Headlines

முசலி கோட்ட மட்ட பாடசாலைகளில் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு! 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீபின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, முசலி கோட்ட மட்ட பாடசாலைகளில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 25 பாடசாலைகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் அன்பளிப்புக்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வியில் ஒரு போட்டியை உண்டாக்கும் திட்டமாகவும் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு, முன்னாள் வடமாகாண சபை…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – மூதூர், கிண்ணியா பிரதேசத்தில் ஆரம்பம்!

59 வது, 60 வது, 61 வது  வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா நசார், வட்டார அமைப்பாளர்கள் சியான் PHI, சபீக் ஆசிரியர்,  கிண்ணியா நகர சபையின் மாஞ்சோலை வட்டார அமைப்பாளர் தாரிக் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்கள்,…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தலில் மாகாண சபையை தீர்மானிக்கும்! அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

எதிர்வரும் தேர்தலில் மாகாண சபையை தீர்மானிக்கின்றவர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃரூப் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை – கிண்ணியா, அஹமட் லேன் உள் ஒழுங்கையில் 45 இலட்சம் ரூபா செலவில் கொங்கீரிட் வீதி, வடிகான் அமைப்புக்கான வேலைத் திட்டத்துக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பிரதேசமான வெருகல் பிரதேசத்தில் இலங்கை துறை,…

Read More

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டு ஆய்வு” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று கையளிப்பு!  

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாடுகளை சீராக ஒழுங்குபடுத்தும் பல்வேறு திட்டங்களை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், குறித்த நிறுவனங்களுக்கான முறையான சட்டவரைபை உருவாக்கி, சூழலுக்கு ஏற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், அவற்றின் நிர்வாகங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு பிரதான நடவடிக்கையை எடுத்துள்ளது. நிறுவனங்களின் சட்டவரைபு  உட்பட ஏனைய செயற்பாடுகளை ஒருமிக்கச் செய்யும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, ஏர்னஸ்ட் அன்ட் யோங் நிறுவனம் (Earnest…

Read More

பதவிக்கு அப்பால் சேவை செய்யும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!!

முஸ்லிம்களின் பாரம்பரிய  தொழில் “வர்த்தகம்” என்பதால் அந்த மக்களின் தொழிலை முன்னேற்றம் செய்ய, வர்த்தக அமைச்சை எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளாத போது, இந்த நாட்டின் வர்த்தகர்கள் முன்னேற்றம் அடைய  வேண்டும், நாடு வர்த்தகம் மூலம் பொருளாதார அபிவிருத்தியடைய வேண்டும் என்ற கொள்கையுடன், பலரின் வேண்டுகோளுக்கிணங்க கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுப் பதவியை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்றுக்கொண்டார். அதனால், வர்த்தகர்கள் இன்று பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து வர்த்தக அமைச்சராக இருந்துகொண்டு,…

Read More

பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறை!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வு, நேற்று (21) துல்ஹிரிய, மாஸ் அதெனா நிலையத்தில் இடம்பெற்ற போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். நாடளாவிய ரீதியில் 300 இற்கும் அதிகமான விசாரணை அதிகாரிகள் இவ்வதிவிட பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி அனுர பண்டார மெத்தேகொட,…

Read More

அடம்பன் பள்ளிவாயல் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அடம்பன் பிரதேசத்தில் பள்ளிவாசல் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு இடம்பெற்றது. இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்ட அடிக்கல் நாட்டு விழா நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன்…

Read More

அல்/ஹிதாயா வித்தியாலயத்தில் நிறைவுற்ற அபிவிருத்திப் பணிகள் மாணவர்கள் பாவனைக்கு கையளிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, கொழும்பு, அல்/ஹிதாயா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் மற்றும் பெயர் பலகை ஆகியவற்றை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு வெள்ளிகிழமை (19) இடம்பெற்றது. இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். -ஊடகப்பிரிவு-    

Read More

பதினெட்டு வருடம் பட்டை தீட்டப்பட்ட கூரிய ஆயுதமே ரிஷாட் பதியுதீன்! — ஷிபான் BM

பெருந்தலைவர் அஷ்ரப் விட்டுச் சென்ற இடைவெளியை பூர்த்தி செய்ய ஒரு தலைவன் வருவானா? என ஏங்கிய முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சகல இன மக்களாலும் பட்டை தீட்டப்பட்டு கூராக்கப்பட்ட ஆயுதமே அமைச்சர் றிசாட் பதியுதீன்! இரண்டாயிரத்துக்குப் பின்னரான இந்த பதினெட்டு வருடகாலத்தில் கழுத்தறுப்புக்கள் , காய்வெட்டுக்கள் அத்தனையும் கடந்து இன்று இந்த சமூகத்தின் ஒட்டு மொத்த பாரத்தையும் சுமக்கத்தயாரான, சுமக்கின்ற நிலையில் உள்ள ஆலவிருட்சமே றிசாட் பதியுதீன்! வில்பத்து விவகாரம், பொது பலசேனா விவகாரம், நீதிமன்ற விவகாரம்,சக்தி…

Read More

செட்டிக்குளம் பிரதேச செயலகம் மற்றும் முதியோர் சங்கம் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு! 

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகம் மற்றும் முதியோர் சங்கம் இணைந்து நடாத்தும் சர்வதேச சிறுவர் மற்றும்  முதியோர் தின நிகழ்வு நேற்று (20) செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது, விஷேட அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய ரிப்கான் பதியுதீன் அவர்கள், கல்வி, கலை போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களையும், முதியோர்களை கௌரவித்து அன்பளிப்புக்களையும் வழங்கி வைத்தார். பிரதேச செயலாளர்…

Read More

முசலி வள நிலையம் நடாத்திய மரநடுகை நிகழ்வில் தவிசாளர் சுபியான் பங்கேற்பு!

முசலி பிரதேச சபையின் தவிசாளர் சுபியான் தலைமையில், முசலி வள நிலையத்தின் ஏற்பாட்டில் [MRC],  பொற்கேணி பிரதான வீதி அருகில், மர நடுகைத் திட்டம் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் மற்றும் சிலாவத்துறை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி, கடற்படை அதிகாரிகள் உட்பட  இளைஞர்களும் கலந்து சிறப்பித்தனர். இத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற ஒத்துழைப்பு செய்தவர்களுக்கும், உதவி நல்கியவர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். (ஐ)…

Read More

தவிசாளர் முஜாஹிர் தலைமையில் காற்றாலை மூலமான மின் உற்பத்தி தொடர்பான கலந்துரையாடல்!!! 

மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில், 39 காற்றாலை (மின்பவர்) மூலமான மின் உற்பத்தி  தொடர்பான கலந்துரையாடல் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மன்னார் பிரதேசபை உறுப்பினர்கள் 21 பேர் கலந்துகொண்டதுடன், வடமாகாண நகர அபிவிருத்திக்கு பொறுப்பனான அதிகாரி மைக்கல் மற்றும் மன்னார் பிரதேசபையின் தொழில்நுட்ப அதிகாரியும் இந்த சந்திப்பில் பிரசன்னமாகியிருந்தனர். இந்தக் கலந்துரையாடலில் அமைக்கப்பட இருக்கும் மின்பவர் (காற்றாலை மூலமான மின் உற்பத்தி தொடர்பாக) RDS, WRDS மற்றும் பள்ளிவாசல்கள், கேவில்கள் ஆகியவற்றின் தலைவர்,…

Read More