Headlines

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்ந்துங்கள் – கல்வி அமைச்சர்

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஆசிரியர் தினத்தில் வாழ்த்துரைப்பது மிகவும் அவசியமானது என அவர் கோரியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊடகங்களின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கல்விக் கண்ணை திறந்த ஆசிரிய தாய் தந்தையருக்கு பரிசுப் பொருட்கள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை தொலைபேசி அழைப்பின் ஊடாகவேனும் அனைத்து மக்களும் ஆசிரிய பெருந்தகைகளை வாழ்த்த வேண்டும். தற்பொழுது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்…

Read More

சேலை அணியத் தேவையில்லை

தங்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் தாய்மார்கள், கட்டாயமாக சேலை அணிந்திருக்க வேண்டுமென்று, அப்பாடசாலைகளின் அதிபர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, உடனடியாக நீக்கிக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால், அதிபர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

அரச வைத்திய அதிகாரிகளுக்கு சூரியன் சந்திரனை எம்மால் வழங்க முடியாது!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சாதாரண மாணவர்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்படுகின்றது. பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. சுயலாபத்துக்காக அவர்கள் கோரும் சூரியனையும்  சந்திரனையும்  எம்மால் வழங்கமுடியாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சுக்கள் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிடும் நேரத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அகிலவிராஜ் மேற்கண்டவாறு  தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த வாரம் கல்வி அமைச்சுக் கட்டடத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இரவு முழுவதும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…

Read More

பாடசாலை சீருடைகளுக்காக காசோலை வழங்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை வழங்குவதற்காக காசோலை முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு பாடசாலை சீருடைகளை வழங்குவதற்காக வவுச்சர் முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதுவரை காலமும் இலவசமாக பாடசாலை சீருடைகளை நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. எனினும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தரமான சீருடைகளை வழங்குவதற்காக வவுச்சர்களை அறிமுகம் செய்திருந்தது. எனினும் வவுச்சர் முறையிலும் சில குளறுபடிகள் காணப்பட்டதாக பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வவுச்சர் முறைமைக்கு பதிலீடாக…

Read More

கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட திட்டம்

கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்வரும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் கூறினார். இங்கிலாந்து சுற்று பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணியினருக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வில் அமைச்சர்; இந்த விடயங்களை குறிப்பிட்டார். இதுதொடர்பான நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read More

பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களாக அதிபர்கள்

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் போது, மாணவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும் கடந்த காலங்களை விட இம்முறை அதிகாரிகள் தொடர்பில் குறைந்தளவு முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் மேற்பார்வையாளர்களாக புதிதாக இணைக்கப்பட்டுள்ள அதிபர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும், அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை…

Read More

பொத்துவில்லுக்கு தனியான கல்வி வலயம்; றிஷாத்தின் கோரிக்கையை ஏற்பு!

சுஐப் எம்.காசிம் பொத்துவில்லுக்கு என தனியான கல்விவலயத்தை அமைத்துத் தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம், அமைச்சர் றிசாத் விடுத்த வேண்டுகோளை ஏற்றுகொண்ட அமைச்சர், அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கொழும்பு, பத்தரமுல்லையில் இன்று மாலை (18/08/2016) இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. கல்வி அமைச்சருடனான இந்தச் சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், கஹடகஹ கிரபைட் நிறுவனத்தின் தலைவருமான முன்னாள் எம்.பி. மஜீத் (எஸ்.எஸ்.பி), சட்டத்தரணி முனாஸ்தீன், உதவிக்கல்விப் பணிப்பாளர்…

Read More

தேசிய கனிஷ்ட கைப்பணிப் போட்டி மற்றும் கண்காட்சி

பாடசாலைகளில் அருங்கலைகளைக் கற்பிக்கும் நோக்கில், எனது அமைச்சின் கீழான அருங்கலைகள் பேரவை தயாரித்துள்ள பாடவிதானங்களை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தி வருவதாக  கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். தேசிய அருங்கலைகள் பேரவையும், கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய கனிஷ்ட கைப்பணிப் போட்டி மற்றும் கண்காட்சியின்  அங்குரார்ப்பண நிகழ்வு கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் சம்பிக்க…

Read More

நாளை முதல் ­வவுச்­சர்கள் வழங்கப்படும்

தேசிய அர­சாங்­கத்­தின்­ சீ­ருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை முதல் ­நா­ட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளிலும் வி­நி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா கல்வி அமைச்­சர்­ அ­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரிவித்தார். கல்வி அமைச்­சி­னால் ­வெளியி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்கை ஒன்­றி­லேயே கல்வி அமைச்­சர்­ மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார். அவ்­வ­றிக்­கை­யில் ­மே­லும் ­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, தேசிய அர­சாங்­கத்­தி­னால்­ அ­றி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள நாட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அர­சாங்­கப் ­பா­ட­சா­லை­க­ளில் ­கல்வி பயிலும் அனைத்து மாண­வர்­க­ளுக்கு சீருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை…

Read More