மாகாண சபை தேர்தலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும்! “தாமதிக்கப்படும் தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதாகும்”
எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தல், எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் கூட நடைபெறுமா? என்ற சந்தேக சாத்தியங்கள் தென்படுவதாக கடந்த 11.10.2018 தேர்தல்கள் கமிஷன் தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்ட கருத்துக்கள், மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை மீறும் செயலாக கணிக்கப்படுகின்றது. அங்கு வெளியிடப்பட்ட கருத்தின்படி மாகாண சபைத் தேர்தல் புதிய தொகுதி வாரி தேர்தல் முறையிலா (50:50) அல்லது பழைய விகிதாசார முறையிலா என்பது பற்றி…
