Headlines

பெரியமடு மஹா வித்தியாலயத்தில் நவோதய கட்டிடம் திறப்பு

இன்று  எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகளையும்,சவால்களையும் முகம் கொடுக்கும் துணிவை இறைவன் கொடுத்துள்ளான் என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசியலை மக்களின் விமோசனத்திற்காக பயன்படுத்தாமல் தனிப்பட்ட நோக்கங்களுக்காக செயற்படுத்துகின்ற போது அது மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவாகும் என்றும் கூறினார். மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியமடு மஹா வித்தியாலயத்தில் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நவோதய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மடு…

Read More

முசலி பிரதேச பரிசளிப்பு விழா

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற கழகங்களுக்கான பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை முசலி தேசிய பாடசாலையில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அழைத்துவரப்படுவதையும்,முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய யஹ்யான்,வடமாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் எம்.முனவ்வர் ஆகியோர் அமர்ந்திருப்பதயும்,வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத்தினை மாகாண சபை உறுப்பினர் வழங்கி வைப்பதையும் படத்தில் காணலாம்.

Read More

முகா 40 பேர் அ.இ.ம.கா. வில் இணைவு

– அப்துல் அஸீஸ் –  அட்டாளைச்சேனை  பிரதேசத்தை சேர்ந்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 40பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று ( 14 ) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மத்திய குழு ஆலோசகராக பணியாற்றிய,  மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ  உதவிப் பணிப்பாளரான எம்.ஏ.சி.முகமட்  ரியாஸ்யின்  தலைமையில்  40பேர்கள்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி  வை.எல்.எஸ்.ஹமீட் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இன்று…

Read More

உத்தேச தேர்தல் சீர் திருத்தத்தை ACMC நிராகரிப்பு – YLS ஹமீட்

எஸ்.அஸ்ரப்கான் இன்று 2015.06.12 வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுபான்மை கட்சிகளின் எதிர்ப்பபையும் மீறி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்காக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற உத்தேச தேர்தல் சீர் திருத்தத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமையாக நிராகரிப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் காட்டமாக சற்று முன் குறிப்பிட்டார். இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது, விகிதாசார பிரதிநிதித்துவமும், தொகுதி முறையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை இருக்கின்ற நாடுகளில் எல்லாம் இரட்டை வாக்குச் சீட்டு முறையே நடைமுறையில்…

Read More

கையெழுத்திட்டு நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள் –  றிஷாத் பதியுதீன்

வட மாகாண முஸ்லிம்  மக்களின் மீள்குடியேற்றம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடுபூராக உள்ள ஜூம்மாப்பள்ளி வாயில்களில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து சீட்டில் உங்கள் கையெழுத்தை வைத்து நீங்களும் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள். எமது உரிமைக்காய் என்றும் போராடுபவர்களாகவும் தன்மானமுள்ள முஸ்லிம்களாகவும் இருக்க அல்லாஹ் என்றும் துணை இருப்பானாக! –  றிஷாத் பதியுதீன்

Read More

நான் கட்சி மாறவில்லை.. பொய் பிரச்சாரத்திற்கு இடமளிக்க வேண்டாம்

-எம்.ரீ.எம்.பாரிஸ்- கட்சி மாறவில்லை பொய் பிரச்சாரத்திற்கு இடமளிக்க வேன்டாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிகாக நான் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றேன். என  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் ஊடகங்களுக்கு விஷேட பேட்டி.. இலங்கையிலுள்ள சகல உள்ளுராட்சி மன்ற சபைகளும் கலைக்கப்பட்டு இந்நாட்டு மக்கள் புதியதொரு பாராளு மன்ற தேர்தல் ஒன்றையும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒன்றையும் எதிர்பாத்து காத்திருக்கும் இக்கால கட்டத்தில் தாம் சார்த்த கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும்…

Read More

வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும் -சுபைர்

– அபூ பயாஸ் – முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது கட்சி பாகுபாடுகளை மறந்து ஒன்றிணைந்த முஸ்லிம் முன்னணியொன்றை அமைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையென  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் கொலைப்பட்டியலிலிருந்து விடுவித்து ஜனாதிபதியாக நாமம் சூடுவதற்கு முஸ்லிம்கள் பெரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். ஆனபோதிலும், தற்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதிகூட தட்டிக்கேட்பதில்லை என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்-தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் கல்விப்…

Read More

சுயநல அரசியல் கட்சிகளை விரட்டியடிக்க மக்கள் தயார்

– நூர் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளையோர் அணி உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் அமைப்பாளர் மௌலவி முஹம்மது சலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஏராளமான இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருந்தனர். இந்த இளையோர் அணி அங்குராப்பன நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும்,கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய…

Read More

முஸம்மில் இனவாதக் கருத்துக்களை உடன் நிறுத்த வேண்டும் – வை.எல்.எஸ். ஹமீட்

எஸ்.அஸ்ரப்கான் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு தம் எஜமானர்களின் ஊது குழலாக செயற்பட்டு முஸ்லிம் சமூகத்தை அபகீர்த்திக்குள்ளாக்குவதையும், முஸ்லிம் சமூதாயம் தொடர்பாக இனவாதிகளின் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கின்ற அறிக்கைகளை வெளியிடுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஹம்மட் முஸம்மிலுடைய தலைவர் விமல் வீரவன்சவின் முஸ்லிம் விரோத கருத்துக்களை…

Read More

20வது தேர்தல் திருத்தம்: பிரச்சினை என்ன?

(தொகுப்பு அஸ்ரப் ஏ சமத்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் 20வது தேர்தல் திருத்தம் சம்பந்தமாக முஸ்லீம்கள் இழக்கும் பாராளுமன்ற ஆசனங்கள் பற்றிய அவரது கருத்துக்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் சிறுபான்மைகள் குறிப்பாக முஸ்லீம்கள் 95வீதத்திற்கு மேல் வாக்களித்து ஜனாதிபதியாகத் தெரிபு செய்வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை செய்தவர்கள். என்பதற்கு நன்றிக் கடனாக அவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கு மேல் குறைக்கின்ற ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்த முற்படக் கூடாது….

Read More

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் – றிஷாத் பதியுதீன்

ரஸீன் ரஸ்மின் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணிகளை பிடித்து அங்கு அரபு நாட்டு முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிப்பதாகவும் ஒருசில அரசியல்வாதிகள் கூறி முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் கிராமத்தில் முஸ்லிம் மக்களை சந்தித்த…

Read More

முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் அமைச்சர் றிஷாதுடன் இணைவு

அஸ்ரப் ஏ சமத் வரப்பத்தான் சேனை முன்னாள் முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் சிலா் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீனைச் சந்தித்து அவரது கட்சியில் இணைந்து கொண்டனா். படத்தில்  அமைச்சர் னை பதியுதீன்,  கட்சியின் பொதுச் செயலாளா் நாயகம் வை.எல்.எஸ். ஹமீத் மற்றும் வரப்பத்தான் சேனை முன்னாள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் காணப்படுகின்றனா்.

Read More