Headlines

தலைமன்னார் பியர் பாடசாலையின் தமிழ்-சிங்கள புத்தாண்டு நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- மன்னார்/ தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தமிழ்,சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வில், மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் பிரதேசபை உறுப்பினர் நயீம், மதத் தலைவர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.      

Read More

தேசிய அருங்கலைகள் பேரவையின் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!

-ஊடகப்பிரிவு- வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட களிமண்ணினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி (23) குருணாகல் வேரகர களிமண் உற்பத்திக் கிராமத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், விஷேட அதிதியாக சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவி ஹேஷானி போகொல்லாகம உட்பட அரச அதிகாரிகள்…

Read More

சபை முதல் அமர்வில் சூடுபிடித்த தர்கா நகர் வரிப்பணம்!

-ஊடகப்பிரிவு- பேருவளை பிரதேச சபையின் முதல் அமர்வு நேற்று முன்தினம் (24) சபையில் ஒன்று கூடியது. இதன் போது, சபை தவிசாளர் இம்மாதத்துக்கான முன்மொழிவுகள் அனைத்தையும் அடுத்த மாதம் எடுத்துக் கொள்வதாகவும், தலைவரின் யோசனைகள் மாத்திரம் விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதன்போது, பேருவளை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் உரையாற்றுகையில், “நீங்கள் தர்கா நகர் வரிப்பண சங்கத்தை சந்தித்த வேளை ஒரு வாக்கு கொடுத்துவிட்டு வந்தீர்கள், 24ம் திகதி…

Read More

ரஷ்ய உலக பொருளாதார பேரவையில் (டாவோஸ்) பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு!   

-ஊடகப்பிரிவு- 2018 ஆம் ஆண்டுக்கான புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவைக்கு (St.Petersburg International Economic Forum (SPIEF)) இலங்கையை உத்தியோகபூர்வமாக அழைக்கின்றோம். எமது இந்த அழைப்பு ரஷ்ய குடியரசின் பிரதி பிரதமர் வால்டிமிரோவிச் ட்வோர்கோவிச் (Vladimirovich Dvorkovich) இனால் நேரடியாக விடுக்கப்பட்டுள்ளது என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம், இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரிமேட்டரைய் (Yuri Materiy) தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட அழைப்பின் பேரில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்…

Read More

கல்பிட்டி ஜன்னதுல் அஷாபிர் பாலர் பாடசாலைக்கு நிதியொதுக்கீடு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில், கல்பிட்டி, பெரியகுடியிருப்பு ஜன்னதுல் அஷாபிர் பாலர் பாடசாலைக்கு ரூபாய் 100,000 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நவீன கற்றல் நடவடிக்கைக்காக தொலைக்காட்சி (Television) மற்றும் பிளாஸ்டிக் கதிரைகளும் வழங்கப்பட்டுள்ளன….

Read More

வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், மைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்பின் முயற்சியில், சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, பல்துறை சார்ந்த தொழில்முயற்சியாளர்களுக்கு கைத்தொழில் உபகரணங்கள்  தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு நேற்று (24) தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் வழங்கி வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இணைப்பாளர் டாக்டர். ஹில்மி முஹைதீனினால் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.  

Read More

கல்பிட்டி பிராந்திய மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கான ஒன்றுகூடல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர்களுக்கான ஒன்று கூடல், கற்பிட்டி அமைப்பாளர் ஆப்தீன் எஹியா தலைமையில்  (20) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் தலைமையின் கீழ், கல்பிட்டி பிராந்தியத்தில் புத்தி ஜீவிகள், உலமாக்கள், இளைஞர்களைக் கொண்ட  ஓர் மத்திய குழுவை உருவாக்கி, அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக நாம், எமது நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் எமக்கு ஓர் பலமான அரசியலை செய்வதற்கான வாய்ப்பாக அது அமையும் என்ற…

Read More

 தவிசாளர் முஜாஹிர் தலைமன்னார் விகாரைக்கு நல்லெண்ண விஜயம்! 

-ஊடகப்பிரிவு- தலைமன்னாரில் அமைந்துள்ள ஶ்ரீ வாலுகாராம விகாரைக்கு விஜயம் செய்த மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், அங்கு விகாராதிபதியான ஜே.வளல்லாவிட விமலசிரி ஹிமி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, எதிர்காலத்தில் இப்பிரதேசத்தினை சிறந்ததொரு பிரதேசமாக மாற்றுவதற்கு தங்களின் உதவி ஒத்தாசைகளைத் தந்துதவ வேண்டுமெனவும் விகாரதிபதியிடம் வேண்டிக்கொண்டார். விகாராதிபதி ஜே.வளல்லாவிட விமலசிரி ஹிமி அவர்கள்  கருத்து தெரிவிக்கையில்,  தவிசாளர் முஜாஹிரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தன்னாலும், இப்பிரதேச மக்களாலும் முடியுமான உதவி ஒத்தாசைகளை நிச்சயம் வழங்குவோம் என்று உறுதியளித்தார்.

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கல்பிட்டி, புதுக்குடியிருப்பு அல்/நுஹ்மா பாலர் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கல்பிட்டி, புதுக்குடியிருப்பு அல்/நுஹ்மா பாலர் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசின் பேரில், அமைச்சரினால் ரூபாய் 78,000 நிதி வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட இந்த நிதியிலிருந்து பாலர் பாடசாலையின் மின்சுற்று வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மின் விசிறிகளும் வழங்கப்பட்டுள்ளமை…

Read More

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்துப் பேச்சு!

அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் நீண்ட நேரம் கருத்துப்பரிமாற்றம்… -ஊடகப்பிரிவு- கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள், மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு, இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை – மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் அவர்களை இன்று காலை (25) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் சந்தித்த…

Read More

குருநாகலில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வுகள்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, 03வது முறையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில், புது வருட நிகழ்வுகள் நேற்று முன்தினம் (23)மல்கடுவாவ மாநகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், குருணாகல் மாநகர சபை உறுப்பினருமான அசார்தீன் மொய்னுதீன் தலைமையில், பிரதம அதிதியாக  வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க மற்றும் குருணாகல் மாநகரசபை முதல்வர் துஷார…

Read More

“சுதந்திர வர்த்தக உடன்பாடு, சீன – இலங்கை வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான பிரதான படிக்கல்லாக அமையுமெனவும், இலங்கையுடன் யுன்னான் மாநிலமும் அதேபோன்று சீனாவும் சாதகமான நவீன வர்த்தகத்துக்கு வழி திறக்குமெனவும், யுன்னான் மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் ( Gao Shuxun ) தெரிவித்தார். யுன்னான் மாநில அரசாங்கத்தின் கம்யுனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களில் ஒருவரும், யுன்னான் அரசின் ஆலோசகர்களில் ஒருவருமான அவர், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, அவரது அமைச்சில் நேற்று (23) சந்தித்துப்…

Read More