Headlines

முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் இணைந்து, புத்தளத்தில் பொதுச்சின்னத்தில் களமிறங்க முடிவு!

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இரவு (11) மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டது. புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத குறை தொடர்பில், அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த…

Read More

‘மாவட்டப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக, இணைந்து பயணிக்குமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்’ – ஆப்தீன் எஹியா!

புத்தளம் தொகுதியில் நாம் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய எண்ணத்திலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய, நாம் புத்தளம் மாவட்டத்தின் அனைத்து கட்சிகளினதும் உயர்பீட உறுப்பினர்களை, அவர்களின் இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம் எனவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக களமிறங்குவதையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார். நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற, கரம்பை வட்டார இளைஞர் அமைப்பினருடனான…

Read More

‘மட்டக்களப்பு கெம்பஸ் விவகாரம்; சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம்’ – தவிசாளர் அமீர் அலி!

மட்டக்களப்பு கெம்பசை “கொரோனா வைரஸ்” தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது, சிறுபான்மைச் சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கெம்பசை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பது குறித்து , ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “மட்டக்களப்பு கெம்பசை, கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது…

Read More

ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற சரண்யாவிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் வாழ்த்து!

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சசிகுமார் சரண்யாவிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (08) தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசிய இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 31வது தேசிய விளையாட்டு நிகழ்வில், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்ற முல்லைத்தீவு, துணுக்காயைச் சேர்ந்த சசிகுமார் சரண்யாவுக்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

Read More

அபிவிருத்தி செய்யப்பட்ட கதிரானவத்தை பிரதேச வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

கொழும்பு – 15, மட்டக்குளி, கதிரானவத்தை பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்  ரபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க, புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட கதிரானவத்தை பிரதேச வீதியை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வு, முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மானின் பங்கேற்பில் இடம்பெற்றது. இன்று காலை (08) இடம்பெற்ற இந்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.  

Read More

நாகவில்லு பிரதேச முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

புத்தளம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ரிஜாஜின் ஏற்பாட்டில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில், நாகவில்லு பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று (07) இடம்பெற்றது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஆஷிக், பைசர் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More

கிண்ணியா, மூதூர் மு.கா உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐ.சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தானீஸ் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், இன்று (08) கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர். கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரசபை, பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

‘சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய தலைமைகளை நாடாளுமன்றம் அனுப்புங்கள்’ – முன்னாள் எம்.பி அப்துல்லா மஃறூப்!

சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடியவர்களை இம்முறை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமப் பகுதியில், இன்று (06) இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில், “ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை ஜனாதிபதி சொல்வதைப் போன்று 150 ஆசனங்களையோ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொல்வதைப் போன்று 113 ஆசனங்களையோ எந்தப் பெரும்பான்மை…

Read More

பலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் – பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.சுபைரின் (ரம்சி ஹாஜியார்) முயற்சியினால், கொழும்பு, பீர்சாஹிபு வீதியில் அமைக்கப்படவுள்ள, மூன்று மாடிகளைக் கொண்ட பலநோக்குக் கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில், பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். இன்று முற்பகல் (06) இடம்பெற்ற இந்த நிகழ்வில், கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க, முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர பிரதி மேயர் எம்.டி.என்.இக்பால்…

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம், மதவாக்குளம் பிரதேசத்தில் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமின் முயற்சியினால், மக்கள் காங்கிரஸின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க,  சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட இந்தக் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம், நேற்று (04) அலி சப்ரி ரஹீமினால் திறந்து வைக்கப்பட்டது. மதவாக்குள பிரதேசத்தின் மிக நீண்டகால தேவைப்பாடாக…

Read More

தர்கா நகர் பெண்கள் தேசிய பாடசாலைக்கு மின்குமிழ்கள் கையளிக்கும் நிகழ்வு

தர்கா நகர் பெண்கள் தேசிய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரது வெண்டுகோளிற்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை பிரதேச சபை உறுப்பினர்   ஹஸீப் மரிக்காரினால் பாடசாலைக்கு தேவையான LED மின்குமிழ்கள் பாடசாலை அதிபர் ஜனாப் ஏ.ஏ.எம். பாய்ஸ் இடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை உதவி, பிரதி அதிபர்கள், முன்னால் அதிபர், ஆசிரியர்கள், மற்றும் தர்கா நகர் அல்ஹம்ரா மஹா வித்தியாலய முன்னால் அதிபர் ஜனாப் நயீம் மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Read More

“கொள்கைப் பிடிப்பிலேயே மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டேன்” – மு.காவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெரிவிப்பு!

கொள்கை ரீதியாக அரசியலை செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காகவும் தூயநோக்கிலுமே, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தான் இணைந்துகொண்டதாகவும் பதவியை சொகுசுசையும் விரும்பியிருந்தால், கட்சியின் தலைவர் அமைச்சராக இருந்தபோதே, இணைந்திருக்க முடியும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அக்கட்சியின், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மாஹிர் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட பின்னர், கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “நாங்கள் பல கட்சிகளில் ஒன்றாக அரசியலில்…

Read More