Headlines

அமைச்சர் றிஷாத்தை வீழ்த்த சதி!

முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகள் தொடர்ந்தேர்ச்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றி இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளையும் பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடுவது அவர்களது அரசியல் இருப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயாகுமென்று மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார். அம்பாறையில் மக்கள் காங்கிரஸின் எழுச்சியினால் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்டம் கண்டு வருவதை உணர்ந்துள்ள மு கா தலைவர் ஹக்கீம் அம்பாறை அரசியல்வாதிகளை பகடைக்காயாக பயன்படுத்தி அமைச்சர் ரிஷாட்டுக்கெதிரான ஊடகவியலாளர் மாநாடுகளை…

Read More

புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் : ஜனாதிபதி

எதிர்காலத்தில்இடம்பெறவுள்ள தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார். அவ்வாறே மக்களுக்கு விசுவாசமானதும் பொதுமக்களின் இதயத் துடிப்பினைப் புரிந்துகொள்ளக்கூடியதுமான மக்கள்நேயக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பி இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றிபெறச் செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை நேற்று பிற்பகல் திறந்துவைத்த போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டு…

Read More

சு.க மத்தியகுழு வியாழன் கூடும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு, எதிர்வரும் வியாழக்கிழமை கூடவிருப்பதாக, அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. கட்சியை மறுசீரமைத்தல், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள புதியவர்களுக்கான பொறுப்புகள், கடமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும், ஏனைய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்காகவே, மத்தியக் குழு அவரசமாக கூடவிருப்பதாக அறியமுடிகின்றது. இதேவேளை, குருநாகலில் ஞாயிற்றுக்கிழமையன்று கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, தலைமையில் நடைபெற்ற  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டுக்கு சமூகமளிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக…

Read More

ஒற்றையாட்சி முறைமைக்குள் புதிய அரசியலமைப்பு

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒற்றையாட்சி முறைமைக்குள்  புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற விசேட பிரேரணை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணையை தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிந்தார். இதன்போது ஏழு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பாதுகாக்கும் செயற்திட்டத்தை பாராட்டியும், இடதுசாரி கட்சிகளை ஒன்றிணைத்தல், இன நல்லிணக்கம் ஏற்படுத்தல் உள்ளிட்ட ஏழு பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இதன்போது அமைச்சர்  பிரேம்ஜயந்த மேலும்  உரையாற்றுகையில், ஒற்றையாட்சிக்குள்…

Read More

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தற்போதுதான் உரியவர் தலைமைத்துவத்தின் கீழ் வந்துள்ளது. இனிவரும் எந்தவொரு சவாலையும் துணிந்து எதிர்க்க தயாராவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65 சம்மேளனம்   நேற்று குருணாகலில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு வரவேற்புரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இன,மத அடிப்படையிலான வேறுபாடுகள் எவையும் இருக்கவில்லை. அதுவே கட்சியின் உருவாக்க தந்தையான…

Read More

சு.கட்சிற்கு இன்றுடன் 65 வருடங்கள் பூர்த்தி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(02) 65 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவினால், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, புதிய அரசியல் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. உலகில் முதல் பெண் பிரதமரும், உலகில் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் இக்கட்சியிலிருந்து உருவாகினர். இன்றைய நிறைவு தினத்தை கொண்டாடும் வகையில், ஸ்ரீ ல.சு.கட்சியினால் நாளை(04) குருணாகலையில் பெரும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….

Read More

இருவருக்கு அமைப்பாளர் பதவி!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதியமைச்சர் அநுராத ஜயரத்ன, கண்டி-உடுதும்புரவுக்கான அமைப்பாளராகவும், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கண்டி- யட்டிநுவரவுக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Read More

மஹிந்தவின் பின்னால் சென்று பயனில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம்காணப்படும் போது மஹிந்தவின் பின்னால் செல்வதில் பயன் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைக்கு அமைய மஹிந்த கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைத்துள்ளார். எனவே நாம் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபாலவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட்ட பின்னரும் அவருக்குஎதிராக சூழ்ச்சிகளை செய்வது, அவரது கால்களைப் பற்றி இழுப்பது என்பவற்றை செய்ய கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்….

Read More

தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் மஹிந்தாநந்த அளுத்கம

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கம தீர்மானித்துள்ளார். குறித்த பதவி விலகல் கடிதத்தை மிக விரைவில் கையளிக்கவுள்ளதாகவும், இதுவரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகாத 12 உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கம தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

சு.கவின் கலவான தொகுதி அமைப்பாளர் இராஜினாமா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவானத் தொகுதி அமைப்பாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர இராஜினாமா செய்துள்ளார்.

Read More

மஹிந்த வர வாய்ப்பில்லை!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வது தொடர்பிலான இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இரவு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட முன்னாள் ஜனாதிபதி, அன்றையதினம் (ஆண்டுவிழா நாளில்) தனக்கு சர்வதே…

Read More

2020 இல் புதிய அரசாங்கம் அமைக்க திட்டம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியில் சவால்கள் பல உள்ளன. எனவே  2020 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். மேல்மாகாண சபை முதலமைச்சரின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளும் உரையும் இன்று பல விமர்சனங்களுக்கு உள்ளானவண்ணமுள்ளன. தற்போது…

Read More