அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள் திறந்து வைப்பு!
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. குடும்பங்களின் வருமானங்களை உயர்த்தவும், தலைமைத்துவ பண்புடைய வருமானம் பெறக்கூடிய பெண் சமூகத்தை உருவாக்குவதாற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த தையல் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி, புதுக்குடியிருப்பு, கரிசல், காட்டாஸ்பத்திரி, பேசாலை, தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் இந்த தையல்…
