Headlines

ad34@hFacMC

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வரலாற்று சிறப்புமிக்க முதலாவது உரை

இர்ஷாத் றஹ்மத்துல்லா நேற்று இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக இன்று 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சத்திய பிரமாண நிகழ்வில் நாடடு மக்களுக்கு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் இங்கு உரையாற்றுகையில் கூறியதாவது சமூக,அரசியல் ,பொருளாதார…

Read More

மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க மைத்திரி மறுப்பு

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்காது நீதிபதி ஸ்ரீபவன் முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளார்.

Read More

பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க

அஸ்ரப் ஏ சமத் இன்று பி.பகல் புதிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தற்போது கடமையில் உள்ள பிரதம நீதியரசர் மோகான் பீரிஸ் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்யமாட்டார். அவர் உயர் நீதியரசர் சி.சிறிபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். எதிர்வரும் திங்கட் கிழமை பிரதம நீதியரசராக இருந்து ஜனாதிபதியால் வெளியேற்றப்பட்ட சிராணி பண்டாரநாயக்க மீள பிரதம நீதியரசராக புதிய ஜனாதிபதியினால் நியமிக்கப் பட உள்ளார். அத்துடன் புதிய பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதி செயலாளரும் இன்று இரவு நியமிக்கப்பட…

Read More

ரணில் தலைமையில் விசேட கலந்துரையாடல்; ஹக்கீம் ,றிஷாத் பங்கேற்பு

முகம்மட் ராசித் ஹனான் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்ற நடைபெற்றது. இதில் ஐக்கிய தேசியின் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், சரத் பொன்சேக்கா, அதுரலிய ரத்னதேரர், மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், கரு ஜெயசூர்யா, அர்ஜுனா ரணதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Read More

மைத்திரிக்காக வாக்களித்த மக்களுக்கு எனது இதயபூர்வ நன்றிகள் – றிஷாத் பதியுதீன்

A.S.M.இர்ஷாத் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அரியணையில் அமர்த்துவதற்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளை வெளிப்படுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வலுப்பெற இந்த வெற்றி பெரிதும் உதவுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுவேற்பாளர் வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் கூறியதாவது:- இந்த நாட்டில் சிறுபான்மை மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் பட்ட துன்பங்கள், துயரங்கள் இனி முடிவுக்கு வரும்….

Read More

வாக்களிக்கச் செல்லாத இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோரே ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவில் ஈடுப்படாது தவிர்த்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூதின் வாக்கு ஏறாவூர் அல் – அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலையிலும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமடின் வாக்கு ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலும் பதிவு செய்யப்பட வேண்டியிருந்தபோதிலும் இவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரவில்லை என கூறப்படுகின்றது. இறுதிக் காலக்கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்…

Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இனவாதம் அடக்கப் பட்டது; ஞானசாரரை தேடி வலைவீச்சு

(சிபான்) அமைதியான இலங்கையில் ஆரம்பம் முதல் ஒற்றுமையாக வாழ்ந்த மூவின மக்களின் இடையில் மத தீவிர வாதத்தை தூண்டி விட்டு இலங்கையில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்த முயற்சித்த ஞானசார தேரரின் தலைமையிலான பொது பலசேனா தலைமறைவு. இதனையடுத்து, ஞானசார தேரரையும் அவரது சகாக்களையும் மக்கள் அவர்களை தேடும் பணியில் தீவிரம்.

Read More

பொதுபலசேனா தப்பியோட்டம்!

கண்டி குருநாகல் வீதியில் மல்லவப்பிட்டியப் பகுதியில் முஸ்லிம் நபருடைய வீட்டை பலவந்தமாக பிடித்துக் கொண்டிருந்த இடத்தில் குருநாகல் மாவட்ட பொது பல சேன அமைப்பின் அலுவலகம் எனப் பெயரிடப்பட்டிருந்த விளம்பரப் பலகை இன்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த வீடு கொழும்பு உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பிஸ்கால் மூலம் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்ட போது பலவந்தமாக திடீரென அவ்விடத்தில் பொது பலசேன அமைப்பின் மாவட்டக் காரியலம் கடந்த ஒரு வருடத்திற்கு காலத்துக்கும் மேலாக செயற்பட்டது என்பது…

Read More

தோல்வியை ஏற்றுக் கொண்ட மஹிந்த; அலரிமாரிகையிலிருந்து வெளியேறினார்

தோல்வியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பையடுத்து அலரிமாரிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி (செய்தி எழுதப்படும் வரை) மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

20,000 மன்னார் மக்கள் வாக்களிக்கச் செல்வதில் சிக்கல்: புத்தளம் அரசியல்வாதி கைவரிசை?

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்ட மக்களில் சுமார் 20,000 பேர் இன்றைய தேர்தலில் வாக்களிப்புக்குச் செல்வது புத்தளம் அரசியல்வாதியொருவரால் தடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்களை அங்கிருந்து மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக தேர்தல் ஆணையாளர் 20 பேரூந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்ததோடு முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தரப்பு 200 பேரூந்துகளை ஏற்பாடு செய்திருந்ததாகவும் எனினும், புத்தளம் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அங்குள்ள சாரதிகளை அச்சுறுத்தி அவர்களின் பிரயாணத்தை தடுத்து வருவதாகவும் சட்டத்தரணி ருஸ்டி ஹபீப்…

Read More

கஹவத்த துப்பாக்கி சூடு ; படுகாயமடைந்த மைத்திரி ஆதரவாளர் சாவு

இரத்தினபுரி – கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மைத்திரியின் ஆதரவாளர் இன்று உயிரிழந்துள்ளார். எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக்கு மேடை அமைத்துக் கொண்டிருந்த போது கடந்த 5 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்யுமாறு பெல்மடுல்ல நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More