ACMC News
கட்டாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வரவேற்பு
கட்டாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வரவேற்பு. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு- *இன்று 16ஆம் திகதி (திங்கள் கிழமை), இரவு 8 மணிக்கு, ஸைடூன் ரெஸ்டோரண்ட், சல்வா வீதி, டோஹா கட்டாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் கட்டார் வாழ் கட்சியின் ஆதரவாளர்கள் கீழ் உள்ள தொலைபேசி…
ஏறாவூர் மீரா முன்பள்ளி பரிசளிப்பு விழா தலைவர் றிப்னாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது .
ஏறாவூர் மீரா முன்பள்ளி பரிசளிப்பு விழா 13.12.2019 தலைவர் றிப்னாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது .இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலக செயலாளர் அல் அமீன், பொது சுகாதார அதிகாரி வைத்தியர் தாரிக் , பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் அல்ஹாஜ் லத்தீப், கணக்காளர் நெளபி மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கு றிப்னாஸ் ஆசிரியரால்…
சஹ்ரானை சந்தைப்படுத்த முடியாதென்பதால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்: ரிஷாத் பதியுதீன்
இன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாதி சஹ்ரானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் எடுத்துரைத்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் சஹ்ரானை அரசியல் ரீதியில் சந்தைப்படுத்த முடியாது என்பதால் அவர்களுக்குப் புதிய இலக்குகள் தேவைப்படுகிறது. ஆகையால் அதற்கு தன்னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இலக்கு வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை…
புத்தள மாவட்ட மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று(08) நடைபெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடானான சந்திப்பில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதேச அமைப்பாளர்கள் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
கிண்ணியா உப்பாறு கடலில் வல்லம் குடை சாய்ந்ததில் ஒருவர் பலி ,இருவரை காணவில்லை,இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு _மீட்புப் பணியில் படையினர்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடலில் இன்று (08) வல்லம் குடை சாய்ந்ததில் ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது அதிகாலையில் வெள்ளம் காரணமாக தங்களது விவசாய செய்கைக்காக வல்லத்தில் சென்ற வேலையில் வல்லம் குடை சாய்ந்ததில் ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் காப்பாற்றப்பட்டு கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது மீட்புப் பணியில் கடற்படையினருடன் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டுவருவதாகவும்…
நீதியும், நியாயமும் உயிர்வாழுமேயானால் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது -வவுனியாவில் ரிஷாத் பதியுதீன்
நீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனை வழங்க முடியாதெனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். சிங்கள இலத்திரனிய ஊடகங்களில் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக அபாண்டங்களை பரப்பினாலும் உண்மைகளை பொய்யாக்கி விட முடியாதெனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். வவுனியா சின்னசிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று (30) இடம்பெற்ற போது.பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள்…
பலமான சக்தியாக மீண்டெழுவோம். மன்னாரில் றிஷாட்.
சிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மன்னாரில் பலகிராமங்களுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். ஆட்சியை தொடங்கிய குறுகிய காலத்தில் அராஜகம் தொடங்கியுள்ளது.புத்தளம் கனமூலைக்கு மக்களை சந்திக்க சென்றபோது…
மக்களாணையை மதித்தே பதவி விலகுகின்றோம் – மீண்டும் அமைச்சு பதவியை கோருவதாக கூறப்படுவது பொய் பிரச்சாரம் ; ரிஷாத் பதியுதீன் – எம்.பி
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு கிடைக்கப்பெற்ற மக்களாணையை மதித்து அமைச்சு பதவிலிருந்து தாம் விலகுவதாகவும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு, இன்று காலை (21) இடம்பெற்ற போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சின் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், அவர்…
சாய்ந்தமருது பள்ளிவாசல் தனது முடிவை மாற்றி அறிக்கையிட முன்வர வேண்டும். அமைச்சர் றிசாட் பகிரங்க அழைப்பு!!!
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையையும் சுய கெளரவத்தினையும் பலப்படுத்த சாய்ந்தமருது பள்ளிவாசல் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எடுத்துள்ள முடிவினை மாற்றி மீள் அறிக்கையிட முன்வரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் பகிரங்க அழைப்பு விடுத்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் நெடா நிறுவனத்தின் தவிசாளருமான சிறாஸ் மீராசாஹிப் தலைமையில் புதன் கிழமை மாலை…
மீராவோடை மேற்கு வட்டாரக் குழு தலைவர் றிஸ்வின் தலைமையில் மகளிர்களுக்கான கருத்தரங்கு.
மீராவோடை மேற்கு வட்டாரக் குழு தலைவர் றிஸ்வின் தலைமையில் நேற்று (13) மகளிர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் முன்னாள் தவிசாளர் ஹமீட், பிரதேச சபை உறுப்பினர்களான ஜெஸ்மின், ஜெமிலா, நபீரா , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பாயிஷா, மத்திய குழு செயலாளர் அக்பர் , மக்கள் சக்தி தலைவர் றபீக், மக்கள் சக்தி தலைவர்…
அண்ணன் தம்பிமார்களே கொடூரமான ஆட்சியை முன்னரும் நடாத்தினார்களே மீண்டும் அதிகார மோகமா??
கடந்த மஹிந்த ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் அண்ணன் மஹிந்த கோத்தபாய பஷில்ராஜபக்ஸ போன்றோர்களே நாட்டை கொடூரமான ஆட்சிக்கு இட்டுச் சென்றுள்ளார்கள் மீண்டும் இவர்களுக்கு ஏன் இந்த அதிகார மோகம் பிடித்துள்ளது . பொருளாதார ரீதியாகவும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் நாசமாக்கிய அண்ணன் ,தம்பிகளுக்கு மீண்டும் வாக்களித்து நாட்டை கொடுக்க முடியாது என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார் தோப்பூரில் இன்று (13) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில்…
சஜித்தின் ஆட்சி காலத்தின் எனது பாராளுமன்ற கிடைப்பனவுகள் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஏழை மாணவர்களுக்கு – உறுதிமொழி அளித்தார் இஷாக் எம்.பி.
சஜித் பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் தனக்கு கிடைக்கப்பெறும் பாராளுமன்ற கிடைப்பனவுகளை அனுராதபுர மாவட்டத்தில் ஏழை குடும்பங்களில் வசிக்கும் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமை பரிசில் ஊடாக வழங்குவதாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் சத்தியக்கடதாசி மூலம் உறுதிமொழி அளித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து அனுராதபுரத்தில் நடைபெற்ற “ஒன்றாய் முன்னோக்கி” மக்கள் பேரணியில் கலந்துகொண்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் குறித்த சத்திய கடதாசியினை ஜனாதிபதி…
