Headlines

கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட திட்டம்




கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக முன்வரும் பாடசாலைகளுக்கு நிதி உதவி
வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் கூறினார்.
இங்கிலாந்து சுற்று பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணியினருக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வில் அமைச்சர்; இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இதுதொடர்பான நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *