Headlines

பந்துலவின் இடத்திற்கு காமினி நியமனம்




ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் ஹோமாகம தொகுதிக்கான புதிய தொகுதி அமைப்பாளராக மேல் மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதத்தை அமைச்சர் காமினி திலக்கசிறி இன்று (22) பெற்றுகொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்த்தன நேற்றையதினம் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *