Headlines

உடுநுவர பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!




-ஊடகப்பிரிவு-

கண்டி, உடுநுவர பிரதேச சபையின் தவிசாளருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட உயர்பீட உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை (04) இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும்  மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட  பிரதேச சபை உறுப்ப்பினர்கள்,  முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாகவும், அத்தியாவசியத் தேவைகள் மற்றும் ரமாழானை முன்னிட்டு தெருக்களுக்கான வீதி விளக்குகள் பொருத்துவது உட்பட பல்வேறு விடையங்கள் குறித்தும்   கலந்துரையாடப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *