Headlines

“மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டலில் 25 ஏக்கரில் கைத்தொழில்பேட்டை” முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நட்டாங்கண்டலில், 25 ஏக்கர் பரப்பளவில் கைத்தொழில்பேட்டை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை கிழக்கு – பாண்டியன்குளம் பிரதேச எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.   கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன் இந்த வாழ்வாதாரம்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் நேகம பாடசாலை மைதானத்தில் பார்வையாளர் அரங்கம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், அனுராதபுரம், நேகம முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை (11) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ராஜ் ஐனுல் ஹக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளர் தாரிக், கல்னேவ பிரதேச…

Read More

“அனுராதபுர வாழ் சிறுபான்மையினருக்கு அரசியல் முகவரியை பெற்றுத் தந்தவர் அமைச்சர் ரிஷாட்” இஷாக் ரஹ்மான் எம்.பி!

அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றி, அந்த மாவட்டத்துக்கு அரசியல் முகவரியை பெற்றுத்தந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். அனுராதாபுர மாவட்டத்தில் நாச்சியாதீவு, கலாவெவ மற்றும் நேகம ஆகிய இடங்களில், இஷாக் ரஹ்மான் எம்.பியின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (11) பல்வேறு அபிவிருத்தித்…

Read More

கலாவெவ பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு, அனுராதபுரம், கலாவெவ பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் இன்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பௌத்த மதகுருமார், இஷாக் ரஹுமான் எம்.பி, மக்கள் காங்கிரஸின் மாவட்ட இணைப்பாளர் தாரிக், இப்பலோகம பிரதேச சபையின் உறுப்பினர் நளீம் உட்பட அரசியல் பிரமுகர்கள பலரும் கலந்துகொண்டனர். (ன)

Read More

வவுனியா மாவட்ட யுவதிகளுக்கான கருத்தரங்கு!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த, வவுனியா மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி காணப்படும் யுவதிகளுக்கான கருத்தரங்கு வவுனியா, வெங்கடேஷ்வரா மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது. கூட்டுறவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நசீரின் வழிகாட்டலில், அமைச்சரின் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இணைப்பாளர் ஜிப்ரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், கூட்டுறவுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சரத் ஆனந்த, நகரசபை…

Read More

“சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க மக்கள் காங்கிரஸ் அக்கறை” நாச்சியாதீவில் அமைச்சர் ரிஷாட்!

பெரும்பான்மைச் சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களில் சிதறி வாழுகின்ற நமது சமூகத்தினர் கட்சி, நிறம் மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுவதன் மூலமே தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முடியுமெனவும், கடந்த பொதுத்தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் நமக்குக் கிடைத்த வெற்றி இதனை நன்கு உணர்த்தியது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அனுராதபுரம், நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம…

Read More

திருமலை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகர சபை வட்டார மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூபின் தலைமையில் மூதூர் சாரா மண்டபம் மற்றும் கிண்ணியா நூலக மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் சபை உறுப்பினர்கள், வட்டார இணைப்பாளர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் திருமலை…

Read More

சட்டவிரோத மணல் அகழ்வு விநியோகத்தை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர் செல்லத்தம்பு!

சட்டவிரோதமாக நடைபெறும் மணல் அகழ்வு மற்றும் விநியோகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு இன்று நேரில் சென்று பார்வையிட்டார். முறைகேடாகப் பயணம் செய்த மணல் டிப்பரை கைது செய்த தவிசாளர், சட்ட நடவடிக்கைக்காக இலுப்பைக்கடவை பொலிஸில் ஒப்படைத்தார். எமது பிரதேச வளங்களை எவரும் அழிக்க அனுமதிக்க முடியாது என தவிசாளர் மேலும் தெரிவித்தார். இந்நடவடிக்கையில் இலுப்பைக்கடவை வட்டார உறுப்பினர் மு.விஜயபாண்டி அவர்களும் இணைந்துகொண்டார். (ன)

Read More

இஷாக் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் கல்கிரியாகம பகுதியில் பாதை புனர் நிர்மாணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பலாகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்கிரியாகம கிராமத்தில் 875M நீளமான பாதை புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. புதிய கல்கிரியாகம சந்தியிலிருந்து மத்திய மகா வித்தியாலயம் வரையிலான இப்பாதை கொங்கிரீட் கல் பதித்து புனர் நிர்மாணம் செய்யப்பட்டு 2018.08.04 அன்று மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.   குறித்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு…

Read More

“இலங்கை முஸ்லிம்களின் ஆய்வு” நூலின் பிரதி, பிரதமரிடம் கையளிப்பு!

மறைந்த கல்விமான் எம்.எம்.எம். மஹ்ரூப் அவர்களினால் எழுதப்பட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர்,  பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களினால் தொகுக்கப்பட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட  “Exploring Srilankan Muslims ” இலங்கை முஸ்லிம்களின் ஆய்வு என்ற நூலின் பிரதி, நேற்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில், பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை அரச…

Read More

“100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

வடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு, தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (10) இடம்பெற்ற பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் பொருட்களுக்கான சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, இந்தியாவின் ஸ்மார்ட்…

Read More

உளுக்காப்பள்ளம் பாடசாலைக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் நிதியுதவியில் சிற்றூண்டிச்சாலை!

புத்தளம், உளுக்காப்பள்ளம் பாடசாலை நிர்வாகத்தினரினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கரம்பை வட்டார அமைப்பாளர் தன்வீரினதும் வேண்டுகோளுக்கிணங்க, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் உளுக்காப்பள்ளம் பாடசாலைக்கு அண்மையில் (07) விஜயம் செய்திருந்தார். இதன்போது, பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், பாடசாலை நிர்வாகத்தினர் உறுப்பினர் ஆஷிக்கிடம் முன்வைத்தனர். அந்தவகையில், விஷேடமாக பெண்களுக்கென்று ஓர் தனியான சிற்றுண்டிச்சாலையை அமைப்பதற்கான தேவைப்பாடு  காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். அவற்றைக் கேட்டறிந்துகொண்ட உறுப்பினர் ஆஷிக், தனது சொந்த நிதியிலிருந்து சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான வேலையை…

Read More