Headlines

கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிப் பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், மற்றும் விரிவாக்கற் கற்கைள் நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவித்தலில், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் தற்போது மீண்டும் 11.06.2016 இலிருந்து தொடர்ந்து நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் அனைவரும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த அட்டவணையின் பிரகாரம் பரீட்சைகளுக்கு சமூகம் கொடுக்குமாறு…

Read More

முன்பள்ளி மாணவர்களின் கல்வியில் கூடுதல் கரிசனை வேண்டும்!

-திருமலை அரசாங்க அதிபர் தெரிவிப்பு- 2015 ஆம் ஆண்டு முன்பள்ளி மாணவர்களுக்கு தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று (8) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. முன்பள்ளி மாணவர்களின் கல்வி தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுவதாகவும் முன்பள்ளி ஆசிரியைகள் முன்பள்ளி தொடர்பான டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்வது இன்றிமையாயதது என்றும் நாட்டின்…

Read More

கிழக்கு பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று (9) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

Read More

நாவிதன்வெளி பிரதேசத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி

– எம்.எம்.ஜபீர் – நாவிதன்வெளி பிரதேசத்தில் புனித ரமழான் மாதம் மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு மின் விளக்குகள் பொருத்தும் பணி மற்றும் திருத்தும் நவடிக்கைகளை பிரதேச சபை உழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நாவிதனவெளி பிரதேச சபை செயலாளர் எம்.ராமக்குட்டியின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த காலங்களில் அதிகமான பிரதேசங்களில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்பட்ட பிரதேசங்கள் இனங்காணப்பட்டு புதிதாக மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்றுவருகின்றது. கடந்த காலங்களில் பிரதேச சபையிடம் சமூக தொண்டு அமைப்புக்கள் மற்றும் பிரதேச…

Read More

நசீர் மன்னிப்பு கேட்க, வேண்டுமென்பது தவறானது – ஹசன் அலி எதிர்ப்பு

-விடிவெள்ளி  ARA.Fareel- கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் சம்பூர் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற நிகழ்வில் கடற்­படை தள­ப­தி­யுடன் நடந்து கொண்ட விதம் தொடர்­பாக அவர் மன்­னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரப்­ப­டு­வது தவ­றாகும். ஒருவர் தவறு செய்­தி­ருந்­தாலே மன்­னிப்புக் கேட்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரி­வித்தார். கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நடை­பெற்ற சம்­ப­வத்­துக்கு மன்­னிப்பு கேட்க வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு…

Read More

(Full Story) காத்தான்குடி சிறுமி சூடு விவகாரம்; வளர்ப்புத் தாய்க்கு நீதிமன்றில் நடந்த சோகம்

– விஷேட நிருபர் – காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் இருந்து வந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் நேற்று (24) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட போதிலும், சிறுமிக்கு சூடு வைத்ததாக கூறப்படும் சிறுமியின் வளர்ப்புத்தாய்க்கு எவரும் சரீரப்பிணை நிற்பதற்கு முன் வராததால் சிறுமியின் வளர்ப்புத்தாய் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு…

Read More

மாவட்ட புற்றுநோய் சங்கத்திற்கு நன்கொடை

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் சங்கத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நிர்மாணிப்பாளர்கள் நலன்புரிச் சங்கத்தினால் ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை (23) மாமாங்கத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் வை. தர்மரட்ணம் கருத்து தெரிவிக்கும் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் நோயாளர்களின் நலன் கருதி கொழும்பு மற்றும் மஹரகம புற்று நோய்…

Read More

வெள்ளப்பெருக்கு ; காத்தான்குடி பள்ளிவாயல்கள் விடுத்துள்ள அறிவித்தல்

-பழுலுல்லாஹ் பர்ஹான் – தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகளவான பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி தங்களது வீடுகளை விட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை நாம் அறிவோம். 2011 ம் ஆண்டு நமது பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அணர்த்தத்தின் போது தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நமக்கு அதிகளவான நிவாரண உதவிகள் செய்ததை நாம் மறக்க முடியாது. அதனடிப்படையில் நமது பிரதேசம் தழுவியதாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெள்ள அனர்த்த நிவாரன நிதி…

Read More

பாசிக்குடாவில் மூன்றுநாள் விழிப்புணர்வு பயிற்சி நெறி!

பாசிக்குடாவில் சுற்றுலாத் துறையினை விருத்தி செய்யுமுகமாக சுற்றுலா சேவை வழங்குனர்களுக்கான மூன்றுநாள் விழிப்புணர்வு பயிற்சி நெறியொன்று நேற்று(12) பாசிக்குடா அமெயா வீச் சுற்றுலா விடுதியில் ஆரம்பமானது. சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ அமைச்சின் கீழ் உள்ள இலங்கை சுற்றுலா அதிகார சபையினால் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இப்பயிற்சிக் கருத்தரங்கானது நேற்று ஆரம்பமாகி இன்று(13) மற்றும் நாளை(14) என மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

Read More

மட்டு மாவட்ட செயலகத்தில் ஐ.நா அலுவலகம்!

அரசாங்க மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இணைச் செயற்பாடுகள், கொள்கைகளுக்கு ஏதுவாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அலுவலகம் நேற்று புதன்கிழமை(11) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தினுள் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் திறந்து வைத்தார். அவருடன் மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகளும், பங்காளர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் மட்டக்களப்பு…

Read More

சூடு வைக்கப்பட்ட சிறுமியின் அழுகுரல் (அவசியம் வாசியுங்கள்)

எனக்கு காயம் சுகமாகி நான் எப்போது வீடு போவேன்? இது காத்தான்குடியில் வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் எதிர்பார்ப்பு. சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலீம் வீதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்றன. இந்த இரண்டு மாதங்களும் அந்த சூடு வைக்கப்பட்ட சிறுமியின் சூட்டுக் காயங்களுக்கு மருந்து போட்டு சிகிச்சைகள்…

Read More

நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் ஜபீர்

நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் எம்.முஹம்மட் ஜபீர் நேற்று (11) ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் இளைஞர் ஒருவர் நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.  நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரீ.சுதன் என்பவர் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமையினால் அவருடைய ஏனைய பதவிகளையும் வகித்து அதன் பணிகளை செய்வதிலுள்ள வேலைப்பளு காரணமாக நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய தலைவரைத்…

Read More