ACMC News
உரிமைகளை வென்றெடுப்பதற்கு ACMCயில் இணைவதற்கான விண்ணப்படிவம் வழங்கும் நிகழ்வு
அகமட் எஸ். முகைடீன் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பயணத்தில் கைகோற்பதற்கான கட்சியின் அங்கத்துவ விண்ணப்பப் படிவம் வினியோகிக்கும் நிகழ்வு குறித்த கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரது சாய்ந்தமருது வாசஸ் தலத்தில் நேற்று (28/05/2015) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்துவ விண்ணப்பப் படிவமானது சிராஸ் மீராசாஹிபினால் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது ஶ்ரீறிலங்கா முஸ்லிம்…
முஸ்லிம்களுக்கு எதிராக புதிய இனவாத நாடகம் அரங்கேற்றம் : அமைச்சர் றிஷாத் குற்றச்சாட்டு
முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை மூடி மறைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் றிஷாத் பதியூதின், பெரும்பான்மை இன ஊடகங்கள் சில முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்திற்கு தூபமிடுகிறது என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியூதீன் மேலும் தெரிவிக்கையில், பெரும்பான்மை இன ஊடகங்களும் சில இனவாத சக்திகளும் இணைந்து இன்று புதியதொரு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளனர்….
வில்பத்து விவகாரம் தொடர்பில் இன்று TNL ஜனஹன்ட நிகழ்வில் றிஷாத் பதியுதீன் பங்கேற்பு
வில்பத்து விவகாரம் தொடர்பில் சிங்கள சமகத்தில் மத்தியில் இருந்த ஐயப்பாட்டை ஓரளவாவது நீக்கிய அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் அது தொடர்பான விளக்கங்களை வழங்கும் பொருட்டு TNL தொலைக்காட்சியில் இடம்பெறும் ஜனஹன்ட நேரடி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இன்று திங்கள் கிழமை இரவு 9.30 மணிக்கு குறித்த ஜனஹன்ட நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. அம்பாறை மாவட்டம் தீகவாபி தொடர்பில் அன்று சிங்கள மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சைக்கு குறித்த தொலைக்காட்சி ஊடாகவே முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம்…
எங்களுடைய உரிமையைவிட்டுக் கொடுக்கின்ற கோழைகளாக நாங்கள் இருக்கத் தேவையில்லை – றிஷாத் பதியுதீன்
அண்மைக்காலமாக இந்தநாட்டில் இனவாதம் தலை தூக்கியிருக்கிறது. எந்தளவுக்கு என்றால் எங்களுடைய சொந்த பூமியான கரடிக்குழி, மறிச்சிக்கட்டி, பாலைக்குழி,பெரியமடு ஆகிய கிராமங்களில் காடுகளை அழித்து குடியேறுவதற்குக் கூட நாங்கள் பௌத்த சமயக் கோட்பாட்டுக்கு அநியாயமிழைக்கின்ற ஒரு சமூகமாக இந்தநாட்டில் இருக்கின்ற 90 விகிதமான சிங்கள மக்கள் மத்தியிலே காட்டுகின்ற வகையில் இலங்கையில் இருக்கின்ற சிங்கள ஊடகங்கள் திட்டமிட்டு சதிசெய்து கொண்டிருக்கிறது. அவை மட்டுமல்ல இந்தப் பிரதேசங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒருகாட்டுப் பிரதேசமாககெசட் பண்ணப்பட்டுள்ளது. இதில் சோந்தக்…
அமைச்சர் றிஷாதை வெளிநாட்டு சக்திகளுடாக தோற்கடிப்பதற்கு பல சதி- சுபையிர்
றியாஸ் ஆதம் வடமாகாணத்தில் பிறந்து இந்த நாட்டில் தேசிய அரசியலில் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைமைத்துவமாகப் பிரகாசிக்கும் அமைச்சர் றிசாட் பதியுத்தீனை வெளிநாட்டு சக்திகளுடாக தோற்கடிப்பதற்கு பல சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்; கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிரின் முயற்சியினால் ஏறாவூர் இரும்பு வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு வாகான உதிரிப்பாகங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்…
எந்த சவாலையும் சந்திக்கும் துணிவும், தியாகமும் றிஷாத் பதியுதீனையே சாரும்..!
