Headlines

மஸ்கெலியாவில் பிரதமர் ரணில்




மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள்ளும் நிகழ்வு 28.08.2016 அன்று அட்டன் நகரில் இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க இதில் கலந்துகொண்டார். இந்த வைபவத்தை அம்பகமுவ பிரதேச சபை ஐ.தே.கவின் பிரதம அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே பியதாஸ ஏற்பாடு செய்திருந்தார்.  அட்டன் விஜிதா திரையரங்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், இராஐhங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், எம்.திலகராஜ் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அட்டன் நகரில் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளுவதற்கான அங்கத்துவ சீட்டை வழங்கும் பேரணி ஒன்றும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *