ACMC News
கல்வி அமைச்சர் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் சந்திப்பு
– முஹம்மது சனாஸ் – மலையக தோட்டப்புற தமிழ் மொழி மூலமான முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க ஆகியோரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துரையாடினார். அதேவேளை, இது தொடர்பில் அகில இலங்கை மக்கள்…
அரசியல் இலாபங்களை எவரும் பார்க்கக் கூடாது – றிஷாத் பதியுதீன்
மாணவ சமூகத்திற்கான கல்வியினை பெற்றுக் கொடுக்கின்றபோது அதில் அரசியல் இலாபங்களை எவரும் பார்க்கக் கூடாது, கடந்த அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்ததன் படியால் இந்த மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளுக்கு மஹிந்தோதய ஆய்வு கூடங்களை கொண்டுவர முடிந்தது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இதன் மூலம் பிரதேசத்தின் கல்வி துறை போட்டித்தன்மைக் கொண்டதாக மாறும் என்றும் கூறினார். மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்கையன்குளம் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வு…
அனைத்து கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க ஒருபோதும் உடன்படமாட்டேன்! பிரதமர் அறிவித்ததாக றிஷாத் பதியுதீன் தெரிவிப்பு
ஏ.எச்.எம்.பூமுதீன் இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.. அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்றும் பிரதமர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார். அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற சிறிய மற்றும் சிறுபான்மை கட்சித் தலைவர்களுடான சந்திப்பின்…
பெரும்பாண்மை இன சகோதரர்கள் அமைச்சர் றிஷாதுடன் இணைவு!
அகமட் எஸ். முகைடீன் அம்பாறை மாவட்டத்தின் தமன, உகன, தெகியத்த கண்டிய, நாமல் ஓயா போன்ற பிரதேசங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களாக செயற்பட்ட பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின்பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அரசியல் பயணத்தில் (18.06.2015) இணைந்து கொண்டனர். மறைந்த பெரும் தலைவர் இன மத வேறுபாடு கடந்து தேசிய ஐக்கிய முன்னணியினை உருவாக்கி சகல இனத்தவரையும் ஒரு…
றிஷாத் பதியுதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் சிங்கள ராவய முறைப்பாடு
அமைச்சர் றிஷாத் பதியூதீனை கைது செய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு கோரியுள்ளது. சிங்கள ராவய அமைப்பு அமைச்சருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. வில்பத்து வனப் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைச்சர் தொடர்புபட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உரிமைக்காக குரல் கொடுக்கும் றிஷாதுக்கு; புனித மாதத்தில் துஆ செய்யுங்கள்
– அபூஹஸ்மி – கண்ணியமிக்க ரமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இப்புனிதமிகு நோன்பு காலத்தை பயபக்தியோடும் இறை அச்சத்தோடும் எதிர்கொண்டு பூரண பலன் அடைய முயற்சிக்க வேண்டும். கடந்து சென்ற ரமளானில் நமது சமூகம் பெரியதொரு நெருக்கடியை சந்தித்தது. அதுதான் கிரிஸ் பூதம் என்றும் கொள்ளையர்கள் என்ற பெயரிலும் எமது சமூகத்தின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் விடப்பட்டது. நாட்டின் நாலா புறங்களிலும் காணப்பட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள பெண்கள் ஆண்கள் இரவு நேரங்களில்…
ஒரு அங்குலமேனும் அரச காணிகளை நான் பெற்றிருக்கவில்லை – அமைச்சர் றிஷாத்
– அபூ அஸ்ஜத் – நான் வில்பத்து காட்டுக்குள் 600 ஏக்கர் வாழைத்தோட்டம் வைத்திருப்பதாக பொய்களை அவிழ்த்துவிட்டு அரைவேக்காட்டுத்தன அரசியல் செய்பவர்கள் அதனை நிரூபித்துக்காட்டுமாறு சவால்விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அல்லாஹ்வின் மீது சத்தியமாகக் ஒரு கூறுகின்றேன்,ஒரு அங்குலமேனும் அரச காணிகளை நான் மன்னாரிலோ,வவுனியாவிலோ,முல்லைத்தீவிலோ பெற்றிருக்கவில்லை ,என பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் கூறினார். முசலி பிரதேச கல்வி மேம்பாட்டுக்கும்,வளர்ச்சிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பங்களிப்பு அத்தோடு…
இந்த பதவிகள் சமுகத்தை பாதுகாக்கவே – றிஷாத் பதியுதீன்
முஹம்மத் சனாஸ் இன்று என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று செயற்படும் நபர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நான் அணிந்திருக்கும் இந்த பதவிகள் என்கின்ற அணிகலன் மக்களை பாதுகாக்கவே,எமது இந்த மக்களின் தேவைகள் பூர்த்தியாக்கப்படும் எனில் இதனை கழட்டிவிட நான் தயாராக இருக்கின்றேன்.அதே போல் இந்த மக்களுக்கு கவசமாக செயற்படக் கூடியவர்கள் தலைமை தாங்க தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான…
உதவி செய்வதன் மூலம் இன்பம் காண்பவர் அமைச்சர் றிஷாத் – துல்கர் நயீம்
உதவி செய்வதன் மூலம் இன்பம் காண்பவர் அமைச்சர் றிஷாத் ; சட்டத்தரணி துல்கர் நயீம் (முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர்) ஜே.எப்.காமிலா பேகம் கடந்த சனிக்கிழமை பொலன்னறுவை சி.டி.எஸ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் கிழக்குமாகான சபை உறுப்பினரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய சட்டத்தரணி துல்கர் நயீம் மேற்படி கருத்தை தெரிவித்தார். சுங்காவில் முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர்N.A.A.நாசர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இங்கு மேலும்…
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நகர காரியாலய திறப்பு விழா
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நகரகாரியால திறப்பு விழாவும் வீடமைப்பு அதிகாரசபையின் இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கலும் இன்று கல்முனையில் இடம்பெற்றது .அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி yl .சாஹுல் ஹமீட் அவர்களின் அழைப்பின் பேரில் சமுர்த்தி ,வீடமைப்பு பிரதியமைச்சர் MSS. அமீர் அலி இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த தமிழ்,முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடமைப்பு அதிகாரசபையின் இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டது….
த.தே.கூ. வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றதுக்கு ஆதரவு வழங்க வேண்டும்
ஏறாவூர் அபூ பயாஸ் கிழக்கு மாகாணசபை நேற்று (16) காலை கூடியபோது ,வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமான பிரேரணையில் எனக்கும் பேச சந்தர்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த எம்.எஸ்.சுபைர் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில். இன்று முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ மாகாணசபை உறுப்பினரான சகோதரர் ஜெமீல் அவர்கள் வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பிரேரணையை கொண்டுவந்தமையிட்டு அவருக்கு நன்றி கூறிக்கொள்வதோடு,வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இன்று தேசிய ரீதியாக…
புனித நோன்பு ஆரம்பமும்; றிஷாதின் வேண்டுகோளும்
ஏ.எச்.எம்.பூமுதீன் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலக வாழ் முஸ்லிம்கள் அனைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு, புனித நோன்பு மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த வேளையில் இந்த 30 நாட்களையும் கண்ணியமிக்கதாகவும் சகோதர இனங்களுக்கு இடையில் பரபஸ்பர நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையிலும் எமது செயற்பாடுகளையும்…
