Headlines

“நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டும்” – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப்!

நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டுமென்றும்  சிறுபான்மை மக்கள் உரிமைகளோடும் நிம்மதியாகவும் வாழ, சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் முன்னாள் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா, பொது நூலக மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை (14) இடம்பெற்ற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்…

Read More

“இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் விரும்புவோர் நிதானமாக சிந்தித்து வாக்களிக்கும் தேர்தல் இது” – கிண்ணியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

“இனங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் சிந்திக்கும் ஒவ்வொரு பிரஜையும், மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.” சிறுபான்மைச் சமூகம் மாத்திரமின்றி, பெரும்பான்மை மொழி பேசும் பௌத்த, கத்தோலிக்க மக்களுக்கும் இந்த கடப்பாடு பெரிதும் உண்டென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், கிண்ணியா, பொது நூலக மண்டபத்தில், இன்று மாலை (14) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில்…

Read More

மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தலைமையில், புத்தளம், ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று நேற்று (12) இடம்பெற்றது. இச் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் அக்மல் மற்றும் மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச முக்கியஸ்தர் தௌபீக் உட்பட ஊர் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதேவேளை, ஆண்டான்கனி பகுதிக்கும் நேற்று விஜயம் செய்த  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா, அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்து, பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினார்.

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சவரான பாடசாலை அபிவிருத்திப் பணிகள் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சிலாபம், சவரான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம், பெவிலியன் மற்றும் நுழைவாயில் ஆகியவற்றை, மாணவர்களின் பாவனைக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது. புத்தளம் நகரசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமின் முயற்சியில், சவரான கட்சிக் கிளையின் வேண்டுகோளின் பேரில், சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த  அபிவிருத்திப் பணிகளை திறந்துவைக்கும்  நிகழ்வில்,…

Read More

அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் – மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் ஜொன்னா (Joanna H Pritchett) மற்றும் நஸ்ரின் மரைக்கார் (Nazreen Maraikkar) தலைமையிலான குழுவினர், அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தின் இல்லத்தில் நேற்று (12) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷாரப்பும் பங்கேற்றிருந்தார். இதன்போது, அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய அரசியல் களநிலவரங்கள் தொடர்பில், விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியைடந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

“அமீர் அலி பவுண்டேஷனின்” ஏற்பாட்டில் 2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியைடந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கெளரவிக்கும் நிகழ்வும், பொது தொடர்பாடல் சேவையில் சேவையாற்றிய கலீல் அவர்களுக்கு சிஹாப்தீன் மெளலவி விருது வழங்கும் நிகழ்வும் மீராவோடை, அல் ஹிதாயா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. பிரதித் தலைவர் வைத்தியர் அப்தாப் அலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பிரதேச சபை…

Read More

மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்பட்டுள்ள கொரோணா வைரஸ் தடுப்பு முகாமுக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபை கண்டனத் தீர்மானம்!

COVID-19 (கொரோணா) வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்கும் நிலையமாக கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்ட, புணானை, மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தையும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கு, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும், 2020 / பிரதேச சபையின் 24 வது சபை அமர்வும்  இன்று காலை  (12) 10.20 மணியளவில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்…

Read More

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

புத்தளம் நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமினால், பாடசாலை மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக தேவை உடையோர் 3000 பேரை இனங்கண்டு, புத்தளம் மாவட்டத்தின் புளிச்சாக்குளம் மற்றும் கனமூலை பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.  புளிச்சாக்குளம், உமர் பாரூக் பாடசாலை அதிபரின் வேண்டுகோளின் பெயரில், பிரதேச சபை உறுப்பினர் நிஜாமுதீனின் சிபாரிசில் 200 மாணவர்களுக்கும், கனமுலை பிரதேசத்தைச் சேர்ந்த…

Read More

பொத்துவில் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

பொத்துவில் பிரதேச ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டனர். பொத்துவில் ஐ.தே.க அமைப்பாளர் யு.எல்.எம். நியாஸ் தலைமையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2018 இல் போட்டியிட்ட ராபி, முகைதீன் பாவா, தாஜூதீன், கோமாரி ஐ.தே.க அமைப்பாளரும், வேட்பாளருமான ராஜீ, அரபா சமூக சேவை அமைப்பின் தலைவர் தஸ்லீம் மற்றும் அஸ்மி, தொர ஆகியோர், கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில்…

Read More

தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலைய ஒழுங்கமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!

நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலையங்களை ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவரும் நோக்குடனான சந்திப்பொன்று அண்மையில், நிந்தவூர் பிரதேச சபையில், தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, தனியார் மற்றும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களில் காணப்பட வேண்டிய சுற்றுச்சூழல், பெளதீக கட்டமைப்பு, நேர அட்டவணை மற்றும் மாணவ மாணவிகளின் ஒழுக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டன. இதன்போது, ஏற்கனவே பிரதேச சபையால் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு…

Read More

பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2020 – வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…!

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் – 2020 வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) எதிர்வரும் 2020 – ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, “ஐக்கிய மக்கள் சக்தி” கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்ந்து, நாடுதழுவிய ரீதியில் வேட்பாளர்களை நியமிக்கவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட எதிர்பார்க்கும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் மாவட்டத்தைக் குறிப்பிட்டு, தங்களது பூரண…

Read More