Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுகீட்டில் மாவடிப்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிப்பு!

-ஊடகப் பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சொந்த நிதியில், மாவடிப்பள்ளி பொதுநூலகத்திற்கு வழங்கப்பட்ட தளபாடப் பொருட்களில் ஒரு பகுதி, மாவடிப்பள்ளி கமு/அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று முன்தினம் (14) ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில், காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலினால், அதிபரிடம்  கையளிக்கப்பட்டது. கடந்தவாரம் பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்ட உறுப்பினர் ஜலீல், பாடசாலையின் தேவைப்பாடுகள், குறைகளைப் பற்றி…

Read More

தமிழ்மொழிச் சமூகங்களின் ஐயங்கள் யதார்த்தத்தின் இருப்புகளுக்கு ஆபத்து!!!

-சுஐப் எம் காசிம்- சிறுபான்மை மக்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டப் புறப்பட்ட எந்தக்கட்சிகளும் வடக்கு, கிழக்கு அரசியல் தளத்தை பரந்தளவில் பலப்படுத்தவில்லை. முப்பது வருடப் போரின் வடுக்கள் இந்த ஒற்றுமைக்கும், இணக்கத்துக்கும் பங்கமாக அல்லது சந்தேகமாக இருந்திருக்கும். ஆனால் இனியும் இவ்விரு சமூகங்களையும் சந்தேகம், பகைமை, வேற்றுமைகள் தொற்றிக்கொள்ள இடமளிக்கக்கூடாது. பெரும்பான்மை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைகள் சிறுபான்மை சமூகங்களின் ஒன்றித்தலை அவசரமாக உணர்த்தியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இரண்டு கட்சிகளாகக் கூறுபட்ட சிங்களப் பெரும்பான்மை வாக்குகள் இம்முறை…

Read More

வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு!

மன்னார், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு இன்று (15) வவுனியா ஓவியா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முசலி, மன்னார், மாந்தை, மற்றும் நானாட்டான் உட்பட வவுனியா நகரசபை மற்றும் செட்டிகுளம் பிரதேசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (ஐ)  

Read More

மன்னார் நகரசபை தலைவருக்கு எதிராக முசலிப்பிரதேசபையில் கண்டனத்தீர்மானம்…

முசலிப்பிரதேசபை தவிசாளர் சுபியான் தலைமையில் ஆரம்பமான 3வது சபை கூட்டத்தில் சிலாபத்துறை வீட்டுத்திட்டம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது . அதன் பின்பு மன்னார் நகரசபை தலைவார்  ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) செயற்பாடுகளை கண்டித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது….. முசலிப்பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும் பிரதேசத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்ட மன்னார் நகரசபை தலைவரின் செயற்பாடு பிரதேச மக்களின் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள்மத்தியில் பிரதேசபை…

Read More

குருநாகல் மாவட்டத்தின் பல கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். குருநாகல் மாநகர சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அஸார்தீன் மொய்னுதீனின் தலைமையில், பரகஹதெனிய, அரபா பாடசாலையில் நேற்று முன்தினம் மாலை(13) இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவத்தகம பிரதேச சபை வேட்பாளர் முஆத் பாரூக் தலைமையிலான சுமார் 400 பேரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல்…

Read More

காத்தான்குடி மீனவர்களைச் சந்தித்த மீன்பிடி பிரதியமைச்சர்!

காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவிக்கரையோரத்தில் நேற்று  (13) இடம்பெற்றது. காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மீனவர்களின் கேட்டறிந்து கொண்டார். இதன்போது ஷாதுலியா மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.அப்துல் றஸ்ஸாக், செயலாளர் முஹம்மது பாறூக், ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் உட்பட மீனவர் சங்க பிரதிநிதிகள்…

Read More

முள்ளிப்பொத்தானை பிரதேச வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணிகள்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும்,  கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூபின் முயற்சியில், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள வீதிகளுக்கான மின் விளக்குகளைப் பொருத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், புனித ரமழானை முன்னிட்டு, நேற்று (13) முள்ளிப்பொத்தானை பிரதேசத்தின் ஒரு பகுதியில் உள்ள வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் டாக்டர்.ஹில்மி மஹ்ரூபினால் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இந்தப் பணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.    …

Read More

05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள் கையளிப்பு!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோரின் முயற்சியில், கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள் இன்று (14) பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன. மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, இந்த வழிகாட்டி நூல்களை அதிபர்களிடம் வழங்கி வைத்தனர்….

Read More

பின்தங்கிய பாடசாலைகளுக்கு புதிய கட்டிட வசதிகளை வழங்க இஷாக் ரஹுமான் எம்.பி முயற்சி!

-அஸீம் கிலாப்தீன்- அனுராதபுரம், நொச்சியாகம பிரதேச செயலகத்துக்குட்பட அ / நொச்சியாகம, அல்-ஹிக்மா பாடசாலையில் மிக நீண்டகாலமாக பாடசாலை சுற்றுமதில் சம்மந்தமாக காணப்பட்ட பிரச்சினைக்கு, அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்குகிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தீர்வினை பெற்றுக்கொடுத்தார். அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகின்ற இப்பாடாசாலைக்கும், அருகில் இருக்கின்ற சிங்கள மொழி மூலமான பாடசாலைக்குமிடையில் மிக நீண்டகாலமாகவே எல்லைப் பிரச்சனை காணப்பட்டது. இதனால் அல்-ஹிக்மா பாடசாலை…

Read More

‘வடக்கு, கிழக்கு மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தளவில் பூர்த்தி செய்வோம்” பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில், திட்டமிட்டு செயற்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பிரதியமைச்சர் அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும், விருந்துபசாரமும் பொத்தானை, கழுவாமடுவில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எனக்கு மேலதிகமாக மீன்பிடி…

Read More

தம்பிடிய, நிதுல்லகஹபிடிய வீதியோர மின்விளக்குகள் திருத்தியமைப்பு!

-றிம்சி ஜலீல்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.என்.நஸீரின் ஆலோசனையில், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களான ரஸ்லான் ரஸீன், அப்துல் ஹமீத் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, மிகநீண்ட காலமாக திருத்தியமைக்கப்படாமல் இருந்த தம்பிடிய, நிதுல்லகஹபிடிய கிராமத்தின் வீதியோர மின்விளக்குகள், மக்கள் காங்கிரஸின் குளியாப்பிட்டிய பிரதேச சபையின் உபதவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டில் நேற்று (12) திருத்தியமைக்கப்பட்டது.  

Read More

மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட மகளிர் அமைப்புக்கான கூட்டம்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட மகளிர் அமைப்பின் உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கூட்டம் நேற்று மாலை (12)  இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹம்மட் பாயிஸின் தலைமையில், கொழும்பு மாவட்ட கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மகளிர் கலந்துகொண்டனர். பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,…

Read More