா மீதான படுகொலை வழக்கு தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம். றியால் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் இதுவரை பன்னிரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின் போது,…

Read More

ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலையம் சட்டமும், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில், விஷேட  அதிதிகளான கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று (18/09/2016) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிதிகளாக எம்.பிக்களான சுமந்திரன், சித்தார்த்தன், டாக்ட ர். சிவமோகன், மஸ்தான், டக்லஸ் தேவானந்தா, சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா…

Read More