Headlines

பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் ஐய்யூப் அஸ்மின்

மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சீற்றம். வன்னி மாவட்ட தமிழ் மக்களினது அபிலாஷைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கருத்துக்களைக் கூற மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் பழகிக்கொள்ள வேண்டுமென்று முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு பிரதேச சபைகளை  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமை தொடர்பிலும், அந்த பிரதேச மக்கள் வழங்கிய ஆணைகளை கொச்சைப்படுத்தியும்…

Read More

‘மாகாணசபை உறுப்பினர் பதவியை தக்க வைப்பதற்காகவே ஐயூப் அஸ்மின் கூட்டமைப்புக்கு “ஜால்ரா” போடுகின்றார்’ முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் குற்றச்சாட்டு!

-ஊடகப்பிரிவு- தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பதவியை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காகவும் தனது அந்த விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவும் கூட்டமைப்பினருக்கு தொடர்ந்தும் வக்காலத்து வாங்கும் ஐயூப் அஸ்மின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்பிலும் கட்சி நடவடிக்கைகள் தொடர்பிலும் வெளியிட்டுவரும் தேவையற்ற, மலினமான கருத்துக்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும்  முன்னால் மாகாண சபை உறுப்பினரும் வன்னி மாவட்ட ஐ.தே.க முன்னணி அமைப்பாளருமான…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் எம். ஜலீலின்  கன்னி உரை!

-ஊடகப்பிரிவு- இன்று 20.04.2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இடம்பெற்றது. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி வட்டார உறுப்பினர் எம் ஜலீல் கன்னியுரை நிகழ்தினார். இங்கு உரையாற்றிய ஜலீல் ” 1994 ஆம் ஆண்டிற்குப் பிறகு எமதூருக்கு இம் முறையே பிரதேச சபை உறுப்பினர் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக இரண்டு உறுப்பினர்கள் எம் ஊருக்குக் கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். எங்களுடைய ஊரின் தேவைகளையும், குறைபாடுகளையும் இச் சபையில் மொழிவதற்கு…

Read More

தர்காநகர் வரியிறுப்பாளர் சங்கத்தினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- தர்கா நகர் -வரியிறுப்பாளர் சங்கத்தினர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்க்கிடையிலான சந்திப்பு பேருவளை நாதா கார்டனில் (17) நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்கார் உட்பட சக உறுப்பினர்கள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பில் தர்கா நகர் பிரதேசத்தில் நிலவும் வரி அறவிடுதலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், குப்பை கூழங்களை அகற்றுவதில் உள்ள குறைபாடுகள், வாசிகசாலை குறைபாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள்…

Read More

தலைமன்னார் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்த தவிசாளர் முஜாஹிர்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தன்னுடன் சேர்ந்து போட்டியிட்ட அய்மன் குரூஸை,  தலைமன்னாரிலுள்ள அவரது இல்லத்துக்கு விஜயம் செய்து, தனது வெற்றிக்கு பாடுபட்ட வேட்பாளாராகிய அய்மன் குரூஸுக்கும் அப்பிரதேச மக்களுக்கும் தனது மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இவ்விஜயத்தின் போது, பொதுமக்களை சந்தித்த தவிசாளர் முஜாஹிர், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளையும், அபிவிருத்தி சம்பந்தமான தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார், அம்மக்கள் மத்தியில் பேசிய தவிசாளர்,…

Read More

‘அமெரிக்க ஜி.எஸ்.பி (GSP) வசதியால் இலங்கைக்கு நன்மை’ அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

-ஊடகப்பிரிவு- புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி புதுப்பிக்கப்பட்ட திகதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி ஆகையினால், அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2018 ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின்னரே, இந்த வரி வசதிக்கு உரித்துடையவராகின்றனர் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கைக்கான மீள் அதிகாரம் அளிக்கப்பட்ட அமெரிக்காவின் ஜி.எஸ்.பி ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்து, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு…

Read More

குறிஞ்சிப்பிட்டிய – நூர் பாலர் பாடசாலை அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் நிதியொதுக்கீடு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின்  வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் கல்பிட்டி, குறுஞ்சிப்பிட்டி நூர் பாலர் பாடசாலைக்கு 02 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (18) நூர் பாலர் பாடசாலைக்கு சமூகமளித்த அமைப்பாளர் முஸம்மில், பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டதுடன், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார்.  

Read More

மாந்தை கிழக்குப் பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமைக்கான காரணத்தை கூறுகின்றார் தவிசாளர் தயானந்தன்!

-சைபுதீன் எம்.முகம்மட்- மாந்தை கிழக்குப் பிரதேச சபையைக் கைப்பற்றியமைக்கு கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு அமைச்சர் றிஷாட்  ஆற்றிய பணிகளே காரணமாகுமென்று புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட  மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார். சபையின் முதலாவது அமர்வு நேற்று (18) முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நான், இந்த சந்தர்ப்பத்தில், இந்த நிகழ்வில் தவிர்க்க முடியாது கலந்துகொள்ளாது வெளிநாடு…

Read More

தொழில் முயற்சியாளர்களுக்கு கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் – வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் வேண்டுகோளுக்கிணங்க,   தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்துறை சார்ந்த  கைத்தொழில் உபரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் டாக்டர். ஹில்மி மஹ்ரூப், பிரதேச செயலாளர் திருமதி. ஸ்ரீபதி, உதவித் திட்டமிடல்…

Read More

“மக்கள் சேவையில் ஈடுபடும் நாம் எமது கடமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்” தவிசாளர் தாஹிர்!

-முர்ஷித்- மக்கள் சேவையில் ஈடுபடும் நாம் நமது கடமை, பொறுப்பு என்பனவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் கூறினார். நிந்தவூர் பிரதம தபாலக தபால் அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்செல்லவுள்ள ஏ.எம்.ஏ றசீதுக்கான பிரியாவிடை வைபவமும் புதிய தபாலதிபர் யூ.எல்.எம். பைசரை வரவேற்கும் நிகழ்வும் நிந்தவூர் தபாலக மண்டபத்தில் நடைபெற்றுது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நிந்தவூர்…

Read More

07 சபைகள், 166 உறுப்பினர்கள், 05 பிரதித் தவிசாளர்கள்!!! வெற்றிக் கொடி கட்டும் மக்கள் காங்கிரஸ்!!!

–சுஐப் எம்.காசிம்– அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோற்றம் பெற்று, குறுகிய காலமாக இருந்த போதும், இக்குறுகிய காலத்தில் வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்துவரும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் கட்சிகளை விஞ்சுமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதையே அக்கட்சி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற அபார வெற்றி எடுத்துக் காட்டுகின்றது.  கைப்பற்றிய சபைகள் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு, மொத்தமாக 166 உறுப்பினர்களை பெற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உள்ளூராட்சி…

Read More

வன்னி மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் உதவியுடன் சுதந்திரக் கட்சிக்கு தவிசாளர், பிரதித் தவிசாளர் பதவிகள்!! வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!

-வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி- வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை நல்கியதாக வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையில், தமிழர் விடுதலைக் கூட்டணி தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதித் தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று…

Read More