“கல்விக்கு உதவி செய்தோரை சமூகம் ஒரு நாளும் மறப்பதில்லை” – மாவனல்லை ஹெம்மாதகமயில் அமைச்சர் ரிஷாட்!
கல்விச் சமூகத்தினதும் நலன் விரும்பிகளினதும் பூரண ஒத்துழைப்பு இருந்தால் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியை மேலும் உயர்த்த முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாவனல்லை, ஹெம்மாதகம அல்/அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவும், அதனையொட்டி நடைபெறும் கல்விக் கண்காட்சி மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். அமைச்சர் மேலும் கூறியதாவது, பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் நமது…
