Headlines

அனுராதபுரம் திறப்பனை விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கு திறப்பு விழா!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, அனுராதபுரம், திறப்பனை பிரதேச சபைக்குட்பட்ட நாச்சியாதீவு கிராமத்தின் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு, கடற்தொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மக்கள் காங்கிரஸின் தவிசாளருமாகிய அமீர் அலியினால் கடந்த சனிக்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்களான ஹிஜாஸ், நளீம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்…

Read More

உலகளாவிய தானிய கூட்டுறவு சங்கத்தின் மாநாடு இன்று அங்குரார்ப்பணம்!

-ஊடகப்பிரிவு- இந்த ஆண்டுக்கான உலகளாவிய தானிய கூட்டுறவு சங்கத்தின் மூன்று நாள் மாநாடு இன்று (08) கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்று இந்த மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 40 நாடுகளைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.  

Read More

குளியாப்பிட்டிய தொரனேகெதர வீதிகளின் மின்விளக்குகள் திருத்தியமைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குளியாப்பிடிய பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.சி.இர்பானின் நிதியொதுக்கீட்டில், மிக நீண்ட நாட்களாகத் திருத்தியமைக்கப்படாமல் இருந்த குளியாப்பிட்டிய தொரனேகெதர கிராமத்தின் வீதி மின்விளக்குகள் அண்மையில்  திருத்தியமைக்கப்பட்டன. அத்துடன், ரமழானை முன்னிட்டு குளியாப்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராமங்களினதும் தெருவிளக்குகள் வெகு விரைவில் திருத்தியமைக்கப்படும் என பிரதித்தவிசாளர் எம்.சி.இர்பான் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.  

Read More

‘சமூக நன்மை கருதியே கட்சியின் பணிகள் அமைய வேண்டும்’ அனுராதபுரத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- சமூகத்தின் நன்மைகளுக்காகவே கட்சி இருக்க வேண்டுமேயொழிய, கட்சியின் நலனுக்காக சமூகத்தை பாழ்படுத்த முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை கடந்த சனிக்கிழமை (05) திறந்துவைத்து உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கட்சியை விட சமூகத்தின்…

Read More