Headlines

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்துச் செய்தி!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாவணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெற்று, தத்தமது பிரதேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,  கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாளை திங்கள் கிழமை (06  ஆரம்பமாகும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்துள்ளார். அச் செய்தியில்…

Read More

“வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகளை வழங்குவதில் விஷேட கவனம் தேவை” மன்னாரில் அமைச்சர் சஜித்திடம்,  அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் “2017 கம் உதாவ செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார், நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள “லூர்து நகர்” வீடமைப்புத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று (05) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார். அமைச்சர் சஜித் பிரேமதாச…

Read More

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு பிரதியமைச்சரின் வாழ்த்துச் செய்தி!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாளை ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாளை நடைபெறும் தரம் ஐந்து புலமைப் பரிசில்…

Read More

“சிறுபான்மை சமூகத்தின் நம்பிக்கை வீணாகிவிடக் கூடாது” பொலன்னறுவையில் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு!

“புத்தெழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தியில் சிறுபான்மை சமூகங்களும் உள்வாங்கப்பட்டமையானது, ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன்றிக்கடன் மற்றும் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொலன்னறுவை, தம்பாளை, ஹிலால்புரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசலை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று மாலை (03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு, நினைவுக் கல்லுக்கான திரையையும் திரை நீக்கம் செய்து வைத்தார். பிரதியமைச்சர் காதர்…

Read More

அனுராதபுரம், நெலுபாவ பிரதேச மக்களுக்கு பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!

நீண்டகாலமாக சுத்தமான குடி நீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வரும் அனுராதபுரம்  நாச்சாதுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட நெலுபாவ பிரதேச மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், அனுராதபுர  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (02) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், தொழிலதிபருமான தாரிக் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.  

Read More

“தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வது சமூகத்தை நேரடியாகப் பாதிக்கின்றது” பொலன்னறுவை, கலெல்லயில் அமைச்சர் ரிஷாட்!

பாடசாலைகளின் வளங்களையும், கட்டிடங்களையும் பெருக்குவதில் நாம் அக்கறை காட்டும் அதேவேளை, மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தி உரிய அடைவு மட்டத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதே சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிளிநொச்சி மற்றும் வன்னி மாவாட்டங்களில் மாணவர்கள் ஓலைக் கொட்டில்களிலும், அகதி முகாம்களிலும் மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்த போதும், அவர்கள் கல்வியிலே முன்னேற்றமடைந்து வருவதற்கு கல்வி மீது கொண்ட ஆர்வமும், ஊக்கமுமே காரணமாகும் என்று அவர் மேலும்…

Read More

பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், குருநாகல் மாவட்டத்தின், தம்பதெனிய தேர்தல் தொகுதியில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி சம்பந்தமான கலந்துரையாடல், கிரி/பொல்கஹயாய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பாடசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்தார். அத்துடன், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதி தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேச சபை…

Read More

“கைத்தொழில் பேட்டைக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறியப்படுத்தவும்” அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இஸ்மாயில் எம்.பி!

சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் தலைமையில் நேற்று (02) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.  இந்தக் கூட்டத்தில் சம்மாந்துறை மண்ணின் தேவைகள் கருதி இஸ்மாயில் எம்.பி அவர்களினால் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கதிற்கு சொந்தமான அசையா சொத்துக்களின் விபரங்களையும், அதன் உரிமை தொடர்பான ஆவணங்களையும் கண்டறிதல். கைத்தொழில் பேட்டைக்கான இட ஒதுக்கீடு சம்மந்தமாக இதுவரைக்கும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறியப்படுத்தவும். பொதுமக்களுக்காக வாரத்தில் ஒரு நாளை மண் அகழ்வதற்கான…

Read More

“இனவாதத் தீயை அணைக்கும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்துவோம்” பொலன்னறுவை, திவுலான நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

நாட்டிலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனிபோடும் சமூகமாக நாங்கள் இருக்காது, அந்த நடவடிக்கைகளை எவ்வாறு அணைக்க முடியுமோ அவ்வாறான செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமன்கடுவ, திவுலான அல்/அக்ஸா மஹா வித்தியாலயத்தில், இன்று காலை (03) இடம்பெற்ற புதிய இரண்டுமாடி கட்டிடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார்.   பாடசாலை அதிபர் எம்.எச்.பாஹிர் தலைமையில்…

Read More

என்.எம் நசீர் தலைமையில் பொல்கஹவெல சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு இடம்பெற்றது..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் என்.எம்.நஸீர் (MA) அவர்களின் தலைமையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும் முன்னால் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன் ஏற்பாட்டில்  பொல்கஹவெல பிரதேச செயலகத்தில் மினி கவமன்ட் ஆரம்பிக்க சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு ஒரலியத்தையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொல்கஹவெல யுவதிகளுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர், சனச அபிவிருத்தி வங்கியின்…

Read More

திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரிக்கு அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் வரவேற்பு மண்டபம்!

திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரிக்கான வரவேற்பு மண்டப வேலைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நடைபெற்று வருகின்றது. கட்டிட வேலைகளை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித்தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம். நஸீர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது, பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளர் அப்துல்லாஹ், மனாருல் ஹூதா அரபுக்கல்லூரியின் அதிபர், குருநாகல் மாவட்ட கல்விப் பொறுப்பாளர் றியாஸ் (அzஸ்ஹரி) ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

Read More

தனித்துவங்களின் கோட்டைகளுக்குள் தடுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முஸ்லிம் தலைமை!

நல்லாட்சி அரசின் சுவாசம் நின்றுவிடுமளவுக்கு கொடிய நோய்கள் அரசாங்கத்தைப் பீடித்துள்ளன. ‘கூழ் குடிக்கவும் கூட்டாகாது’ என்ற பழமொழிக்கு இந்த நல்லாட்சி நல்லதொரு உதாரணம். பிரதமர் ஒன்றைச் சொல்ல, ஜனாதிபதி அதைப் பொருட்படுத்தாது செல்ல, அமைச்சர்கள் எதையும் கண்டுகொள்ளாது செயற்படவென்று பதக்கடைச் சாக்கு வண்டிபோல் அசைந்து சென்ற இந்த அரசின் பயணம் இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள் ஓய்வுக்கு வரும். ஆட்சி அமைத்துள்ள ஐ.தே.கவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எட்டாப்பொருத்தமேற்பட்டு, பங்காளிக் கட்சிகளுக்குள்ளும் அடிக்கடி குழப்பங்கள் எழுவதால் நாட்டு நிலவரங்களை…

Read More