முசலி கோட்ட மட்ட பாடசாலைகளில் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீபின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, முசலி கோட்ட மட்ட பாடசாலைகளில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 25 பாடசாலைகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் அன்பளிப்புக்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வியில் ஒரு போட்டியை உண்டாக்கும் திட்டமாகவும் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு, முன்னாள் வடமாகாண சபை…
