ACMC News
சம்மாந்துறை ; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மக்கள் சந்திப்பு
கலைமகன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும் மக்கள் சந்திப்போன்று அண்மையில் சம்மாந்துறையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும் கிழக்கு மாகாண அமைப்பாளருமான கணணி பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா கலந்துகொண்டார். 100க்கும் அதிகமான தமிழ் ,முஸ்லிம் பெண்களை உள்ளடக்கிய மகளிர் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் மக்களின் மத்தியில் தற்போதைய சூழ்நிலையில் எமது சமுகத்தின் தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் எதிர்வரும்…
மாகாண நிதி ஒதுக்கீட்டில் இருந்து சிலவற்றை பெற்றுத்தர உ றுதியளிக்கின்றேன் – றிப்கான் பதியுதீன்
பாடசாலையின் கோரிக்கை தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதினின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாடசாலையின் சில தேவைப்பாடுகளை தமது மாகாண நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுத்தருவதாகவும் கூறினார். வவுனியா சூடுவேந்தபுளவு அல்-இக்பால் பாடசாலை யில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது – வவுனியா மாவட்டத்தின் கல்வி…
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்களே, என் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்துகின்றனர் – றிஷாத் பதியுதீன்
என் மீது சுமத்தப்படுவது போலி குற்றச்சாட்டுக்கள் எனவும்,இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட அமைப்புக்களின் மற்றுமொரு சதியாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு வெளி மாவட்டத்தாரின் குடியேற்றமும் இடம் பெறவில்லையெனவும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே மீளக்குடியேறுவதாகவும் கூறினார். தற்போது தொடர்ச்சியாக சில ஊடகங்கள் வெளியிட்டுவரும் வில்பத்து காட்டுப் பகுயினை அமைச்சர் றிசாத் பதியுதீன் அழிப்பதாக கூறும் செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வியாழக்கிழமை கொழும்பில்…
அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் சிராஸ் மீராசாஹிப் இணைவு
அகமட் எஸ். முகைடீன் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் ஸ்தபகத் தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (05.06.2015) மாலை தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது கட்சியில் இணைந்து கொண்ட சிராஸ் மீராசாஹிப்பிற்கு கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவி அமைச்சர் றிஷாத் பதியுதீனால் வழங்கிவைக்கப்பட்டது….
அம்பாறை மாவட்டத்தில் அதிக மக்கள் ஆதரவைப்பெற்ற கட்சியாக ACMC தோற்றம் பெறும் – சுபையிர்
றியாஸ் ஆதம் அம்பாறை மாவட்டத்தில் அதிக மக்கள் ஆதரவைப்பெற்ற கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் தோற்றம் பெற்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் இம்மாவட்டத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் தையல் பயிற்;சி நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
சதொச விற்பனை நிலையம் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்துவைப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையத்தை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதின் இன்று திறந்து வைத்தார். பிரசித்தி பெற்ற மடு மாத ஆலயத்திற்கு வருகைத்தரும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களினது நலன் கருதியும்,பிரதேச மக்களின் நன்மை கருதியும் அமைச்சர் இந்த விற்பனை நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நிறுவனங்களில் சதொச நிறுவனமும் ஒன்றாகும.100 நாள்…
நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது – றிஷாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் பள்ளிசாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் தேவை தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இன்று விஜயம் செய்த அமைச்சர்…
சாய்ந்தமருதில் ஆடை கைத்தொழில் பயிற்சி நிலையம் திறப்பு
எஸ்.அஸ்ரப்கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடின் அயராத முயற்சியினால் கொண்டுவரப்பட்ட ஆடை கைத்தொழில் பயிற்சி நிலைய திறப்பு விழா இன்று (04) திங்கட்கிழமை அம்பாரை மாவட்டத்தின் சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கலந்து கொண்டு இந்நிலையத்தினை திறந்து வைத்தார். கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவினரின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது அமைப்பாளர்…
இறக்காமத்தில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும், பயன் பெரும் குடும்பங்களை விழிப்பூட்டும் கூட்டமும்..
அப்துல் அஸீஸ் இறக்காமம் பிரதேசத்துக்குட்பட்ட வறிய குடும்பம்களை சேர்ந்த யுவதிகலுக்காக தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும், இவ்விடயம் தொடர்பாக பயன் பெரும் குடும்பங்களை விழிப்பூட்டும் கூட்டமும் இறக்காமம் பிரதான வீதியில் நேற்று மாலை (03 ) இடம்பெற்றது. இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அமைக்கப்படுள்ள இந்த பயிற்சி நிலையம்களின் ஊடக இறக்காமம் பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பம்களை சேர்ந்த யுவதிகள் கட்டம் கட்டமாக தொடர்சியாக பயன்பெறவுள்ளனர். இறக்காமம் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் எ.எம்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் அமீர் அலி ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
தாராபுரத்தில் நீரில்மூழ்கி வபாதானகளுக்கு அமைச்சர் றிஷாதின் அனுதாபச் செய்தி
தாராபுரத்தில் ஊரில் ஏற்பட்ட மிகத்துக்கமான செய்தி கேள்வியுற்ற உடன் தனது சகல நிகழ்ச்சி நிரல்களையும் ரத்துச்செய்துவிட்டு திரும்பினேன். உண்மையில் எதிர்பாராதது இறைவன் வாக்கழித்த சுவர்க்கத்தை பெறும் கூட்டத்தில் இருவரும் உள்ளார்கள் அத்துடன் அவர்களது சுவனத்துக்காக பிராத்திப்பதுடன், துயரத்தில் வாழும் குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுகின்றனர்….
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் பள்ளிசாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் தேவை தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இன்று விஜயம்…
கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60வது யுவதிகலுக்கான தையல் பயிற்சி நிலையம்கள்..
அப்துல் அஸீஸ் கல்முனை பிரதேசத்துக்குட்பட்ட கல்முனைக்குடி மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய இடம்களில் தையல் பயிற்சி நிலையமகளை திறந்து வைக்கும் நிகழ்வுகள் நேற்று (03ஆம் திகதி ) இடம்பெற்றது. இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அமைக்கப்படுள்ள இந்த பயிற்சி நிலையம்களின் ஊடக கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60வது யுவதிகள் பயன்பெறவுள்ளனர். புடைவை மற்றும் ஆடைகள்நிறுவனத்தின்அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சதேச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான…
