Headlines

இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு!

பலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக கவனஞ்செலுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை நேற்று (05) ஐ.நா தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். பலஸ்தீனின்…

Read More

மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினராக பஹத் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரபீடக் கூட்டம், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையி்ல், கடந்த 15ஆம் திகதி அன்று, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான மர்ஹூம் பாயிஸ் அவர்களின் மருமகன் பஹத் கட்சியின் உயர்பீட உறுப்பினராக (High Command Member) நியமிக்கப்பட்டார். அதன்பிற்பாடு, நேற்றைய தினம் (04) கட்சித் தலைமையகத்தில், தலைவர் ரிஷாட் பதியுதீனை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்….

Read More

‘காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

எதேச்சாதிகாரத்தில் நடந்துகொள்ளும் இஸ்ரேலின் போக்குகளை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், காஸாவை கைப்பற்றும் திட்டங்களை கைவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (02) உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “சமாதான உடன்படிக்கையை மீறியுள்ள இஸ்ரேல் மீண்டும் கொலைகாரன்போல் செயற்படத் தொடங்கியுள்ளது. குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவிகளைக் கொன்று குவித்து, காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் யூத அரசின் போக்குகள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகுக்கே ஜனநாயகத்தை போதிக்கும் மேற்குலக…

Read More

Video- “கைத்தொழில் முயற்சிகளை முன்னேற்ற முறையான திட்டம் தேவை” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

கைவிடப்பட்டு வரும் கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு கொரியா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்புக்களை பெற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வர்த்தக வாணிபம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (01) சபையில் உரைநிகழ்த்திய அவர் கூறியதாவது, “அந்நியச்செலாவணியை அதிகம் ஈட்டும் துறைகளில் கைத்தொழில்துறை பிரதானமானது. அரசு அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளால், சிறிய மற்றும்…

Read More

Video- “தமிழர்கள், முஸ்லிம்கள் என்பதாலா கிழக்கு மாகாண சதொச ஊழியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்?” –

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் கேள்வி! கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய தினம் (01) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நான் கைத்தொழில் வர்த்தக அமைச்சைப் பொறுபேற்ற போது…

Read More

“பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட கனவான் உடன்படிக்கைகளை மீறி செயற்படும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் நயீமுல்லாஹ்”

மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் அன்ஸிலின் விஷேட ஊடக அறிக்கை! சகோதரர் நயிமுல்லா மஸீஹுத்தீன் அவர்களே..! புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட கனவான் உடன்படிக்கைகளை மீறி செயற்படும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சகோதரர் நயீமுல்லாஹ் ஆகிய தங்களின் நடவடிக்கைகள் பற்றி எமது கட்சி கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளித்தமைக்கு பதிலளிக்கும் வகையில், தங்களால் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக அறிக்கை தொடர்பில் அகில…

Read More

விஷேட செய்தியாளர் மாநாடு!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவது தொடர்பான விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், இன்று (16) கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் சுபைர்தீன், சட்டவாக்கப் பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். Video Link : https://fb.watch/omX06Z7ORM/

Read More

‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? – ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’ – VIDEO

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்குள்ள அரச அதிகாரிகளும் ஒரு…

Read More

காசாவில் யுத்த நிறுத்தத்தை வேண்டி நிற்கும் இலங்கை எம்.பிக்கள் – கொழும்பு ஐ.நா தலைமையகத்தில் மகஜர் கையளிப்பு!

The letter signed by 159 Parliamentarians to the United Nations with regard to the Palestine issue was handed over to the United Nations Office at the UN Headquarters today 14th November at 11.00 am after which a copy of the same was delivered to the Palestinian Ambassador in Colombo. காசாவில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய…

Read More

“முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருகிறது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

மன்னார், மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கலீபா மரைக்கார் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “மர்ஹூம் இக்பால் ஹாஜியார் அவர்கள் முசலி பிரதேச சபையின் உறுப்பினராகவும் சமூர்த்தி அதிகாரியாகவும் இருந்து, அந்தப் பிரதேச மக்களின் நலனுக்காகப் பணிபுரிந்தவர். முசலியின் மீள்குடியேற்றத்தில் அதீத அக்கறையுடன் செயற்பட்ட அன்னார், புத்தளத்திலும் வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும்…

Read More

மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் எம்.பி நீக்கம் – விசாரணையின் பின் உயர்பீடம் முடிவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான அலிசப்ரி ரஹீம் சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்திய சம்பவம், கட்சிக்கும் சமூகத்துக்கும் அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும் மற்றும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே,…

Read More