Headlines

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல் பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல் பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது சுமார் 175 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடமானது இன்று (24) பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வர்த்தகவாணிப கைத்தொழில் கூட்டுறவு,நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறநது வைக்கப்பட்டது. .இப்பகுதி இளைஞர்களின் நீண்ட கால தேவையாக இருந்த இக் ஹோட்டல் பாடசாலை மூலமாக…

Read More

சிறுபான்மை வாக்குகளை சிதைத்து அதிகாரத்தை கைப்பற்ற இனவாதிகள் முயற்சி. புத்தளத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிதத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், இந்த நாட்டில் இனவாத,மதவாத்திற்கு எதிரான எல்லோரும் சந்தோஷமாக வாழக் கூடிய ஒரு நாட்டை கட்டி எழுப்பக் கூடியவராக சஜித் பிரேமதாசவை அடையாளம் கண்டிருப்பதாகவும் கூறினார். புத்தளம் கொழும்பு முகத்திடலில் புதன் கிழமை மாலை இடம் பெற்ற ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் வெற்றிப் பயணத்தில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் நேற்று(22) கருக்காமுனையில் உள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந் தலைமையில் நடை பெற்ற இக் கலந்துரையாடலில் சஜீத் பிரேமதாசவின் வெற்றிக்கான பயணம் தொடர்பில் பேசப்பட்டது.. இதில் அப்பகுதியின் கட்சி ஆதரவாளர்கள் கிண்ணியா நகர சபை உறுப்பினர்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தெரிவித்தார். கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில்…

Read More

அனைவரும் சமம் என கூறிய தலைவரே எமது நாட்டுக்கு சிறந்தவர்! – சஜிதின் வெற்றியை நிச்சயித்துக் கூறுகின்றார் இஸ்மாயில் எம்.பி

நாங்கள் இன்று சஜிதை ஆதரக்க முனைந்திருப்பது அவரது முழு மூச்சான சமூக சிந்தனைக்காவே தான்! சஜித் பிரேதாசவுடன் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளோம். அந்த சந்தர்ப்பத்தில் சிறுபாண்மைக்கு நீங்கள் தரும் உத்தரவாதம் என்னவென்று வினவிய வேளையில் அவர் கூறிய முதல் வார்த்தை ‘இந்நாட்டில் சிறுபாண்மை, பெரும்பாண்மை என்ற எண்ணமே வேண்டாம். இலங்கையர் என்ற வகையில் அனைவரும் சமம்’ என்பதாகும். இதுதான் சஜித்திடமுள்ள உயரிய பண்பு. – இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். புதிய ஜனநாய…

Read More

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எந்தவொரு பிரச்சனை வருவதற்கும் நாம் இடமளியோம் அமைச்சர் ரிஷாத்..

பயங்கரவாதி சஹ்ரானோடு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பு பட்டதாகக் கூறி சம்பந்தமே இல்லாத பழையதொரு ஒளி நாடாவினை வைத்துக் கொண்டு   அவரை கைது செய்ய வேண்டும் என நாசகாரச் செயற்பாட்டாளர்கள் சதித் திட்டமொன்றை தீட்டி அவர் மீது    வேண்டுமென்றே குற்றச்சாட்டொன்றை சுமத்துகின்றார்கள். அவ்வாறான அநாகரீகம் மிக்கவர்களின் செயற்பாடுகளை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மிக வன்மையாக கண்டிப்பதுடன், சகோதரர் ரவூப் ஹக்கீமுக்கு எந்தவொரு பிரச்சினை வருவதற்கும் நாம் எந்தவொரு விட்டுக் கொடுப்புக்களையும் புரியப்…

Read More

தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள் – அப்துல் மஜீத் குற்றச்சாட்டு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு போலியான பிரசாரங்களின் தொடர்ச்சியாகவே தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் இன்னொரு பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அப்துல் மஜீத் (எஸ்.எஸ்.பி)  தெரிவித்தார். அண்மைக்காலமாக இந்த நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவது தமக்கு கவலையளிப்பதாகவும் தன்னை மட்டுமல்ல மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களை குறிவைத்து திட்டமிட்டு இந்த தீய…

Read More

அமைச்சர் றிஷாட்டின் கரங்களை பலப்படுத்தி தொடர்ந்தும் பயணிப்பேன்.. வெளியேறப்போவதாக கூறுவது கட்டுக்கதை என்கிறார் சிராஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து தான் வெளியேறப்போவதாக பரப்பப்படும் செய்திகள் அப்பட்டமான பொய் எனவும் அரசியலில் இருந்து தன்னை ஓரங்கட்டுவதற்காக  சதிகாரர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த புனைகதைகளை நம்பவேண்டாம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும் முன்னாள் மேயருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின்  கரங்களை  பலப்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு முழுமையான  ஒத்துழைப்புக்களை நல்குவேன் எனவும் அவர் உறுதியளித்தார். அண்மைக்காலமாக வேண்டுமென்றே தன்னைப்பற்றி பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தான் கட்சி…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்கும் கூட்டம் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் தலைமையில் ஆனமடுவ மதவாக்குளத்தில் இடம்பெற்றது….

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் புத்தள மாவட்டம் ஆனமடுவ மதவாக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அலி சப்ரி ரஹீம் அவர்கள் கூறுகையில்…! எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது சிறுபான்மை சமூகம் பாரிய சவால்களுக்கு மத்தியில் இந்த தேர்தலை எதிர்நோக்க இருக்கின்றோம்..எமது சமூகத்தின் நலன் கருதி சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒன்று…

Read More

சூரங்கல் _ முள்ளிப்பொத்தானை வீதி காபட் வீதியாக பிரதியமைச்சரின் அயராத முயற்சியினால் அங்குரார்ப்பணம் செய்து வைப்பு.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த சூரங்கல்- முள்ளிப்பொத்தானை வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான முதல் கட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (.05) துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதியானது 4கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட சுமார் 51 மில்லியன் ரூபா செலவில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் கீழ் இயங்கும்  வீதி அபிவிருத்தி…

Read More

அல் அமான் அறபிக் கல்லூரிக்கான சுற்றுமதிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

கிண்ணியா ஏழுபுளியடி கிராமத்தில் உள்ள அல் அமான் அறபிக் கல்லூரியின் சுற்றுமதில் நிர்மாணிப்புக்காக அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (05) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வர்த்தகவாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற திட்ட செயலணி ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் இச் சுற்றுமதில் நிர்மாண நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. இவ் நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான…

Read More

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் என கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள் மற்றும் நீர்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விழால்ஓடை மற்றும் மூக்கறையான் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டீர்களோ அதுபோன்று எதிர்வரும்…

Read More