ACMC News
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் வெல்லாங்குளம் தேவன் பிட்டி கிராம மக்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசப்பிரிவுக்கு உட்பட்ட வெல்லாங்குளம் தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த 59 குடும்பங்களுக்கு ரூபாய் 465 000.00/- பெறுமதியில் இலவசமான மின் இணைப்பு மானி பொருத்தும் வேலைத்திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (2019.07.01) இடம்பெற்றது. மின்னிணைப்பிற்கான காசோலைவழங்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டார். இந்த…
முசலிப்பிரதேசத்தில் கம்பெரேலியா வேலைத்திட்டம் சம்மந்தமான கலந்துரையாடல்..
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரேலிய நிதிஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(2019.07.02) முசலி பிரதேச செயலாளர் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது. கிராமங்களிடையே அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்தும் முகமாக நடாத்தப்பட்ட இக் கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி விடயங்களை கேட்டறிந்து கொண்டதோடு பிரதேசத்தில் நடைபெறும் வேலைத்திட்டங்களை முடிப்பதோடு மேலும் முக்கிய வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது…
பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கந்தளாவில் அபிவிருத்தி பணிகள் அங்குரார்ப்பண நிகழ்வும் திறப்பு விழாவும்..
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திறப்பு விழா நிகழ்வும் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம் பெற்றுள்ளது குறித்த அபிவிருத்தி நிகழ்வு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று (30) இடம் பெற்றன. பேராறு இரண்டாம் கொலனி முகைதீன் ஜூம்ஆ பள்ளியின் சுற்று மதில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது அஸ்சபா பாடசாலை வீதி சுமார் பத்து…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கந்தளாய் பிரதேச மத்திய குழு தெரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கந்தளாய் பேராரு மேற்கு பிரதேசத்துக்கான மத்திய குழு தெரிவு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்றது. கட்சியின் தொண்டர்களைக் கொண்ட இக் குழுவானது இன்று (30) கந்தளாய் ஆயிஸா வித்தியாலயத்தின் மண்டபத்தில் இடம் பெற்ற மத்திய குழு தெரிவில் பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன. எதிர்கால நடவடிக்கைகள் யாவும் இவ் மத்திய குழு ஊடாக கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அபிவிருத்திகள் உட்பட…
அரபு மொழி பலகை அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்கள், பாடசாலைகள், அரபு கலாசாலைகளில் அரபு மொழி பலகை அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கல்குடா பிரதேசத்தின் காணப்படும் அரபு வாசகங்களை அகற்றுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, நாவலடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பிரதேசத்தில் காணப்படும் பள்ளிவாயல்கள், மதரசாக்களில் உள்ள அரபு மொழியிலான பெயர்…
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டு மன்னார் பெரியகடை கடற்கரை மற்றும் அணைக்கட்டு வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்….
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களது கம்பெரேலிய திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து பெரியகடை நகரத்திற்கான கொங்கிரீட் பாதை மற்றும் அணைக்கட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. ரூபாய் 1.6 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதை மற்றும் அணைக்கட்டு திறந்துவைக்கும் நிகழ்வானது மன்னார் நகர சபை வேற்பாளர் அன்டன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து…
ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென தெரிவுக்குழுவில் அம்பலம்
முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தெரிவுக்குழு விசாரணைகள் மூலம் பொய்ப்பிப்பு. இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கினார். அவர் வழங்கிய சாட்சியம் வருமாறு, கேள்வி : ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தினர். இக்காலப் பகுதியில் விசாரணை நடவடிக்கைகளுக்கு எவரேனும் அழுத்தங்களை…
கல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு
சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளுராட்சி சபையினைக் கோரி கல்முனை பிரதேசத்துடன் கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த போதும், தற்போதைய நிலையில் கல்முனையைக் காப்பாற்றுவதற்காக, முஸ்லிம்கள் என்கிற வகையில் கல்முனை மக்களுடன் சாய்ந்தமருது மக்கள் கைகோர்த்திருப்பதாக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலக்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். இன ரீதியானதும், நிலத்தொடர்பற்றதுமான பிரதேச செயலகத்தை வழங்கக் கூடாது எனக் கோரி, கல்முனையில் முஸ்லிம் மக்கள் நடத்திவரும் சத்தியாக்கிரக நடவடிக்கையில், இன்று வெள்ளிக்கிழமை…
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட சாவற்கட்டு கிராமத்திற்கான 1.5 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் விதியினை திறந்து வைத்தார்
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரலிய திட்ட ஒதுக்கீட்டில் இருந்து ரூபாய் 1.5 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சாவற்கட்டு கிராமத்திற்கான கிராமத்தகத்திற்கான கொங்கிரீட் வீதி மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் வடிவுக்கரசி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டு புனரமைப்பு…
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார் சவுத்பார் கிராமத்திற்கான 1 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதையினை திறந்துவைத்தார்
முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரேலிய வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் 1 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சவுத்பார் கிராமத்திற்கான கொங்கிரீட் வீதி மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் கலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் வீதி திறப்புவிழா…
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே தீர்க்க முடியும். வேறு எந்தவொரு சக்தியாலும் அதனை மேற்கொள்ளமுடியாது. காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர். இவர்கள்தான் இன்று அமைச்சர்களை பதவி…
அதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் – பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி
அதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் – பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாக அதுரலியே ரத்ன தேரர் கருத்துக்களை கூறி தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் சதிகளை முன்னெடுக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் குறிப்பிட்டார். சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் முயற்சி தோல்வியடைந்த காரணத்தினால் இன்று தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிருகின்றனர் என்றார். பாராளுமன்றத்தில் இன்று…