-அபூ அஸ்ஜத் – தற்போது எமது நாட்டில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டுவரும்,குறிப்பாக ஊடகங்கள் பிரபலம் செய்துவரும் வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம்களின் குடியேற்றஙகள் என்னும் தலைப்பிலான செய்திகளுக்கு ஹிரு தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம் பெற்ற பலய என்னும் சிங்கள மொழியிலான கலந்துரையாடல் பெரும் தெளிவினை ஏற்படுத்தியுள்ளாக ஆய்வாளர்களும், சில ஊடகவியலளார்களும் தமது கருத்துக்களை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதில் இருந்து காணமுடிகின்றது. இற்றைக்கு ஒரு மாத காலமாக குறிப்பிட்டு பேசப்பட்டுவரும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும்…
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்சி விஸ்தரிப்பு பணி பொத்துவில் பிரதேசத்தில் (படங்கள் இணைப்பு)
கலைமகன் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்சி விஸ்தரிப்பு பணியொன்று அண்மையில் பொத்துவில் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளரும் சிம்ஸ் தனியார் பல்கலைகழக பணிப்பாளர் நாயகமுமான கணணி பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த அதிகளவிலாலான இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகள் பல ஆராயப்பட்டதுடன் அகில இலங்கை மக்கள் …
என்னை தாக்குவதாக நினைத்து என் மக்களை தாக்காதீர்கள் – அமைச்சர் றிஷாத் (வில்பத்து விவகாரம்)
ஊடகப் பிரிவு என்னை தாக்குவதாக நினைத்து எனது மக்களை தாக்காதீர்கள் என அமைச்சர் றிஷாத் தெரிவித்தார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சில ஊடகங்கள் முஸ்லிம்கள் மீதும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீதும் அபாண்டங்களை சித்தரித்துக் காட்டுகின்றனர். இது தொடர்பாக இன்று (20.05.2015) ஏற்பாடு செய்யப் பட்ட ஏற்றுமதி – இறக்குமதி அதிகார சபையின் கூட்ட மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டாவறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் றிஷாத்…
அமைச்சர் றிஷாதின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் நீதியமைச்சர்
– அஸ்ரப் ஏ சமத் – 2014 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யத் தவறிய வாக்காளர்களை மீண்டும் தேர்தல் இடாப்பில் உள்வாங்கும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றைகொண்டுவரதுரிதநடவடிக்கைமேற்கொள்ளப்படுகின்றது. அ.இ.ம.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீனீன் வேண்டுகோழுக் கிணங்க நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதற்கான நடவடிக்கையை மேற்கெண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்குமுன்னர் நீதியமைசசர் ராஜபக்சவை அமைச்சர் றிசாத்பதியுத்தீன் சந்தித்து இந்தவிடயத்தை சுட்டிக்காட்டியதுடன் இது தொடர்பானஅவசரநடவடிக்கைஎடுக்குமாறு கோறியிருந்தார். அமைச்சர் றிசாத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் ராஜபக்ச…
ACMC யின் கிழக்கு மாகாண இணைப்பாளராக சித்தீக் நதீர் நியமனம்
றியாஸ் ஆதம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மைகோப் நிறுவனத்தின் பணிப்பாளருமான சித்தீக் நதீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்குமாகாண இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அண்மையில் வெள்ளவத்தை கிரான் மெரீன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கி வைத்தார். சமூக சேவையாளரான சித்தீக் நதீர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மருதமுனை மற்றும் நாவிதன்வெளி பிரதேச இளைஞர் அமைப்பாளராகவும்…
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியிடத்தில் அமைச்சர் றிஷாத் பகிரங்கவேண்டுகோள்….!
வில்பத்து காட்டுப் பகுதியில் அத்துமீறி முஸ்லிம் குடியேற்றத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்வதாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபாண்டம் தொடர்பில் நேற்று அமைச்சரவையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடத்தில் அமைச்சரவை உப-குழுவொன்றினை நியமித்து விசாரனையொன்றினை செய்யுமாறு கோறியுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த வேண்டுகோளை பகிரங்கமாக விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக சில ஊடகங்களும்,இனவாத அமைப்புக்களும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக வடமாகாணத்துக்கு உட்படாத வடமேல் மாகாணத்திற்குட்பட்ட வில்பத்து காட்டினை அழித்து பிற மாவட்ட…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு கண்டனம்
அபு அலா இந்நாட்டு முஸ்லீம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது மிக தைரியமாக குரல் கொடுக்கும் துணிச்சல்மிக்க ஒரேயொரு முஸ்லிம் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதினை குற்றம் காண்பதன் மூலம் இந்நாட்டு முஸ்லிம்களின் வாழும் உரிமையினை மறுக்க சிலர் முற்படுகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் எடுக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.ஏ.சீ.நஜீப் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை (13)…
