Headlines

ad34@hFacMC

தையல் பயிற்சி நெறியை பூர்த்திசெய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் குருநாகல், உடுபத்தாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கும், சிறுகைத்தொழில் நிறுவனத்தில் தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும் ஆறிகாமம், தும்மலசூரிய யகம்வெல முஸ்லிம் மாகாவித்தியாலயத்தில்  நேற்று (21) இடம்பெற்றது.   முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான என்.எம் நஸீரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம…

Read More

பிரித்தானிய முன்னாள் பிரதமரை சந்தித்தார் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமருனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடினார். லண்டனில் இடம்பெற்ற (18)இந்தச் சந்திப்பில், நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார்.

Read More

உலகாளவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய பொதுச்செயலாளர், அமைச்சர் ரிஷாத்தை சந்திப்பு

-ஊடகப்பிரிவு- உலகளாவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய பொதுச் செயலாளர் ரொபின் மார்ஷ் மற்றும் உலகாளவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய  சமாதானத்துக்கான தூதுவரும், ஐக்கிய இராச்சியக் கிளையின் ஆலோசகருமான அப்துல் பாசித் சையத் இப்ராஹிம் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனைச் சந்தித்துக் கலந்துரையாடினர். பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான இந்த சந்திப்பு, நேற்று (21) லண்டன் நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

“யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் வேண்டும்” பிரதேச சபை உறுப்பினர் நிலாம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்தார். எமது யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட அநேகமான பகுதிகளில் போதைப்பொருட்களின் விநியோகம் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்த விடயத்தை எனது சபையின் கன்னி உரையில் கூட தெரிவித்திருந்தேன். குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் வெளியிடங்களிலிருந்து வருபவர்களுடன் இணைந்து இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில்…

Read More

“அப்பொழுதே அவர் இப்படித்தான்”

ஓர் உண்மைச் சம்பவம்!!! -எஸ். ஹமீத்- இற்றைக்குச் சரியாக இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னம் நடந்த சம்பவம் இது. விளையும் பயிரொன்றின் இளமைக் காலத்து இயங்குதல் பற்றிய சத்தியம் இது. தனது சமூகத்தின் பசி போக்கும் எத்தனத்தில் அந்தச் சிறிய சிட்டுக் குருவி ஆழிக் கடலின் அலைகளை எதிர்த்துப் போராடிக் கரை மீண்ட நிகழ்வின் சாட்சியம் இது. அது 1990ம் ஆண்டின் இதே கால கட்டம். பாசிஸப் புலிகளின் வெறித்தனமான அடக்குமுறைக்குள் வட, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் சமூகம்…

Read More

பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் ஐய்யூப் அஸ்மின்

மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சீற்றம். வன்னி மாவட்ட தமிழ் மக்களினது அபிலாஷைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கருத்துக்களைக் கூற மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் பழகிக்கொள்ள வேண்டுமென்று முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு பிரதேச சபைகளை  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமை தொடர்பிலும், அந்த பிரதேச மக்கள் வழங்கிய ஆணைகளை கொச்சைப்படுத்தியும்…

Read More

‘மாகாணசபை உறுப்பினர் பதவியை தக்க வைப்பதற்காகவே ஐயூப் அஸ்மின் கூட்டமைப்புக்கு “ஜால்ரா” போடுகின்றார்’ முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் குற்றச்சாட்டு!

-ஊடகப்பிரிவு- தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பதவியை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காகவும் தனது அந்த விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவும் கூட்டமைப்பினருக்கு தொடர்ந்தும் வக்காலத்து வாங்கும் ஐயூப் அஸ்மின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்பிலும் கட்சி நடவடிக்கைகள் தொடர்பிலும் வெளியிட்டுவரும் தேவையற்ற, மலினமான கருத்துக்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும்  முன்னால் மாகாண சபை உறுப்பினரும் வன்னி மாவட்ட ஐ.தே.க முன்னணி அமைப்பாளருமான…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் எம். ஜலீலின்  கன்னி உரை!

-ஊடகப்பிரிவு- இன்று 20.04.2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இடம்பெற்றது. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி வட்டார உறுப்பினர் எம் ஜலீல் கன்னியுரை நிகழ்தினார். இங்கு உரையாற்றிய ஜலீல் ” 1994 ஆம் ஆண்டிற்குப் பிறகு எமதூருக்கு இம் முறையே பிரதேச சபை உறுப்பினர் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக இரண்டு உறுப்பினர்கள் எம் ஊருக்குக் கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். எங்களுடைய ஊரின் தேவைகளையும், குறைபாடுகளையும் இச் சபையில் மொழிவதற்கு…

Read More

தர்காநகர் வரியிறுப்பாளர் சங்கத்தினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- தர்கா நகர் -வரியிறுப்பாளர் சங்கத்தினர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்க்கிடையிலான சந்திப்பு பேருவளை நாதா கார்டனில் (17) நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்கார் உட்பட சக உறுப்பினர்கள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பில் தர்கா நகர் பிரதேசத்தில் நிலவும் வரி அறவிடுதலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், குப்பை கூழங்களை அகற்றுவதில் உள்ள குறைபாடுகள், வாசிகசாலை குறைபாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள்…

Read More

தலைமன்னார் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்த தவிசாளர் முஜாஹிர்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தன்னுடன் சேர்ந்து போட்டியிட்ட அய்மன் குரூஸை,  தலைமன்னாரிலுள்ள அவரது இல்லத்துக்கு விஜயம் செய்து, தனது வெற்றிக்கு பாடுபட்ட வேட்பாளாராகிய அய்மன் குரூஸுக்கும் அப்பிரதேச மக்களுக்கும் தனது மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இவ்விஜயத்தின் போது, பொதுமக்களை சந்தித்த தவிசாளர் முஜாஹிர், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளையும், அபிவிருத்தி சம்பந்தமான தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார், அம்மக்கள் மத்தியில் பேசிய தவிசாளர்,…

Read More

‘அமெரிக்க ஜி.எஸ்.பி (GSP) வசதியால் இலங்கைக்கு நன்மை’ அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

-ஊடகப்பிரிவு- புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி புதுப்பிக்கப்பட்ட திகதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி ஆகையினால், அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2018 ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின்னரே, இந்த வரி வசதிக்கு உரித்துடையவராகின்றனர் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கைக்கான மீள் அதிகாரம் அளிக்கப்பட்ட அமெரிக்காவின் ஜி.எஸ்.பி ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்து, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு…

Read More

குறிஞ்சிப்பிட்டிய – நூர் பாலர் பாடசாலை அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் நிதியொதுக்கீடு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின்  வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் கல்பிட்டி, குறுஞ்சிப்பிட்டி நூர் பாலர் பாடசாலைக்கு 02 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (18) நூர் பாலர் பாடசாலைக்கு சமூகமளித்த அமைப்பாளர் முஸம்மில், பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டதுடன், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார்.  

Read More